சனி, 31 ஆகஸ்ட், 2019

4,000 ஆண்டுகளுக்கு முந்தைய பாறைக் கீறல் ஓவியங்கள் கண்டெடுப்பு

தருமபுரி, ஆக.31  தருமபுரி மாவட்டம்,  பென்னாகரம் வட்டம், தாளப்பள்ளம் காடு என்ற இடத்திலிருந்து சுமார் 1.5 கி.மீ. தொலைவில் சீல நாயக்கனூர் அமைந்துள்ளது.  இக் கிராமத்தில் பெருங்கற் காலச் சின்னங்கள் இருப்பது குறித்து தகவலறிந்து, நல்லாம் பட்டி அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஆ.அன்பழகன்,  சீலநா யக்கம்பட்டி அரசுப் பள்ளி ஆசிரியர் கோ. திருப்பதி, அளே புரம் அரசுப் பள்ளி ஆசிரியர் முருகன் மற்றும் தொல்லியல் ஆர்வலர்கள் த. பார்த்திபன், ஆ.அன்பழகன் ஆகியோர் அங்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில்,  அங்கு வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த அரியவகை தொல்லியல் சின்னங்களான இரண்டு பாறைக் கீறல் ஓவி யங்கள் இருப்பதைக் கண்டறிந் தனர்.  இப் பாறை கீறல் ஓவியங் களை மேலாய்வு செய்த த. பார்த்திபன், ஆ.அன்பழகன் ஆகியோர் கூறியது:
இவை புதிய கற்காலத்தைச் சேர்ந்த பண்பாட்டுச் சின் னங் கள் ஆகும்.  இக்கீறல் ஓவியங் களில் ஒன்று குண்டுப் பாறை யிலும் மற்றொன்று சமதளமாக உள்ள பாறையின் உயரமான முகப்பிலும் கீறப் பட்டுள்ளன.  இரண்டிலும் மாட்டின் உரு வம் திமிலுடன் சற்று விரிந்து,  நீண்ட கொம் புகளுடன் செதுக்கப்பட்டுள்ளன.  இவற் றின் அழகிய வடிவமைப்பும், நேர்த்தியும் போற்றத்தக்க வகையில் உள் ளன.  தமிழகத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே வரலாற் றுக்கு முற்பட்ட  காலத்தைச் சார்ந்த பாறைக் கீறல் ஓவியங்கள் கிடைத் துள்ளன.
இதில், சீலநாயக்கனூர் பாறைக் கீறல் ஓவியங்கள் தனிச் சிறப்பு வாய்ந்தவையாக உள் ளன.  இவற்றின் தன்மைகளுக்கு இணையான பாறைக் கீறல் ஓவியங்களை புகழ் பெற்ற புதிய கற்கால வாழிடமான கர்நாடக மாநிலம்,  பெல்லாரி வட்டத்தைச் சேர்ந்த குப்கல்-சங்கனக்கல் என்ற இடத்தில் ஏராளமாகக் கிடைத்துள்ளன.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மேற்கொள் ளப்பட்ட அகழாய்வுகள்,  இப் பகுதியில் புதிய கற்காலப் பண்பாடும்,  பெருங்கற்காலப் பண்பாடும் ஒன்றை அடுத்து ஒன்றும் கலப்புற்ற நிலையில்  உள்ளதும் அறியப்பட்டிருப் பதால்,  இவற்றின் காலத்தை இன்றைக்கு சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கணிக்கலாம்.  மேலும், தருமபுரி மாவட்டத்தில் பெருங்கற் காலச் சின்னங்கள் அதிக அள வில் அமைந்துள்ளன என்று தெரிவித்துள்ளார்.
 - விடுதலை நாளேடு, 31.8.19

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

கீழடியில் சுடுமண்ணால் செய்யப்பட்ட குழாய் கண்டுபிடிப்பு



சிவகங்கை, ஆக.30 சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் 5-ஆம் கட்ட அகழாய்வு பணியில் சுடு மண்ணால் செய்யப்பட்ட குழாய் புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.

கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் 5-ஆம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த ஜூன் 13 -ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 700-க்கும் மேற்பட்ட தொல் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த சில தினங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுப் பணியில் பழங்கால மக்கள் பயன்படுத்திய தொட்டி மற்றும் தண்ணீர் செல்வதற்கான வடிகால் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து28.8.2019 அன்று  மேற்கொண்ட அகழாய்வின் போது சுடு மண்ணால் செய்யப்பட்ட பழங்கால குழாய் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே தண்ணீர் தொட்டி , தண்ணீர் செல்வதற்கான வடிகால் கண்டுபிடிப்பை தொடர்ந்து சுடுமண்ணால் செய்யப்பட்ட குழாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இங்கு வாழ்ந்த மக்கள் தங்கள் புழக்கத்துக்கு தேவையான நீரினை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கடத்துவதற்கு இதுபோன்ற வடிகால் மற்றும் குழாய்களை பயன்படுத்தி இருக்கலாம் என தொல்லியல் துறை அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

-  விடுதலை நாளேடு, 30.8.19

வியாழன், 29 ஆகஸ்ட், 2019

வாணியம்பாடி அருகே 2 நடுகற்கள் கண்டெடுப்பு



வாணியம்பாடி, ஆக.21  திருப் பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியர் க.மோகன் காந்தி, காணிநிலம் மு.முனிசாமி ஆகியோர் மேற் கொண்ட கள ஆய்வில் இந்த நடுகற்கள் கண்டெடுக்கப்பட் டுள்ளன.

இதுகுறித்து க.மோகன் காந்தி கூறியது:  வாணியம் பாடியை சுற்றியுள்ள பகுதிகள் ஆந்திர எல்லைப் பகுதியில் இருப்பதால் அக்காலத்தில் அந்நியர் படையெடுப்பு மிகுதி யாக இருந்தது. அப்போது, நடந்த போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு ஆங் காங்கே நடுகற்கள் அமைக்கப் பட்டுள்ளதைக் காணமுடிகிறது.

அதன்படி, சின்ன வட சேரியில் கற்திட்டை வடிவிலான நடுகல் கண்டெடுக்கப்பட் டுள்ளது. அதன் அமைப்புப் பிற்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்ததாகத் தெரிகிறது. இந்த நடுகல் மூன்றடி ஆழத்தில் புதைந்த நிலையில் உள்ளது. 3 பக்கமும் பலகைக் கல்லால் மூடி, மேற்பகுதியிலும் பெரிய பல கைக் கல்லைக் கொண்டு மூடும் அமைப்புக்கு கற்திட்டை வடி வம் என்று பெயர். இந்த நடுகல் லும் 3 பக்கமும் பலகைக் கல்லால் மூடப்பட்டு, மேலே ஒரு பலகைக் கல் கொண்டு மூடப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் கல் சேதமடைந்த நிலை யில் உள்ளது. இக்கலில் உள்ள வீரன் வலது பக்கக் கொண்டையிட்டுள்ளான். இடது கையில் வில் ஏந்திய நிலையில் உள்ளது. வீரனின் மார்பு வரை மட்டுமே மேலே தெரிகிறது. சின்ன வடசேரியைச் சேர்ந்த சில குடும்பங்கள்  இக்கல்லை வழிபடுகின்றனர்.

மற்றொரு நடுகல்...

மேல்குப்பம்-சின்ன வடசேரி எல்லையில் நாயக்கர் காலத்தைச் சேர்ந்த மற்றொரு நடுகல் காணப்படுகிறது.

இது உடன் கட்டை நடுகல் ஆகும். கும்பிடும் நிலையில் ஓர் ஆண் உருவமும், அதன் அருகே பெண் உடன் கட்டை ஏறிய தற்கான அடையாளத்தோடு நடுகல் காணப் படுகிறது.

இந்த நடுகல் சேத மடைந்து சரியான உருவமின்றிக் காணப் படுகிறது. இந்த நடுகல் லை இவ்வூர் மக்கள் தேசத்துமாரி என்ற பெயரில் வழிபட்டு வரு கின்றனர்.

இவ்வூரை மேலும் ஆய்வுக்கு உட்படுத்தினால் பல வர லாற்றுத் தடயங்கள் வெளிப் படும் என்றார் அவர்.

- விடுதலை நாளேடு, 21.8.19

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...