புதன், 30 மே, 2018

கிருஷ்ணகிரி அருகே பழங்கால மனிதனின் வாழ்விடக் குகை கண்டுபிடிப்பு



கிருஷ்ணகிரி, மே19 கிருஷ் ணகிரி அருகே பழங்கால மனிதர்கள் வாழ்ந்த குகையை வரலாற்று ஆர்வலர்கள் செவ் வாய்க்கிழமை கண்டறிந்தனர்.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ் ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு தனது களப் பணியை கிருஷ்ணகிரியை அடுத்த ஆலப்பட்டி அருகே செவ் வாய்க்கிழமை மேற்கொண்டது. அப்போது, நக்கல்பட்டி கிரா மத்தில் உள்ள ஆயிரம் அடி உயரம் உள்ள சிறீராமன் மலையின் தெற்கு திசையில், அடிவாரத்திலிருந்து சுமார் 200 அடி உயரத்தில் சுமார் 300 அடி நீளத்தில் இயற்கையாக அமைந்த குகையைக் கண்டறிந்தனர்.

இந்த குகையில், சுமார் 500 பேர் வரை தங்கலாம். இதனைச் சாவடி என அந்தப் பகுதி மக்கள் அழைக்கின்றனர்.

இந்தக் குகையில், சுமார் 2 ஆயிரம் ஆண்டு முதல் ஆயிரம் ஆண்டுகள் வரையில் 3 தொகுதி களாக காணப்படுகின்றன. தொடக்க கால ஓவியங்களான விலங்கின் மீது மனிதன் அமர்ந் திருப்பது போலவும், சில திரிசூ லங்கள் நடப்பட்டு வழிபாடு செய்வதுபோன்ற ஓவியங்களும், ராமாயணத்தில் வரும் ராவணன், அனுமன் ஆகிய உருவங்கள் தெருக்கூத்தில் வருவது போன்ற ஆடை அணிந்தவாறு வரையப் பட்டுள்ளன. இதில் ராவணனுக்கு 10- க்குப் பதிலாக 7 தலைகள் மட்டுமே வரையப்பட்டுள்ளன.

இந்த குகைக்குச் செல்லும் வழியில் சென்னியம்மன் கோயில் அருகே சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கல் திட்டைகள் காணப்படுகின்றன.

இந்த கள ஆய்வின்போது, கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சி யகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ், வரலாற்று ஆய்வாளர் சுகவனம் முருகன் ஆகியோர் இந்த பாறை ஓவியங்கள் குறித்து விளக்கினர். இந்த கள ஆய்வை ஆசிரியர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.

- விடுதலை நாளேடு, 19.5.18

திங்கள், 7 மே, 2018

பரோடா பெண்கள் முன்னேற்றம் 04.02.1934- புரட்சியிலிருந்து...



புதிய சட்டவிபரம்

பரோடா சமஸ்தானத்திலுள்ள இந்துப் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இந்து சமுதாயச் சட்டத்தை பின்வருமாறு திருத்தி புதிய சட்டம் ஏற்படுத்தியிருக்கிறார்கள். திருத்தப்பட்ட அந்தப் புதிய சட்டப்படி ஒரு இந்து பொதுக்குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்துபோனால் அவருடைய விதவை அந்தக் குடும்பத்தில் ஒரு பங்காளி ஆகிவிடுகிறாள். விதவை களின் முந்தின நிலைமையில் இந்தச் சட்டம் ஒரு பெரிய மாறுதலை உண்டுபண்ணி விட்டிருக்கிறதென்று சொல் லலாம். முந்தியெல்லாம் ஒரு விதவைக்கு அவள் புருஷன் குடும்பத்திலே சோறும், உடையும்தான் கிடைக்கும். வேறு எவ்வித உரிமையும் கிடையாது. இந்தச் சட்டப்படி ஒரு விதவையானவள் தன் புருஷன் குடும்பத்தின் மற்ற நபர்களைப்போல் ஒரு சமபங்காளி ஆகிவிடுகிறாள். சொத்தில் தனக்குள்ள பாகத்தைப் பிரித்துக் கொடுக்கும்படி கேட்பதற்குக்கூட இந்தச் சட்டத்தினால் உரிமை ஏற்பட்டிருக்கிறது.

