வெள்ளி, 16 பிப்ரவரி, 2024

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

 Published February 16, 202, விடுதலை நாளேடு

பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது.
பழனி அருகே பொருந்தல் பகுதியில் தொல்லியல் ஆய் வாளர் நாராயணமூர்த்தி வழி காட்டுதலின்படி, பழனியாண் டவர் மகளிர் கல்லூரி வர லாற்றுத் துறைத் தலைவர் ஜெயந்திமாலா, பேராசிரியர் கள் தங்கம், ராஜேஸ்வரி தலை மையிலான மாணவிகள் கள ஆய்வுமேற்கொண்டனர். இதில், 1000ஆண்டுகள் பழை மையான தடுப்பணை கண்டறி யப்பட்டது.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது:
சுருளி ஆறு, சண்முக நதியின்கிளை ஆறாகும். இதை சுள்ளியாறு என்றும் அழைக் கின்றனர். இந்த ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையில் பொருந் தல் ஆற்றுக்கு மேற்குப் பகுதி யில் உற்பத்தியாகி, காட்டாறாக சில கி.மீ. தொலைவு வடக்கு நோக்கிப்பாய்ந்து, பச்சையாற் றில் கலக்கிறது.
இடையில் இந்த சுருளி ஆறு சுண்டக்காய்தட்டி கரட் டுக்கு கிழக்கே பாய்கிறது. அந்த இடத்தில் ஆற்றின் போக்கை மாற்றும் வகையில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. ஆற்றின் கிழக்குக் கரையில் 2 கி.மீ. தொலைவுக்கு இந்த அணை கட்டப்பட்டிருந்ததை, அணை யின் சிதைந்துபோன இடிபாடு களில் இருந்து அறிய முடிகிறது.
ஆற்றின் கிழக்கு கரைநெடு கிலும் ஓரமாக தடுத்து, அணை கட்டியதன் மூலம் ஆறு நேராக வடக்கே 2 கி.மீ. தொலைவு பாய்ந்து, அம்மாபட்டியான் குளத்திலும், குமார சமுத்திரக் குளத்திலும் கலப்பதால் அப் பகுதி விளைநிலங்களுக்கு பாசன வசதியை ஏற்படுத்து கிறது.

ஆற்றின் கிழக்குப் பகுதியில் அடுத்தடுத்து 3 குளங்கள் இருப்பதால், ஆற்றில் வரும் மிகையான வெள்ளம் இந்த தடுப்பணையில் அமைக்கப் பட்ட மதகுகள் மூலம் 3 குளங் களையும் நிரப்பிவிட்டு, இறு தியாக சண்முகநதியில் கலக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட் டிருக்க வேண்டும்.
காலப்போக்கில் காட் டாற்று வெள்ளம் தடுப்பணை யையும், மதகுகளையும் உடைத் தெறிந்ததை அணையின் சிதைவுகளில் இருந்து அறிய முடிகிறது. ஏறக்குறைய 2 கி.மீ. தொலைவுக்குக் கட்டப்பட்ட இந்த தடுப்பணை, தற்போது வெறும் 50 மீட்டர் தொலைவு மட்டுமே காணப்படுகிறது.
இதை தடுப்பணை என்று சொல்வதைவிட, தடுப்புக் கரை என்று சொல்வதே பொருத்த மானது. இந்த தடுப்பணை மிகப் பெரிய பாறாங்கற்களைக் கொண்டும், செங்கற்களைக் கொண் டும் கட்டப்பட்டுள்ளது. இந்த செங்கற்கள் 10ஆம் நூற் றாண்டு கட்டுமானங்களில் இடம் பெற்றிருப்பதால், தடுப் பணை கி.பி.10ஆம் நூற்றாண் டில் கட் டப்பட்டிருக்கலாம்.

