செவ்வாய், 30 மே, 2023

தமிழ்நாட்டில் ஓலைச்சுவடிகளில் எழுதும் பல்வேறு எழுத்தாணிகள் கண்டுபிடிப்பு

 

 7

மதுரை மே 25 - தமிழர்கள் ஓலைச் சுவடியில் எழுதப் பயன்படுத்திய வெண்கலம், இரும்பாலான கூரெழுத்தாணி, வாரெழுத்தாணி, மடக்கெழுத் தாணிகள் மதுரை, நெல்லை, கன்னியா குமரி மாவட் டங்களில் கிடைத்துள்ளன. 

தமிழர்கள் தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ், யானைத் தந்தம், செம்பு, வெள்ளி, தங்கம், கல் முதலியவற்றில் பண்பாட்டையும், வரலாற்றையும் எழுதி தொன்மையான அறிவு மரபு களை பாதுகாத்து வந்துள்ளனர்.

ஓலையில் எழுதி வைக்கும் பழக்கமே பெரும்பாலும் இருந்துள் ளது. ஓலை யில் எழுதுவதற்கு எழுத்தாணியைப் பயன்படுத்தி உள்ளனர். தமிழர்கள் ஓலையில் எழுத இரும்பு, வெள்ளி, தங்கத் தாலான எழுத் தாணிகளைப் பயன்படுத்தியுள்ளனர்.

ஓலைச்சுவடிகளை சேகரித்துப் பதிப்பித்து வரும் தமிழக அரசின் திருக்கோயில் ஓலைச் சுவடிகள் பாது காப்பு பராமரிப்பு நூலாக்கத் திட்டப் பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாள ரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தின் சுவடியியல் துறைப் பேராசிரியரு மான சு.தாமரைப் பாண்டியன் இந்த எழுத்தாணிகளைக் கண்டு பிடித்துள்ளார்.  

மதுரையில் சிவக்குமார், திருநெல் வேலியில் ராமலிங்கம், கன்னியா குமரியில் கணேசன் ஆகியோரது வீடுகளில் ஓலைச் சுவடிகளைத் தேடும் போது இந்த அரிய எழுத்தாணிகள் கிடைத்துள்ளன.

இதுதொடர்பாக சு.தாமரைப் பாண்டியன் கூறியதாவது:

தமிழர்கள் ஓலையில் எழுதும் மரபு சங்க காலத்திலேயே இருந் துள்ளது. தமிழர்களின் தொன்மை அறிவு தொழில் நுட்பக் கருவி யான எழுத்தாணிகளையும் பாது காப்பது அவசியம். அகநானூறு, மணி மேகலை, சீவக சிந்தாமணி, பெருங் கதை, தமிழ்விடு தூது ஆகிய நூல் களில் ஓலையில் எழுதிய குறிப்புகள் காணப் படுகின்றன.

மந்திர ஓலை, சபையோலை, அறை யோலை இறையோலை, தூதோலை, பட்டோலை, ஆவண ஓலை, வெள்ளோலை, பொன் னோலை, படியோலை என்று அழைக் கப்பட்டன. ஓலை களைப் பாதுகாக் கும் இடம் ஆவணக் களரி என்றழைக் கப்பட்டது. 

எழுத்தாணியால் ஓலையில் எழு துவது கடினமான செயல் என்பதை ‘ஏடு கிழியாதா, எழுத் தாணி ஒடியாதா / வாத்தியார் சாகானா வயிற்றெரிச்சல் தீராதா’ எனும் தனிப்பாடல் வரிகள் குறிக்கின்றன.

பொன்னாலான எழுத்தாணி இருந்ததை சீவக சிந்தாமணி மூலம் அறிய முடிகிறது.

பழந்தமிழர்கள் பயன்படுத்திய குண்டெழுத்தாணி, கூரெழுத் தாணி, வாரெழுத்தாணி, மடக் கெழுத்தாணி வகை கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஆனால், பெருங் கதையில் குறிப்பிடும் வெட் டெழுத்தாணி மட்டும் இதுவரை எங்குமே கிடைக்கவில்லை. 

ஓலைச்சுவடிகளைத் திரட்டி நூலாக் குவதுபோல் மரபு தொழில் நுட்பக் கருவிகளான எழுத்தாணிகளைப் பாதுகாப் பதும் அவசியம் என்றார்.

எழுத்தாணி வகைகள்: 

குண்டெழுத்தாணியை குழந்தைகள் எழுதிப் பழக பயன்படுத் துவர். இது அதிக நீளமின்றி எழுத்தாணியின் கொண் டைப் பகுதி கனமாகவும் குண் டாகவும், முனைப் பகுதியின் கூர்மை குறைவாகவும் காணப் படும். இதில் எழுதும் எழுத்துகள் பெரிதாக இருக்கும்.

கூரெழுத்தாணியை நன்கு கற்றுத் தேர்ந்த கல்வியாளர்கள் பயன்படுத்துவர். இதன் முனைப் பகுதி கூர்மையாக இருக்கும். எழுத்துகள் சிறியதாக இருக்கும். ஓலையின் ஒரு பத்தியில் 18 வரி கள்வரை எழுதலாம். வாரெழுத் தாணிய£னது சற்று நீளமாக இருக்கும். 