புருஷனுடைய சொத்து அவர்தானே சம்பாதித்த தனி சொத்தாயிருந்தால் பழைய சட்டப்படி அவருடைய மகனுக்கும், பேரனுக்கும், பேரன் மகனுக்கும்தான் கிடைக் கும். இந்த வாரிசுகள் இல்லாமலிருந்தால் மாத்திரம் விதவைக்குக் கிடைக்கும். இப்போது இந்தப் புதிய சட்டத்தினால் மகன், பேரன் முதலியவர்களைப் போலவே விதவையான பெண்ணுக்கும் சமபாகம் கிடைக்க உரிமை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. விதவை யான ஒரு மருமகளுக்கும், தாய்க்கிழவிக்கு அதாவது மாமியாருக்கு அடுத்தபடியான அந்தஸ்து ஏற்படுகிறது.

இதற்கு முன்னெல்லாம் ஒரு பெண்ணைக் கலியாணம் செய்து கொடுத்துவிட்டால் அதன்பின் அவளுடைய தகப்பன் குடும்பத்தில் அவளுக்கு எவ்வித உரிமையும் கிடையாது. புருஷன் வீட்டில் சாப்பாட்டுக்குக் கஷ்டமாயிருந்தாலும்கூட அவளுடைய தகப்பன் குடும்பத்தி லிருந்து சம்ரட்சணை பெற அவளுக்கு உரிமை இருந்ததில்லை. இதனால் பல பெண்கள் கஷ்டம் அனுபவிக்க நேரிட்டிருக்கிறது.
இந்தப் புதிய சட்டப்படி இந்த நிலைமை மாற்றப்பட்டிருக்கிறது. எப்படியெனில் புருஷன் இறந்த பின் ஒரு பெண் தன் தகப்பன் வீட்டிலேயே வசித்து வருவாளானால், அவளுடைய மாமனார் வீட்டில் அவளுக்குச் சம்ரட்சணை செலவு கொடுக்க வழியில்லாமல் இருக்கும்போதும் தகப்பனுக்கு அவளை வைத்துக் காப்பாற்ற சக்தி இருக்கும்போதும் தகப்பன் குடும்பத் தாரே அவளுடைய ஜீவனத்துக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்று இந்தப் புதிய சட்டம் கூறுகிறது.

கலியாணமாகாத பெண்ணுக்கு இதுவரையில் சம்ரட்சணையும் கலியாணச் செலவும்தான் கொடுக்கப் பட்டு வந்தது. சொத்து பாகப் பிரிவினைக் காலத்தில் இவ்விரண்டுக்கும் பதிலாக சகோதரனுடைய பங்கில் நாலில் ஒரு பாகம் கொடுக்கப்படுவதும் உண்டு, ஆனால் சொத்து பங்கு போட்டுக் கொடுக்கும்படி கேட்க உரிமை கிடையாது.

இந்தப் புதிய சட்டப்படி அவள் தன் பாகத்தைத் தனியாகப் பிரித்துக் கொடுத்துவிடும்படி கேட்கலாம். இதனால் கலியாணமாகாத பெண்களுக்கு அதிக சுதந்தரமும், சுயாதீனமும் ஏற்பட்டிருக்கிறது.

சீதன விஷயமான பாத்தியதையைப் பற்றி பழைய சட்டத்திலிருந்த சில சிக்கல்களும் நீக்கப்பட்டிருக் கின்றன.

முந்தின சட்டப்படி பெண்கள் தங்களுக்குக் கிடைக்கிற சொத்துக்களை அனுபவிக்க மாத்திரம் செய்யலாம்-விற்பனை செய்ய முடியாது. இப்போது பெண்கள் 12,000 ரூபாய் வரையில் தங்கள் சொத்துக்களை விற்பனை செய்யவோ, அல்லது வேறுவிதமாக வினியோகிக்கவோ மேற்படி புதிய சட்டம் பூரண உரிமை அளிக்கிறது. இந்தப் புதிய சட்டத்தினால் பரோடா நாட்டுப் பெண்களுக்கு அதிக உரிமைகளும், பாதுகாப்புகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இவ்விதமே பிரிட்டிஷ் இந்தியாவிலும், மற்ற சமஸ்தானங்களிலும், இந்து சட்டம் திருத்தப்படுமாயின் பெண்கள் முன்னேற்றத்துக்குப் பெரிதும் அனுகூலமாயிருக்கும்.