இதன் மூலம், இந்த தடுப்பணை 1,000 ஆண்டுகள் பழைமையானது என்பதை அறிய முடிகிறது. அணையின் மேற்புறம் காரைப் பூச்சு உள் ளது. பூச்சு விலகாமல் இருக்க வும், கரையின் மேற்புறப் பிடி மானத்துக்காகவும் இரும்பைக் காய்ச்சி ஊற்றிய தடயம் தென் படுகிறது. இது ஒரு புதுமையான கட்டுமான வகை எனலாம்.
இந்த தடுப்பணையின் மூலம் இப்பகுதியில் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் வேளாண்மை, பாசனத் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள முடிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

செவ்வாய், 30 மே, 2023

தமிழ்நாட்டில் ஓலைச்சுவடிகளில் எழுதும் பல்வேறு எழுத்தாணிகள் கண்டுபிடிப்பு

 

 7

மதுரை மே 25 - தமிழர்கள் ஓலைச் சுவடியில் எழுதப் பயன்படுத்திய வெண்கலம், இரும்பாலான கூரெழுத்தாணி, வாரெழுத்தாணி, மடக்கெழுத் தாணிகள் மதுரை, நெல்லை, கன்னியா குமரி மாவட் டங்களில் கிடைத்துள்ளன. 

தமிழர்கள் தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ், யானைத் தந்தம், செம்பு, வெள்ளி, தங்கம், கல் முதலியவற்றில் பண்பாட்டையும், வரலாற்றையும் எழுதி தொன்மையான அறிவு மரபு களை பாதுகாத்து வந்துள்ளனர்.

ஓலையில் எழுதி வைக்கும் பழக்கமே பெரும்பாலும் இருந்துள் ளது. ஓலை யில் எழுதுவதற்கு எழுத்தாணியைப் பயன்படுத்தி உள்ளனர். தமிழர்கள் ஓலையில் எழுத இரும்பு, வெள்ளி, தங்கத் தாலான எழுத் தாணிகளைப் பயன்படுத்தியுள்ளனர்.

ஓலைச்சுவடிகளை சேகரித்துப் பதிப்பித்து வரும் தமிழக அரசின் திருக்கோயில் ஓலைச் சுவடிகள் பாது காப்பு பராமரிப்பு நூலாக்கத் திட்டப் பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாள ரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தின் சுவடியியல் துறைப் பேராசிரியரு மான சு.தாமரைப் பாண்டியன் இந்த எழுத்தாணிகளைக் கண்டு பிடித்துள்ளார்.  

மதுரையில் சிவக்குமார், திருநெல் வேலியில் ராமலிங்கம், கன்னியா குமரியில் கணேசன் ஆகியோரது வீடுகளில் ஓலைச் சுவடிகளைத் தேடும் போது இந்த அரிய எழுத்தாணிகள் கிடைத்துள்ளன.

இதுதொடர்பாக சு.தாமரைப் பாண்டியன் கூறியதாவது:

தமிழர்கள் ஓலையில் எழுதும் மரபு சங்க காலத்திலேயே இருந் துள்ளது. தமிழர்களின் தொன்மை அறிவு தொழில் நுட்பக் கருவி யான எழுத்தாணிகளையும் பாது காப்பது அவசியம். அகநானூறு, மணி மேகலை, சீவக சிந்தாமணி, பெருங் கதை, தமிழ்விடு தூது ஆகிய நூல் களில் ஓலையில் எழுதிய குறிப்புகள் காணப் படுகின்றன.

மந்திர ஓலை, சபையோலை, அறை யோலை இறையோலை, தூதோலை, பட்டோலை, ஆவண ஓலை, வெள்ளோலை, பொன் னோலை, படியோலை என்று அழைக் கப்பட்டன. ஓலை களைப் பாதுகாக் கும் இடம் ஆவணக் களரி என்றழைக் கப்பட்டது. 

எழுத்தாணியால் ஓலையில் எழு துவது கடினமான செயல் என்பதை ‘ஏடு கிழியாதா, எழுத் தாணி ஒடியாதா / வாத்தியார் சாகானா வயிற்றெரிச்சல் தீராதா’ எனும் தனிப்பாடல் வரிகள் குறிக்கின்றன.

