காலச்சுவடு

செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

சென்னிமலை அருகே கொடுமணலில் கிடைத்த பழங்கால வரலாற்று சின்னங்கள்

 

    January 01, 2023 • Viduthalai

ஈரோடு, ஜன.1 கொடுமணலில் கிடைத்த பழங்கால வரலாற்று சின்னங்கள் குறித்து வருங்கால சந்ததி யினர் தெரிந்து கொள்ளும் வகையில் கொடுமணலில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கொடுமணலில் கிடைத்த பழங்கால வரலாற்று சின்னங்கள் குறித்து வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில் கொடுமணலில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றங்கரை பகுதியில் உள்ளது கொடுமணல் கிராமம். இங்கு சுமார் 2 ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருந்ததுடன் பெரிய அளவில் தொழில்துறைகளும், வியாபாரங்களும் இருந்ததற்கான ஆதாரங்களும் கிடைத்ததால் 1981-ஆம் ஆண்டு முதல் கொடுமணல் பகுதியில் இதுகுறித்து பல்வேறு ஆய்வு பணிகள் நடைபெற்று வந்தது. பழங்கால பொருட்கள் இதில் முக்கியமாக தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பில் அதன் திட்ட இயக்குநர் ஜெ.ரஞ்சித் தலைமையில் 2020-ஆம் ஆண்டு மே மாதத்தில் தொடங்கப்பட்ட 8-ஆவது அகழாய்வின் போது தான் ஏராளமான பழங்காலப் பொருட்கள் கிடைத்தது. இந்த அகழாய்வில் தொழிற்கூடங்கள் மற்றும் கொல்லுப்பட்டறைகள் இருந்த பகுதி, பழங்கால ஈமச்சின்னங்கள் எனப்படும் கல்லறைகள் இருந்த பகுதி, கிணற்று படிக்கட்டுகள் ஆகியவை கண்டு பிடிக்கப்பட்டது. 

மேலும் ஏராளமான முதுமக்கள் தாழிகள், கத்திகள், ஈட்டிகள், ஆணிகள் போன்ற இரும்பு பொருட்கள், நூற்றுக்கணக்கான கல்மணிகள், வளையல்கள் உள்ளிட்ட அணிகலன்கள், நாணயங்கள், தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் என ஏராளமான பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டது.


நேரம் பிப்ரவரி 28, 2023 கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: சென்னிமலை, தமிழ் எழுத்து, பொருட்கள்

செய்யாறு அருகே நெல்வாய் கிராமத்தில் 9ஆம் நூற்றாண்டு சிற்பங்கள் கண்டெடுப்பு

 

      November 06, 2022 • Viduthalai

செய்யாறு, நவ.6 திருவண்ணா மலை மாவட்டம், செய்யாறு தாலுகா நெல்வாய் கிராமத்தில் வரலாற்று ஆய்வாளர் எறும்பூர் செல்வக்குமார் ஆய்வு நடத்தியதில், வயல்வெளி நடுவில் செல்லியம்மன் கோயில் அருகே புதைந்து கிடந்த அய்யனார் சிலை, கருடாழ்வார் சிற்பம் பொறித்த கல்தூண், ஸ்தூபக் கல், சந்து தெருவில் கோமாரிக்கல் ஆகியவற்றை கண்டெடுத்தார். 

இதுகுறித்து செல்வகுமார் கூறியதாவது: அய்யனார் சிற்பம் 34 சென்டிமீட்டர் உயரமும், 22 சென் டிமீட்டர் அகலமும் உடையது. அய்யனாரின் தலையை அடர்ந்த ஜடா பாரம் அலங்கரிக்கிறது. காதில் பத்திர குண்டலமும், கழுத்தி லும் கால்களிலும் அணிகலன்கள் காணப்படுகின்றன.  