கொண்டைக்குப் பதில் சிறிய கத்தியும், கீழ்ப் பகுதியில் கூர்மை யாக இருக்கும். கத்தி, ஓலையை வாருவதால் வாரெழுத்தாணி என்றானது. மடக் கெழுத்தாணியானது, ஒருமுனையில் கத்தியும், மறு முனையில் கூராகவும் உள் ளதை ஒரு மரக் கைப்பிடிக்குள் மடக்கி வைப்பதால் மடக் கெழுத்தாணி என்றானது.

தென்காசி அருகே பத்தாம் நூற்றாண்டு தூம்பு கல்வெட்டு கண்டுபிடிப்பு

 

 4

தென்காசி, மே 25- தென்காசி அருகே வட்டெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தூம்பு கல்வெட்டை தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தி,  தென் பொதிகை குடும்பன் ஆகியோர் கொண்ட குழுவினர் கண்டறிந்தனர். அது பற்றிய விவரம் வருமாறு:

தென்காசியை அடுத்துள்ள கீழப்புலியூர் குளத்தில் நீர் வற்றியதை அடுத்து குளத்தில் இருக்கும் மதகுக்கு அருகே குளத்தின் உள்ளே ஒரு தூம்பு  இருப்பதும் அதில் ஒரு வட்டெழுத்து  கல் வெட்டு இருப்பதும் கண்டறியப் பட்டது.  தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி,  தென்பொதிகை குடும்பன்,  பி. கே. கோபால் குமார் மற்றும் ராஜசேகரன் உதவியோடு ஆய்வு செய்தனர்.  இதுகுறித்து நாராயணமூர்த்தி மற்றும் குழுவினர் கூறுகையில்,  புதிதாக தூம்பில் கண்டறியப்பட்ட வட்டெழுத்து  கல்வெட்டு பொது ஆண்டிற்குப் பின் பத்தாம் நூற்றாண்டை சேர்ந்தது.  

பாண்டிய பேரரசர் மூன்றாம் ராஜ சிம்ம பாண்டியரின் 14ஆம் ஆட்சி ஆண்டில் கி.பி 914இல் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. தென் வார நாட்டுக் கிழவன் அமைத்துக் கொடுத் ததை இக்கல்வெட்டு கூறுகிறது. 

மொத்தம் 18 வரிகளில் கல்வெட்டு பொறிக்கப்பட் டுள்ளது. பொதுவாக வேளாண் மைக்காக ஏரி குளங்கள் வெட்டு வதும் நீர் மேலாண்மைக்காக அதில் தூம்பு  அமைத்து அது பற்றிய செய்திகளை கல்லில் வெட் டுவதும் பண்டைய தமிழ்நாட்டில் நடை முறையில் இருந்த பழக்கம். 

இதையொட்டி தாம் அமைத்துக் கொடுத்த மதகு கால் தூம்பில் எட்டி மாறன்  என்பவர் கல்வெட்டிக் கொடுத்துள்ளார்.

எட்டிமாறன் அமைத்த தூம்பில் இருந்து குளக்கரை மதகு 75 அடி தூரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 75 சென்டி மீட்டர் இடைவெளி உள்ள குமிழி தூண்கள் இரண்டும் அய்ந்து அடி அகலம் கொண்ட மதகு காலும்,  கரை மதகை இணைக்கின்றன.  

19ஜ்13ஜ்3.5 சென்டிமீட்டர் அளவு கொண்ட சுட்ட செங்கற்களால் தூம் பின் அடிப்பகுதியும் காலும் கட்டப் பட்டுள்ளன.

சுண்ணாம்புக் காரை கொண்டு அமைக்கப்பட்டுள்ள மதகு காலும் தூம்பின் அடிப்பகுதியும் மிகுந்த பலத்துடன் எத்தகைய  வெள்ளத் தையும் பேரழிவையும் எதிர் கொள் ளும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன.  இன்று வரை பல வெள்ளங்களையும்,   இயற்கை மழை பேரிடர்களையும் சந்தித்த இத்த தூம்பும் காலும் சிதையாமல் இருப்பதில் இருந்தே தமிழர்களின் கட்டுமான அறிவியலை உணர முடிகிறது.

தூம்பை அமைத்த இந்த எட்டி மாறன் பற்றிய பிற செய்திகளை நாம் அறிய முடிய வில்லை.  எனினும் இவர் ராஜசிம்ம பாண்டியரின் தாத்தாவான சீமாறன்,  சீவல்லபன் ஆட்சிக் காலத் தில் பெரும் புகழோடு வாழ்ந்த அரசு அதிகாரியான எட்டிசாத்தன் என்ப வரின் வழித் தோன்றலாக இருக்கலாம் என்பதை யூகிக்க முடிகிறது.

எட்டி சாத்தன் தென்பாண்டி நாட்டில் கிழவன் ஏரி என்ற பெயரில் பல ஏரிகளையும் குளங் களையும் அமைத்தவர் என்பது பல கல்வெட் டுக்கள் மூலம் அறிய முடிகிறது.

அதே போன்று இந்த கீழப்புலியூர் குளத்துக்கு தூம்பும்.  காலும் அமைத் தவர் எட்டி மாறன் என்ற தென் வார நாட்டுக் கிழவன் என்று கல்வெட்டு கூறுவதால் இவர்கள் வழி வழியாக தென் பாண்டி நாட்டில் வேளாண் மைக்காக குளங்கள் ஏரிகள் வெட்டியும் மதகு தூம்புகள் அமைத்து கொடுத்தும் வாழ்ந் தார்கள் என்று கருதலாம் என தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தி மற்றும் குழுவினர் தெரிவித்தனர்.

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...