பொன்னாலான எழுத்தாணி இருந்ததை சீவக சிந்தாமணி மூலம் அறிய முடிகிறது.

பழந்தமிழர்கள் பயன்படுத்திய குண்டெழுத்தாணி, கூரெழுத் தாணி, வாரெழுத்தாணி, மடக் கெழுத்தாணி வகை கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஆனால், பெருங் கதையில் குறிப்பிடும் வெட் டெழுத்தாணி மட்டும் இதுவரை எங்குமே கிடைக்கவில்லை. 

ஓலைச்சுவடிகளைத் திரட்டி நூலாக் குவதுபோல் மரபு தொழில் நுட்பக் கருவிகளான எழுத்தாணிகளைப் பாதுகாப் பதும் அவசியம் என்றார்.

எழுத்தாணி வகைகள்: 

குண்டெழுத்தாணியை குழந்தைகள் எழுதிப் பழக பயன்படுத் துவர். இது அதிக நீளமின்றி எழுத்தாணியின் கொண் டைப் பகுதி கனமாகவும் குண் டாகவும், முனைப் பகுதியின் கூர்மை குறைவாகவும் காணப் படும். இதில் எழுதும் எழுத்துகள் பெரிதாக இருக்கும்.

கூரெழுத்தாணியை நன்கு கற்றுத் தேர்ந்த கல்வியாளர்கள் பயன்படுத்துவர். இதன் முனைப் பகுதி கூர்மையாக இருக்கும். எழுத்துகள் சிறியதாக இருக்கும். ஓலையின் ஒரு பத்தியில் 18 வரி கள்வரை எழுதலாம். வாரெழுத் தாணிய£னது சற்று நீளமாக இருக்கும். 

கொண்டைக்குப் பதில் சிறிய கத்தியும், கீழ்ப் பகுதியில் கூர்மை யாக இருக்கும். கத்தி, ஓலையை வாருவதால் வாரெழுத்தாணி என்றானது. மடக் கெழுத்தாணியானது, ஒருமுனையில் கத்தியும், மறு முனையில் கூராகவும் உள் ளதை ஒரு மரக் கைப்பிடிக்குள் மடக்கி வைப்பதால் மடக் கெழுத்தாணி என்றானது.

தென்காசி அருகே பத்தாம் நூற்றாண்டு தூம்பு கல்வெட்டு கண்டுபிடிப்பு

 

 4

தென்காசி, மே 25- தென்காசி அருகே வட்டெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தூம்பு கல்வெட்டை தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தி,  தென் பொதிகை குடும்பன் ஆகியோர் கொண்ட குழுவினர் கண்டறிந்தனர். அது பற்றிய விவரம் வருமாறு:

தென்காசியை அடுத்துள்ள கீழப்புலியூர் குளத்தில் நீர் வற்றியதை அடுத்து குளத்தில் இருக்கும் மதகுக்கு அருகே குளத்தின் உள்ளே ஒரு தூம்பு  இருப்பதும் அதில் ஒரு வட்டெழுத்து  கல் வெட்டு இருப்பதும் கண்டறியப் பட்டது.  தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி,  தென்பொதிகை குடும்பன்,  பி. கே. கோபால் குமார் மற்றும் ராஜசேகரன் உதவியோடு ஆய்வு செய்தனர்.  இதுகுறித்து நாராயணமூர்த்தி மற்றும் குழுவினர் கூறுகையில்,  புதிதாக தூம்பில் கண்டறியப்பட்ட வட்டெழுத்து  கல்வெட்டு பொது ஆண்டிற்குப் பின் பத்தாம் நூற்றாண்டை சேர்ந்தது.  

பாண்டிய பேரரசர் மூன்றாம் ராஜ சிம்ம பாண்டியரின் 14ஆம் ஆட்சி ஆண்டில் கி.பி 914இல் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. தென் வார நாட்டுக் கிழவன் அமைத்துக் கொடுத் ததை இக்கல்வெட்டு கூறுகிறது. 