அதேபோல் கல் தூணில் கருடாழ்வார் சிற்பம் 58 சென்டி மீட்டர் உயரமும், 28 சென்டிமீட்டர் அகலமும் உள்ளது. ஸ்தூபக்கல் கலை நயத்துடன் உள்ளது. ஊரின் மய்யப்பகுதி யான சந்து தெருவில் கோமாரிக்கல் அல் லது மந்தை வெளிகல் என்று அழைக்கப் படும் பழைமையான கல் கண்டெடுக்கப் பட்டது. இக்கல்லின் உயரம் 60 சென்டி மீட்டர், அகலம் 30 சென்டி மீட்டர். தற்போது பொன் னியம்மன் கோயில் கட்டப்பட்டி ருக்கும் இடத்தில் ஏற்கெனவே லட்சுமி நாராயணன் கோயில் இருந்த தாகவும் கூறப்படுகிறது. கோயில் முழுவதும் காணாமல் போன நிலையில் அதனுடைய எச் சங்கள் காணப்படுவதால் பொது மக்கள் கூறும் தகவல் உறுதி யாகிறது.

இவ்வூர் முன்னோர் களால் விஜய பூபதி நகரம் என்று அழைக்கப்பட்டதாக பெரியவர்கள் தெரிவிக் கின் றனர். இவ்வூரில் ஏற்கெனவே கண்டெடுத்த மூத்த தேவி சிற்பம், சாமுண்டி சிற்பம் உள்ளிட்ட அனைத்தும் கி.பி. 9ஆம் நூற்றாண் டிற்கும் 10ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதாக இருக்க லாம். சிற்பங்களின் கலை நுணுக்கங்களை பார்க்கும் போது பல்லவர்கள் அல் லது சோழர் காலத்தை சேர்ந்ததாக இருக்க வாய்ப்புள்ளது. தொல்லியல் ரீதியாக ஆய்வு மேற்கொண்டால் பல அரிய தகவல்கள் கிடைக்க வாய்ப் புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நேரம் பிப்ரவரி 28, 2023 கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: அய்யனார் சிலை, செய்யாறு

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2023

அரூர் அருகே 1400 ஆண்டுகள் பழைய பல்லவர் கால நடுகல் கண்டெடுப்பு



  February 18, 2023 • Viduthalai

தர்மபுரி, பிப். 18- தருமபுரி மாவட்டம் அருர் வட்டத்திற்குட்பட்ட ஆலம்பாடி என்ற கிராமத்தில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த ச.பாலமுருகன், சி.பழனிச்சாமி, சிற்றிங்கூர் ராஜா, தண்டராம்பட்டு சிறீதர் மற்றும் விக்னேஷ்வரன் ஆகியோரைக் கொண்ட குழு கள ஆய்வு செய்தது. இதில் 2 பல்லவர்கள் கால நடுகல் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன.

ஆலம்பாடி கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள வேடியப்பன் கோயிலில் புதைந்த நிலையில் இரண்டு நடுகற்களையும் வெளியே எடுத்து ஆய்வு செய்ததில் இரண்டு நடுகற்களிலும் வட்டெழுத்துக் கல்வெட்டு இருப்பது கண்டறியப் பட்டது.இந்த நடுகல் கல்வெட்டை படித்து விளக்கமளித்த தொல்லியல் அறிஞர் ர.பூங்குன்றன் கூறியதாவது, "ஒரு நடுகல் வீரர் உருவம் ஒன்றும், அதில் இடது கையில் கேடயமும் வலது கையில் வாளும் அமைக்கப்பட்டுள்ளது. இடைக்கச்சையும் அணிந்து சண்டைக்கு ஆயத்தமாகும் நிலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் இட புறத்தில் வட்டெழுத்தில் உள்ள கல்வெட்டு, பல்லவ மன்னன் மகேந்திர வர்மனின் நான்காவது ஆட்சியாண்டில் இது வெட்டப்பட்டதென்றும், இதில் காட்டி சாமி என்பவர் கீழ் வாளப்பாடி மாத விண்ணனோடு கால்நடைகள் அதிகம் இருக்கும்  புஞ்சி என்ற ஊரை ஆளும் ராமசாத்தன் என்பவர் இறந்துபோனதை குறிப்பிடுகிறது. என்றும் சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பே பல்லவர்கள் காலத்தில் வெட்டப்பட்ட இந்த நடுகற்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது " எனத் தெரிவித்தார்.