-  விடுதலை நாளேடு, 5.5.18

கல்யாண ரத்து தீர்மானம் 21.12.1930 - குடிஅரசிலிருந்து...

ஆந்திர மாகாண பெண்கள் மகாநாட்டில் விவாக ரத்து செய்து கொள்ளுவதற்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒன்றுபோலவே உரிமை இருக்கும் படியாக ஒரு தீர்மானம் பெண்களால் கொண்டு வரப்பட்டு, ஒரே ஒரு ஓட்டில் அத்தீர்மானம் தோல்வியடைந்து விட்டதாகத் தெரியவருகிறது. அன்றியும் 3 மணி நேரம் அத் தீர்மானத்தின் மீது, பல பெண்கள் கூடி பலமான வாதப்பிரதிவாதம் நடந்ததாக காணப்படுகின்றது. தீர்மானம் தோற்று விட்டாலும்கூட இந்தச் சேதி நமக்கு மிகவும் மகிழ்ச்சியையும், பெண்கள் விடுதலையில் நமக்கு நம்பிக்கையையும் கொடுக்கின்றது. ஏனெனில் கலியாண விடுதலை, விவாகரத்து என்கின்ற வார்த்தைகளைக் காதினால் கேட்கவே நடுங்கி கொண்டிருக்கும் கோடிக்காணக்கான, ஆண்களுக்கு அடங்கி  அடிமையாய்க் கிடந்து வந்த பெண்கள் கைதொட்டு தாலிகட்டின புருஷன் கல்லானாலும், புல்லானாலும், கெட்டவனா னாலும், பிறர்க்கு தன்னைக் கூட்டி விட்டு ஜீவனம் செய்யும் மானமற்ற பேடியாய் இருந்தாலும் அவர்களையெல்லாம் கடவுள் போலவே பாவிக்க வேண்டுமென்றும், கணவன் குஷ்டரோகியாயிருந்தாலும் அவனைத் தலையில் தூக்கிக் கொண்டு போய், அவன் விரும்பும் தாசி வீட்டுக்கு அழைத்துப் போய் விடுவது தான் கற்புள்ள பெண்களின் லட்சணமென்றும். பெண்களுக்குக் கர்ப்பத்தில் இருந்தே சரீரத்தில் ரத்தத்துடன் கலக்கும்படி செய்து வைத்திருக்கும் இந்த நாட்டில், கலியாண ரத்து என்பதும், ஆண்களைப் போலவே பெண்களுக்குச் சுதந்திரம் என்றும் சொல்லப்பட்டது போன்ற தீர்மானங்கள் மகாநாட்டுக்குக் கொண்டு வருவதும், அதுவும் பெண்களையே அதைப் பற்றி பலர் பேசி வாதப் பிரதிவாதம் செய்ய இடம் ஏற்படு வதுமான காரியம் என்பது லேசான காரியமல்ல. அது மாத்திரமல்லாமல் அத்தீர்மானம் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோற்கும்படி அதற்கு ஓட்டுகிடைப்பது அதுவும் சாதாரண காரியமல்ல. ஆகவே இதிலிருந்து கூடிய சீக்கிரம் பெண்ணுலகு விடுதலை பெற்று விடும் என்று தைரியமாய் இருக்கலாம் என்றே நினைக்கின்றோம்.

தந்தை பெரியார் பொன்மொழிகள்

* இவ்வுலகில் பல மதக் கொடுமைகளுக்கும் ஜாதி வித்தியாச இழிவுக்கும் உட்பட்டுக் கேவலமான மிருகத்திலும் இழிவாகக் கருதப்பட்டுப் பின்னால் மோட்சம் அடைவதைவிடச் சமத்துவம் பெறுவதுதான் பிரதானம்.

* சமதர்மம் என்று வந்துவிட்டால் மனிதச் சமு தாயத்துக்குக்  கவலை, குறைபாடு, தொல்லை எல்லாம் அடியோடு போய்விடும். கவலை, குறைபாடுகள் நீக்கப் பட வேண்டுமானால் சமதர்மம் தான் மருந்து.

- விடுதலை நாளேடு, 5.5.18

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...