மொத்தம் 18 வரிகளில் கல்வெட்டு பொறிக்கப்பட் டுள்ளது. பொதுவாக வேளாண் மைக்காக ஏரி குளங்கள் வெட்டு வதும் நீர் மேலாண்மைக்காக அதில் தூம்பு  அமைத்து அது பற்றிய செய்திகளை கல்லில் வெட் டுவதும் பண்டைய தமிழ்நாட்டில் நடை முறையில் இருந்த பழக்கம். 

இதையொட்டி தாம் அமைத்துக் கொடுத்த மதகு கால் தூம்பில் எட்டி மாறன்  என்பவர் கல்வெட்டிக் கொடுத்துள்ளார்.

எட்டிமாறன் அமைத்த தூம்பில் இருந்து குளக்கரை மதகு 75 அடி தூரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 75 சென்டி மீட்டர் இடைவெளி உள்ள குமிழி தூண்கள் இரண்டும் அய்ந்து அடி அகலம் கொண்ட மதகு காலும்,  கரை மதகை இணைக்கின்றன.  

19ஜ்13ஜ்3.5 சென்டிமீட்டர் அளவு கொண்ட சுட்ட செங்கற்களால் தூம் பின் அடிப்பகுதியும் காலும் கட்டப் பட்டுள்ளன.

சுண்ணாம்புக் காரை கொண்டு அமைக்கப்பட்டுள்ள மதகு காலும் தூம்பின் அடிப்பகுதியும் மிகுந்த பலத்துடன் எத்தகைய  வெள்ளத் தையும் பேரழிவையும் எதிர் கொள் ளும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன.  இன்று வரை பல வெள்ளங்களையும்,   இயற்கை மழை பேரிடர்களையும் சந்தித்த இத்த தூம்பும் காலும் சிதையாமல் இருப்பதில் இருந்தே தமிழர்களின் கட்டுமான அறிவியலை உணர முடிகிறது.

தூம்பை அமைத்த இந்த எட்டி மாறன் பற்றிய பிற செய்திகளை நாம் அறிய முடிய வில்லை.  எனினும் இவர் ராஜசிம்ம பாண்டியரின் தாத்தாவான சீமாறன்,  சீவல்லபன் ஆட்சிக் காலத் தில் பெரும் புகழோடு வாழ்ந்த அரசு அதிகாரியான எட்டிசாத்தன் என்ப வரின் வழித் தோன்றலாக இருக்கலாம் என்பதை யூகிக்க முடிகிறது.

எட்டி சாத்தன் தென்பாண்டி நாட்டில் கிழவன் ஏரி என்ற பெயரில் பல ஏரிகளையும் குளங் களையும் அமைத்தவர் என்பது பல கல்வெட் டுக்கள் மூலம் அறிய முடிகிறது.

அதே போன்று இந்த கீழப்புலியூர் குளத்துக்கு தூம்பும்.  காலும் அமைத் தவர் எட்டி மாறன் என்ற தென் வார நாட்டுக் கிழவன் என்று கல்வெட்டு கூறுவதால் இவர்கள் வழி வழியாக தென் பாண்டி நாட்டில் வேளாண் மைக்காக குளங்கள் ஏரிகள் வெட்டியும் மதகு தூம்புகள் அமைத்து கொடுத்தும் வாழ்ந் தார்கள் என்று கருதலாம் என தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தி மற்றும் குழுவினர் தெரிவித்தனர்.