தென்பெண்ணையாற்றின் கரையில் அமைந்துள்ள இந்த வேடியப்பன் கோயிலில் மண்ணில் புதைந்திருந்த நடுகற்களை மீட்டு, ஆய்வு நடுவத்தினரும் ஊர்மக்களும் இணைந்து அதே இடத்தில் அடிபீடம் அமைத்து நிலையாக நிற்கவைக்கப்பட்டது.தென்பெண்ணையாற்றின் கரையில் ஏற்கெனவே திருவண்ணாமலை, கள்ளக் குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் பல நடுகல் கல்வெட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இதுபோல மண்ணில் புதைந்த நிலையில் இன்னும் நடுகற்கள் கிடைப்பதினால் தென்பெண்ணை யாற்றின் இருகரைகளிலும் உள்ள ஊர்களில் ஆய்வுகள் மேற்கொண்டால் இன்னும் பல அரிய வரலாற்றுத் தடங்கள் வெளிவர வாய்ப்புள்ளது என்றும் இந்த நான்கு மாவட்டங்களையும் உள்ளடக்கிய இந்த பகுதியை நடுகல் மண்டலமாக அறிவித்து நடுகற்களையும் கல்வெட்டு களையும் ஆவணப்படுத்தி பாதுகாக்க தமிழ்நாடு தொல்லியல் துறை முன்வரவேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

நேரம் பிப்ரவரி 19, 2023 கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: நடுக்கல், பல்லவர் காலம்
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

10ஆம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியர்கள் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு

    September 20, 2022  • Viduthalai மதுரை, செப்.20   திருச்சுழி அருகே 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட் ...

  • இராசராச_சோழனின்_பொற்கால_ஆட்சி ?
    பரவலாக வரலாற்றை நன்கறிந்தவர்கள் ராசராச சோழனை தெலுங்கன் என்று சொல்லுகிறார்கள். அதாவது கொல்டி என்பதே இதனுடைய ஆழமான அர்த்தமுறை. ராசராச...
  • மாவலி, நரகாசுரன் போன்றோர் நம் இன மண்ணுரிமைப் போராளிகள்!
    புராணங்கள் கற்பனை என்பதில் எந்த மறுப்பும் இல்லை. ஆனால், அவற்றுள் நுழைத்துள்ள சில உள்ளார்ந்த கருத்துகள் அன்றைய நிகழ்வுகளை அடிப்படையாகக் க...
  • திருப்பத்தூர் அருகே கி.பி. 11ஆம் நூற்றாண்டு நடுகற்கள் கண்டெடுப்பு
    திருப்பத்தூர், ஏப்.12  திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர் க.மோகன்காந்தியும், காணிநிலம் மு.முனிசாமியும் மேற்...
Powered By Blogger

Translate

இந்த வலைப்பதிவில் தேடு

  • முகப்பு

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

பின்பற்றுபவர்கள்

வலைப்பதிவு காப்பகம்

  • மார்ச் 2023 (2)
  • பிப்ரவரி 2023 (3)
  • ஜனவரி 2023 (3)
  • ஆகஸ்ட் 2022 (2)
  • ஜூலை 2022 (1)
  • பிப்ரவரி 2022 (1)
  • ஜனவரி 2022 (2)
  • அக்டோபர் 2021 (1)
  • செப்டம்பர் 2021 (2)
  • ஆகஸ்ட் 2021 (8)
  • ஜூலை 2021 (4)
  • மே 2021 (2)
  • ஏப்ரல் 2021 (1)
  • ஜனவரி 2021 (1)
  • டிசம்பர் 2020 (1)
  • ஜூன் 2020 (1)
  • மார்ச் 2020 (1)
  • பிப்ரவரி 2020 (3)
  • டிசம்பர் 2019 (2)
  • நவம்பர் 2019 (3)
  • அக்டோபர் 2019 (6)
  • செப்டம்பர் 2019 (13)
  • ஆகஸ்ட் 2019 (3)
  • ஜூலை 2019 (2)
  • ஜூன் 2019 (5)
  • மே 2019 (5)
  • ஏப்ரல் 2019 (6)
  • பிப்ரவரி 2019 (1)
  • ஜனவரி 2019 (1)
  • டிசம்பர் 2018 (3)
  • நவம்பர் 2018 (4)
  • அக்டோபர் 2018 (4)
  • செப்டம்பர் 2018 (2)
  • ஆகஸ்ட் 2018 (2)
  • ஜூலை 2018 (5)
  • ஜூன் 2018 (7)
  • மே 2018 (3)
  • மார்ச் 2018 (8)
  • பிப்ரவரி 2018 (9)
  • ஜனவரி 2018 (4)
  • டிசம்பர் 2017 (18)
  • நவம்பர் 2017 (4)
  • அக்டோபர் 2017 (5)

