சனி, 23 நவம்பர், 2019

தேசூரில் 6ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு

திருவண்ணாமலை, நவ. 15-  தேசூ ரில் 6ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

வந்தவாசியை அடுத்த தேசூர் பகுதியில் பாழடைந்த கோட்டை மற்றும் சிலைகள் இருப்பது குறித்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உத வியாளர் (பொது) ஜானகி, திரு வண்ணாமலை மாவட்ட வர லாற்று ஆய்வு நடுவத்துக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ஆய்வு நடுவத்தின் செயலர் ச.பாலமுருகன், பேராசிரியர் சுதாகர் ஆகியோர் சென்று ஆய்வு செய்தனர். ஆய்வின் போது தேசூர் வருவாய் உதவியா ளர் வெங்கடேஷ், கிராம நிர்வாக அலுவலர் பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

அப்போது பாழடைந்த நிலை யில் ஒரு மசூதி போன்ற கட்டடமும் அதன் அருகில் 5 நடுகற்களும் இருப்பது தெரியவந்தது. இவை 6ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை ஆகும்.

இதுகுறித்து வரலாற்று அறிஞர் பூங்குன்றன் கூறியதாவது:-

தேசூரில் கிடைத்த எழுத்து டைய 2 நடுகல்லில் சீயமங்கலத்தில் எறிந்து பட்ட கொற்றம்பாக் கிழார் என்றும், மற்றொன்றில் சீய மங்கலத்தில் எறிந்து பட்ட கொற் றம்பாக் கிழார் மகன் சீலன் என் றும் குறிப்பிட்டுள்ளன. இதில் வீர னின் கையில் கத்தியும், கேடயமும் வைத்திருப்பது போன்ற அமைப் பில் சுமார் 4 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இதன் அருகில் காலத்தால் பிற்பட்ட மற்ற 3 நடு கற்களும் உள்ளன.

சீயமங்கலத்தில் பாணரைசரு ஆண்ட காலத்தில் கொற்றம்பாக் கிழார் அவ்வூரை தாக்கியிருக்க வேண்டும். இவர்களுக்கிடையே மாடுபிடி மோதலோ அல்லது ஊர் களுக்கிடையே மோதலோ ஏற்பட் டிருக்கலாம் என்றும் அவ்வாறு ஏற்பட்ட ஒரு பூசலில் மேற் குறிப் பிட்ட கொற்றம்பாக் கிழாரும் அவருடைய மகன் சீலனும் இறந்துவிட அவர்கள் நினைவாக இந்நடுகற்களை வைத்துள்ளனர்.

ஏற்கெனவே இப்பகுதியில் சீயமங்கலத்து பாணரைசரு என்ற வாசகத்துடன் ஒரு நடுகல்லை தாமரைக்கண்ணன் என்பவர் கண்டுபிடித்திருந்தார். இந்த நடுகற்களிலும் சீயமங்கலம் என வருவதால் இப்பகுதி பாணரை சர்கள் ஆண்ட பாணாடு ஆக இருக்க வேண்டும் என்றும் இது வடமொழியில் பாணராட்டிரம் என்று அழைக்கப்பட்டது என்றும் இந்நாடு கடலூர் வரை பரவியிருந்தது என்றும் கருதலாம்.

பாணர்களின் தலைவர்களில் ஒருவராக இந்த நடுகல்லில் குறிப் பிடும் கொற்றம்பாக் கிழார் இருந் திருக்க வேண்டும். கொற்றம்பாக் என்பது தற்போதைய தேசூராக இருக்கலாம். தேசு என்பதற்கு வெற்றி என்றும் பொருள் கொள்ள லாம். சீயமங்கலம் என்பது பல்லவர் கால குடைவரை உள்ள ஊர். இது தேசூருக்கு அருகில் 2 கிலோ மீட் டர் தூரத்தில் உள்ளது குறிப்பி டத்தக்கது.

தமிழகத்தில் கிடைத்த நடுகற் களில் தந்தை மற்றும் மகனுக்கு எடுக்கப்பட்ட நடுகற்கள் இது வேயாகும். இவ்விரு நடுகற்களும் தொண்டை மண்டலத்தில் கிடைத்த காலத்தால் முற்பட்ட எழுத்துடைய நடுகற்கள் என்ற சிறப்பினையும் பெறுகின்றன. இந்த நடுகற்கள் இப்பகுதியின் வரலாற்றிற்கு சிறந்த ஆதாரமாக திகழ்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

 -  விடுதலை நாளேடு 15 11 19

வெள்ளி, 8 நவம்பர், 2019

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே பாறைக்கீறல் ஓவியங்கள்

கிருஷ்ணகிரி, நவ. 2- ‘தமிழகத் தின் மிகப்பெரிய பாறைக் கீறல் ஓவியங்கள், வேப்பனப் பள்ளி அருகே உள்ளன’ என கிருஷ்ணகிரி அரசு அருங் காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே நக்கநாயன பண்டா என்ற இடத்தில் உள்ள மலையில், காப்பாட்சியர் கோவிந்தராஜ் தலைமையிலான குழுவினர் மற்றும் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் முருகன் ஆகியோர் ஆய்வுக்கு சென்றனர். அங்கு 3 இடங்க ளில் பாறையில் வரையப்பட் டுள்ள கீறல் ஓவியங்களை ஆய்வு செய்தனர்.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:

