
சனி, 31 ஆகஸ்ட், 2019
4,000 ஆண்டுகளுக்கு முந்தைய பாறைக் கீறல் ஓவியங்கள் கண்டெடுப்பு

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019
கீழடியில் சுடுமண்ணால் செய்யப்பட்ட குழாய் கண்டுபிடிப்பு
சிவகங்கை, ஆக.30 சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் 5-ஆம் கட்ட அகழாய்வு பணியில் சுடு மண்ணால் செய்யப்பட்ட குழாய் புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.
கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் 5-ஆம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த ஜூன் 13 -ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 700-க்கும் மேற்பட்ட தொல் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கடந்த சில தினங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுப் பணியில் பழங்கால மக்கள் பயன்படுத்திய தொட்டி மற்றும் தண்ணீர் செல்வதற்கான வடிகால் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து28.8.2019 அன்று மேற்கொண்ட அகழாய்வின் போது சுடு மண்ணால் செய்யப்பட்ட பழங்கால குழாய் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே தண்ணீர் தொட்டி , தண்ணீர் செல்வதற்கான வடிகால் கண்டுபிடிப்பை தொடர்ந்து சுடுமண்ணால் செய்யப்பட்ட குழாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இங்கு வாழ்ந்த மக்கள் தங்கள் புழக்கத்துக்கு தேவையான நீரினை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கடத்துவதற்கு இதுபோன்ற வடிகால் மற்றும் குழாய்களை பயன்படுத்தி இருக்கலாம் என தொல்லியல் துறை அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- விடுதலை நாளேடு, 30.8.19
வியாழன், 29 ஆகஸ்ட், 2019
வாணியம்பாடி அருகே 2 நடுகற்கள் கண்டெடுப்பு
வாணியம்பாடி, ஆக.21 திருப் பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியர் க.மோகன் காந்தி, காணிநிலம் மு.முனிசாமி ஆகியோர் மேற் கொண்ட கள ஆய்வில் இந்த நடுகற்கள் கண்டெடுக்கப்பட் டுள்ளன.
இதுகுறித்து க.மோகன் காந்தி கூறியது: வாணியம் பாடியை சுற்றியுள்ள பகுதிகள் ஆந்திர எல்லைப் பகுதியில் இருப்பதால் அக்காலத்தில் அந்நியர் படையெடுப்பு மிகுதி யாக இருந்தது. அப்போது, நடந்த போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு ஆங் காங்கே நடுகற்கள் அமைக்கப் பட்டுள்ளதைக் காணமுடிகிறது.
அதன்படி, சின்ன வட சேரியில் கற்திட்டை வடிவிலான நடுகல் கண்டெடுக்கப்பட் டுள்ளது. அதன் அமைப்புப் பிற்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்ததாகத் தெரிகிறது. இந்த நடுகல் மூன்றடி ஆழத்தில் புதைந்த நிலையில் உள்ளது. 3 பக்கமும் பலகைக் கல்லால் மூடி, மேற்பகுதியிலும் பெரிய பல கைக் கல்லைக் கொண்டு மூடும் அமைப்புக்கு கற்திட்டை வடி வம் என்று பெயர். இந்த நடுகல் லும் 3 பக்கமும் பலகைக் கல்லால் மூடப்பட்டு, மேலே ஒரு பலகைக் கல் கொண்டு மூடப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் கல் சேதமடைந்த நிலை யில் உள்ளது. இக்கலில் உள்ள வீரன் வலது பக்கக் கொண்டையிட்டுள்ளான். இடது கையில் வில் ஏந்திய நிலையில் உள்ளது. வீரனின் மார்பு வரை மட்டுமே மேலே தெரிகிறது. சின்ன வடசேரியைச் சேர்ந்த சில குடும்பங்கள் இக்கல்லை வழிபடுகின்றனர்.
மற்றொரு நடுகல்...
மேல்குப்பம்-சின்ன வடசேரி எல்லையில் நாயக்கர் காலத்தைச் சேர்ந்த மற்றொரு நடுகல் காணப்படுகிறது.
இது உடன் கட்டை நடுகல் ஆகும். கும்பிடும் நிலையில் ஓர் ஆண் உருவமும், அதன் அருகே பெண் உடன் கட்டை ஏறிய தற்கான அடையாளத்தோடு நடுகல் காணப் படுகிறது.
இந்த நடுகல் சேத மடைந்து சரியான உருவமின்றிக் காணப் படுகிறது. இந்த நடுகல் லை இவ்வூர் மக்கள் தேசத்துமாரி என்ற பெயரில் வழிபட்டு வரு கின்றனர்.
இவ்வூரை மேலும் ஆய்வுக்கு உட்படுத்தினால் பல வர லாற்றுத் தடயங்கள் வெளிப் படும் என்றார் அவர்.
- விடுதலை நாளேடு, 21.8.19
தமிழ்நாட்டில் ஓலைச்சுவடிகளில் எழுதும் பல்வேறு எழுத்தாணிகள் கண்டுபிடிப்பு
Viduthalai May 25, 2023 தமிழ்நாடு, மதுரை மே 25 - தமிழர்கள் ஓலைச் சுவடியில் எழுதப் பயன்படுத்திய வெண்கலம், இரும்பாலான கூரெழுத்தாணி,...

-
புராணங்கள் கற்பனை என்பதில் எந்த மறுப்பும் இல்லை. ஆனால், அவற்றுள் நுழைத்துள்ள சில உள்ளார்ந்த கருத்துகள் அன்றைய நிகழ்வுகளை அடிப்படையாகக் க...
-
பரவலாக வரலாற்றை நன்கறிந்தவர்கள் ராசராச சோழனை தெலுங்கன் என்று சொல்லுகிறார்கள். அதாவது கொல்டி என்பதே இதனுடைய ஆழமான அர்த்தமுறை. ராசராச...
-
திருப்பத்தூர், ஏப்.12 திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர் க.மோகன்காந்தியும், காணிநிலம் மு.முனிசாமியும் மேற்...