திங்கள், 20 மார்ச், 2023

10ஆம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியர்கள் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு


மதுரை, செப்.20   திருச்சுழி அருகே 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. நீர்நிலைகளை வணிகர்கள் பேணிக் காத்த தகவல், இந்த கல்வெட்டு மூலம் தெரிய வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள எஸ்பிகே கல்லூரி வரலாற் றுத்துறை பேராசிரியர் விஜயராகவன் மற்றும் தொல்லியல் மாணவர் ராஜ பாண்டி ஆகியோர், திருச்சுழி சுற்று வட்டாரத்தில் கள ஆய்வு செய்தனர். மூலக்கரைப்பட்டி என்னும் ஊரில், கண்மாய்க் கரையோரமாக கல்வெட்டு ஒன்றை கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

 மூலக்கரைப்பட்டி கிராமத்தில் கண்மாய்க் கரையோரம் 4 அடி உயர மும் ஒன்றரையடி அகலமும் கொண்ட ஒரு கல்வெட்டை கண்டுபிடித்தோம். அதன் மேற்புறம் 13 வரிகள், வலதுபுறம் 7 வரிகள் என இருபக்கங்களிலும் எழுத்துகள் தென்பட்டன. இவற்றை ஓய்வு பெற்ற தொல்லியல் இயக்குநரும், பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மய்ய செயலாளருமான சாந்தலிங்கத் தின் உதவியோடு படித்துப் பார்த்தோம். கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு, இக்கல்வெட்டு கி.பி10 அல்லது 11ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பாண்டியர் காலத்தை சேர்ந்தது என தெரிய வருகிறது.

இக்கல்வெட்டு இருந்த கண்மாய் கரையில், மழை காலங்களில் நீர்வரத்து அதிகரித்து உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை, அப்பகுதியைச் சேர்ந்த வணிக ரான பெற்றான் கழியன் என்பவர் சீரமைத்து கொடுத்துள்ளார். பின்னர் மீண்டும் கரையில் உடைப்பு ஏற்பட் டுள்ளது. 

இதையடுத்து, வணிகரின் மகளான கோதிலால் நங்கை என்பவர், கற்களைக் கொண்டு உடைப்பு ஏற் பட்ட கரையை சீரமைத்து, அதில் இக் கல்வெட்டையும் வைத்துள்ளார் என தெரிய வருகிறது. நீரின் முக்கியத்து வத்தை அறிந்த, இப்பகுதியைச் சேர்ந்த வணிகர்களும், நீர்நிலைகளை பேணி பாதுகாத் துள்ளனர் என்பதனை இதன் மூலம் அறியலாம். 

இவ்வாறு தெரிவித்தனர்


வியாழன், 9 மார்ச், 2023

மனித உருவத்துடன் பழங்கால செப்பு நாணயம் கண்டுபிடிப்பு

 

சேலம்,அக்.9- மதுரையை ஆண்ட அரசி மீனாட்சி காலத்தில் வெளியிடப்பட்ட மனித உருவம் பொறிக்கப்பட்ட பழங் கால செப்பு நாணயம் கிடைத்திருப்பதாக சேலம் பாராமஹால் நாணயவியல் சங்க ஆய்வாளர் தெரிவித்துள்ளார். சேலம் பாராமஹால் நாணயவியல் சங்க வர லாற்று ஆய்வாளர்கள், நாடு முழுவதும் இருந்து பழங்கால நாணயங்களை சேகரித்து வருகின்றனர்.

சமீபத்தில் கருநாடகா மாநிலத்தில் நடந்த நாணயவியல் கண்காட்சியில் மதுரையை ஆண்ட அரசி மீனாட்சி காலத்தில் வெளியிடப்பட்ட செப்பு நாணயங்களை குஜராத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் காட்சிப்படுத்தியிருந் தனர். அந்த நாணயங்களை சேலம் பாராமஹால் நாணயவியல் சங்க வர லாற்று ஆய்வாளர் சுல்தான் வாங்கி வந்துள்ளார். வழக்கமாக அக்கால மன் னர்கள் வெளியிட்ட செப்பு நாணயங் களில் காளை, பசு, தேர், கப்பல் போன்ற உருவங்கள் இருந்தன.