கொங்கனப்பள்ளி கிராமத்தின் அருகே உள்ள மலைப்பகுதியில் 2 கிமீ தொலைவு வனப்பகுதியில் நடந்து சென்றால் நக்கநாயன பண்டா என்கிற இடம் உள் ளது. இவ்விடத்தில் உள்ள 3 பாறைகளில், பாறைக்கீறல் ஓவியங்கள் காணப்படுகின் றன. பாறை ஓவியங்களும், பாறைக்கீறல்களும், வரலாற் றுக்கு முற்பட்ட கால மக்க ளின் முக்கியமான இரு கலை வடிவங்களாகும். தமிழகத் தின் முதல் பாறை ஓவியம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கண்டு பிடிக்கப்பட்டது போல், தற்போது தமிழகத் தின் மிகப்பெரிய அதாவது சுமார் 6 அடி உயரமுள்ள ஒரே வடிவிலான 3 பாறை கீறல்களும் முதன்முறையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

இங்கிருந்து 50 அடி தொலைவிலேயே பெருங்கற் படைக் காலத்தை சேர்ந்த கற்திட்டைகளும் காணப்படு வதால், இப்பெரிய பாறைக் கீறலின் காலத்தையும் பெருங் கற்படைக்காலம் என தீர் மானிக்கலாம். இக்கால ஓவி யங்களில் உருவங்கள், ஒற்றை கோட்டால் வரையப்பட்டி ருக்கும். ஆனால், இக்கீறல் உருவமோ இரட்டைக் கோட் டால் முழு உருவமாகவே குறைந்த ஆழத்தில் கீறப் பட்டுள்ளது.

6 அடி உயரத்தில் பெண் வடிவத்தில் இருபுறம் சடை யும், உடலின் அமைப்பும் கத்தரி போலவும் உள்ளது. இருபுறமும் இரு சிற்றுருவங் கள் வரையப்பட்டுள்ளன. இவை பிற்காலத்தில் வரையப் பட்டவை என அதன் அமைப்பை வைத்து சொல்ல லாம். தலையும், கழுத்தும் தனித்த இரு வட்டங்கள் இணைந்தது போலவும், உடல் கத்தரிக்கோல் போன்ற அமைப்பிலும் வரையப்பட்டு உள்ளது. மூன்றாவது பாறை யில் உள்ள உருவம் இவை போன்றே இருந்தாலும், அது மிகவும் தேய்ந்து காணப்படு கிறது. கிருஷ்ணகிரி மாவட் டம் மட்டுமல்லாது, தமிழகத் தில் இதுவரை அறியப்பட்ட பாறைக் கீறல்களில் இதுவே பெரியதாகவும் இருக்கக் கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

- விடுதலை நாளேடு 2 11 19

ஞாயிறு, 3 நவம்பர், 2019

தொல்லியல்துறையின் அகழ்வாய்வில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான வணிகமய்யம் ஆந்திராவில் கண்டுபிடிப்பு

நெல்லூர், நவ.3, ஆந்திர பிரதேசத்தின் நெல்லூரில் நாயுடுபேட்டா பகுதி அருகே கொட்டிபுரலு என்ற இடத்தில் இந்திய தொல்லியல் துறை முதற்கட்ட ஆய்வு பணியை மேற்கொண்டது.  இதில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த செங்கற்களால் கட்டப்பட்ட அமைப்பு ஒன்றும், விஷ்ணு சிலை ஒன்றையும் குழுவினர் கண்டறிந்தனர்.
இதில் பல கலை பொருட்களும் வெளியே எடுக்கப்பட்டன.  தொடக்க காலத்திற்கு உட்பட்ட பல்வேறு மண்பாண்டங்களும் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.  இதுபற்றிய ஆய்வு மேற் கொண்டதில், இந்த இடம் கடல்வழி வர்த்தகத்துடன் தொடர்புடைய ஒன்றாக இருந்திருக்கும் என தெரிய வந்துள்ளது.  தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டால், வர்த்தக மய்யமாக செயல்பட்ட இந்த பகுதியை பற்றிய சுவாரசிய உண்மைகள் தெரிய வரும் என குழுவினர் தெரிவித்து உள்ளனர்.
இந்த பகுதியில் செம்பு மற்றும் காரீய பொருட்களால் ஆன நாணயங்கள், இரும்பினால் ஆன ஈட்டி, டெரகோட்டா விதைகள், கற்களால் ஆன காதணிகள் உள்ளிட்ட மற்ற கலை பொருட்களும் கிடைத்துள்ளன.  தொடர்ந்து இந்த பகுதியில் புவியியல், ரசாயன ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- விடுதலை நாளேடு, 3.11.19

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...