லேபிள்கள்

  • அகழ்வாய்வு
  • அகழாய்வு
  • அம்பேத்கர்
  • அய்யனார் சிலை
  • அய்ராவதம் மகாதேவன்
  • ஆணைகள்
  • ஆதிச்சநல்லூர்
  • ஆந்திரா
  • ஆய்வு
  • ஆஷ் துரை
  • இந்தியா
  • இராசராசன்
  • இராஜராஜ சோழன்
  • இரும்பு
  • இளையான்குடி
  • உறைகிணறு
  • ஏரி
  • கல் கருவி
  • கல் செக்கு
  • கல் திட்டை
  • கல்செக்கு
  • கல்யாண ரத்து
  • கல்வி
  • கல்வி உரிமை
  • கல்வெட்டு
  • கலகம்
  • கற்பதுக்கை
  • கற்றூண்
  • காசு
  • காண்டாமிருகம்
  • கால்வாய்
  • கிணறு
  • கிருஷ்ணகிரி
  • கீழடி
  • குகை
  • குத்துக்கல்
  • குமிழி மடைத் தூண்
  • கேரளா
  • கொந்தகை
  • கொற்கை
  • கோட்சே
  • கோயில் அனுமதி
  • கோயில் நுழைவு
  • சங்க கால நகரம்
  • சமணம்
  • சாத்தூர்
  • சாதனை
  • சிங்கம்புணரி
  • சிலை
  • சிவகங்கை
  • சிவகளை
  • சிவாஜி
  • சுவர்
  • செங்கல்பட்டு
  • செய்யாறு
  • சென்னிமலை
  • சோழர்
  • சோழன்
  • தடயம்
  • தமிழ் எழுத்து
  • தானம்
  • திப்புசுல்தான்
  • திராவிடர் இயக்கம்
  • திருமணம்
  • திலகர்
  • தீவிரவாதிகள்
  • துலாபாரம்
  • நடுக்கல்
  • நடுகல்
  • நம்பூதிரி
  • நாணயம்
  • நியாண்டர்தல்
  • நினைவகம்
  • நினைவுச் சின்னம்
  • நீதிக்கட்சி
  • நெல்
  • படுக்கை
  • பரோடா
  • பல்லவர் காலம்
  • பல்லவர்கால சிலை
  • பழமை
  • பழைமை
  • பாண்டியர் காலம்
  • பார்ப்பன ஆதிக்கம்
  • பார்ப்பனத்தி
  • பார்ப்பனர்
  • பாறை ஓவியம்
  • பாறை கீரல்
  • பானை
  • புத்தம்
  • புதை படிமம்
  • புதைவிடம்
  • புரட்டு
  • பூம்புகார்
  • பெண்கள் சட்டய
  • பொருட்கள்
  • பொற்பனைக் கோட்டை
  • மகாபாரதம்
  • மகாவீரர்
  • மண் பானை
  • மறைவு
  • மன்னன்
  • மானாமதுரை
  • முதுமக்கள்
  • முதுமக்கள் தாழி
  • மூடத்தனம்
  • மேலாடை
  • ராமநாதபுரம்
  • வரலாறு
  • வாணியர்
  • வாள்
  • விருது
  • விலங்கு மனிதன்
  • வைரமுத்து
நீர்வரி தீம். Blogger இயக்குவது.