ஆனால், இந்த செப்பு நாணயத்தில், மனித உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.  இத்தகைய சிறப்பு வாய்ந்த செப்பு நாணயம் குறித்து வரலாற்று ஆய்வாளர் சுல்தான் கூறியதாவது: கடந்த 30 ஆண்டுகளாக பழங்கால நாணயங்களை சேகரித்து வருகிறோம். இதுவரையில் எங்களுக்கு கிடைக்கப்பெற்ற நாண யங்களில் மனித உருவம் தவிர பிற உருவங்களே இருந்துள்ளன.

அதிலும் தமிழ் மொழி பொறிக்கப்பட்ட செப்பு நாணயங்களில், மனித உருவம் கிடைக்கப்பெற்றதில்லை. முதன்முறை யாக இந்த நாணயம் கிடைத்திருக்கிறது. மதுரையை ஆண்ட விஜயரங்க சொக்க நாத நாயக்கர் 1731இல் காலமானார். அவருக்கு பிறகு அவரது மனைவி மீனாட்சி 1732முதல் 1756வரை ஆட்சி செய்தார். இந்தவகையில்  மதுரையை ஆண்ட அரசி மீனாட்சி இந்த நாணயத்தை வெளியிட்டுள்ளார்.

‘‘தமிழனின் விஞ்ஞான ஊன்று வேக விசை பயண வண்டி’’ நாணயத்தில் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்த பயண வண்டியில் மனித உருவம், ஊன்றை பிடித்தபடி இருக்கிறது. இந்த செப்பு நாணயம் மிகவும் அரிதாகும். காரணம், இதுவரையில் வட இந்தியாவிலும், தென் னிந்தியாவிலும் கண்டெடுக்கப்பட்ட பெரும்பாலான செப்பு நாணயங்களில் மனித உருவம் இல்லை.

ஆனால், மதுரையை ஆட்சி புரிந்த மீனாட்சி, மனித உருவத்தில் நாண யத்தை வெளியிட்டிருக்கிறார். கோயில் சிற்பங்களில் இத்தகைய உருவங்கள் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோன்ற உருவத்தில் நாணயத் தையும் அக்காலத்தில் வெளியிட்டுள் ளனர். தமிழ்நாட்டில் பல்வேறு இடங் களில் நடக்கும் நாணயவியல் கண் காட்சிகளில் இந்த செப்பு நாணயத்தை காட்சிப்படுத்தவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

சென்னிமலை அருகே கொடுமணலில் கிடைத்த பழங்கால வரலாற்று சின்னங்கள்

 

ஈரோடு, ஜன.1 கொடுமணலில் கிடைத்த பழங்கால வரலாற்று சின்னங்கள் குறித்து வருங்கால சந்ததி யினர் தெரிந்து கொள்ளும் வகையில் கொடுமணலில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கொடுமணலில் கிடைத்த பழங்கால வரலாற்று சின்னங்கள் குறித்து வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில் கொடுமணலில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றங்கரை பகுதியில் உள்ளது கொடுமணல் கிராமம். இங்கு சுமார் 2 ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருந்ததுடன் பெரிய அளவில் தொழில்துறைகளும், வியாபாரங்களும் இருந்ததற்கான ஆதாரங்களும் கிடைத்ததால் 1981-ஆம் ஆண்டு முதல் கொடுமணல் பகுதியில் இதுகுறித்து பல்வேறு ஆய்வு பணிகள் நடைபெற்று வந்தது. பழங்கால பொருட்கள் இதில் முக்கியமாக தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பில் அதன் திட்ட இயக்குநர் ஜெ.ரஞ்சித் தலைமையில் 2020-ஆம் ஆண்டு மே மாதத்தில் தொடங்கப்பட்ட 8-ஆவது அகழாய்வின் போது தான் ஏராளமான பழங்காலப் பொருட்கள் கிடைத்தது. இந்த அகழாய்வில் தொழிற்கூடங்கள் மற்றும் கொல்லுப்பட்டறைகள் இருந்த பகுதி, பழங்கால ஈமச்சின்னங்கள் எனப்படும் கல்லறைகள் இருந்த பகுதி, கிணற்று படிக்கட்டுகள் ஆகியவை கண்டு பிடிக்கப்பட்டது. 

மேலும் ஏராளமான முதுமக்கள் தாழிகள், கத்திகள், ஈட்டிகள், ஆணிகள் போன்ற இரும்பு பொருட்கள், நூற்றுக்கணக்கான கல்மணிகள், வளையல்கள் உள்ளிட்ட அணிகலன்கள், நாணயங்கள், தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் என ஏராளமான பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டது.


செய்யாறு அருகே நெல்வாய் கிராமத்தில் 9ஆம் நூற்றாண்டு சிற்பங்கள் கண்டெடுப்பு

 

செய்யாறு, நவ.6 திருவண்ணா மலை மாவட்டம், செய்யாறு தாலுகா நெல்வாய் கிராமத்தில் வரலாற்று ஆய்வாளர் எறும்பூர் செல்வக்குமார் ஆய்வு நடத்தியதில், வயல்வெளி நடுவில் செல்லியம்மன் கோயில் அருகே புதைந்து கிடந்த அய்யனார் சிலை, கருடாழ்வார் சிற்பம் பொறித்த கல்தூண், ஸ்தூபக் கல், சந்து தெருவில் கோமாரிக்கல் ஆகியவற்றை கண்டெடுத்தார். 

இதுகுறித்து செல்வகுமார் கூறியதாவது: அய்யனார் சிற்பம் 34 சென்டிமீட்டர் உயரமும், 22 சென் டிமீட்டர் அகலமும் உடையது. அய்யனாரின் தலையை அடர்ந்த ஜடா பாரம் அலங்கரிக்கிறது. காதில் பத்திர குண்டலமும், கழுத்தி லும் கால்களிலும் அணிகலன்கள் காணப்படுகின்றன.  

அதேபோல் கல் தூணில் கருடாழ்வார் சிற்பம் 58 சென்டி மீட்டர் உயரமும், 28 சென்டிமீட்டர் அகலமும் உள்ளது. ஸ்தூபக்கல் கலை நயத்துடன் உள்ளது. ஊரின் மய்யப்பகுதி யான சந்து தெருவில் கோமாரிக்கல் அல் லது மந்தை வெளிகல் என்று அழைக்கப் படும் பழைமையான கல் கண்டெடுக்கப் பட்டது. இக்கல்லின் உயரம் 60 சென்டி மீட்டர், அகலம் 30 சென்டி மீட்டர். தற்போது பொன் னியம்மன் கோயில் கட்டப்பட்டி ருக்கும் இடத்தில் ஏற்கெனவே லட்சுமி நாராயணன் கோயில் இருந்த தாகவும் கூறப்படுகிறது. கோயில் முழுவதும் காணாமல் போன நிலையில் அதனுடைய எச் சங்கள் காணப்படுவதால் பொது மக்கள் கூறும் தகவல் உறுதி யாகிறது.

இவ்வூர் முன்னோர் களால் விஜய பூபதி நகரம் என்று அழைக்கப்பட்டதாக பெரியவர்கள் தெரிவிக் கின் றனர். இவ்வூரில் ஏற்கெனவே கண்டெடுத்த மூத்த தேவி சிற்பம், சாமுண்டி சிற்பம் உள்ளிட்ட அனைத்தும் கி.பி. 9ஆம் நூற்றாண் டிற்கும் 10ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதாக இருக்க லாம். சிற்பங்களின் கலை நுணுக்கங்களை பார்க்கும் போது பல்லவர்கள் அல் லது சோழர் காலத்தை சேர்ந்ததாக இருக்க வாய்ப்புள்ளது. தொல்லியல் ரீதியாக ஆய்வு மேற்கொண்டால் பல அரிய தகவல்கள் கிடைக்க வாய்ப் புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...