செவ்வாய், 23 ஜனவரி, 2018

நம்பூதிரி பிராமணர்கள் கேரளத்தில்

முதல் பிள்ளைக்கு ஒரு நம்பூதிரிதான் அப்பனாக இருக்க வேண்டும். அர்த்தமுள்ள இந்துமதம் சொல்லித்தருவது.

இப்படி எதுவும் நடக்கவே இல்லை என்று இந்த ஒழுக்கசீலர்கள் மறுக்க முடியுமா?.

வடநாட்டைச் சேர்ந்த நம்பூதிரி பிராமணர்கள் கேரளத்தில் குடியமர்த்தப்பட்டனர். நம்பூதிரி குடும்பத்தின் முதல் மகன் வைசிய, சத்திரிய அல்லது சூத்திரப் பெண்ணைத்தான் மணக்க வேண்டும் என்ற விதி அன்று உருவாக்கப்பட்டது. இதைவிடத் தைரியமான இன்னொரு விதி என்னவென்றால், எந்த சாதியை சேர்ந்த திருமணமான பெண்ணாக இருந்தாலும், அவளுடைய முதல் பிள்ளைக்கு ஒரு நம்பூதிரிதான் அப்பனாக இருக்க வேண்டும்.

அதற்குப் பின்னர்தான் அவளுடைய கணவனின் மூலம் அவள் மற்ற பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற விதி இருந்தது. இன்றைக்கு இந்தப் பரிசோதனையை ஒழுக்கக்கேடு என்று கூறுவார்கள். இந்த விதி முதல் குழந்தைக்கு மட்டும்தான் என்பதால் அதனை ஒழுக்கக்கேடு என்று கூற முடியாது என்றார்கள் அன்று. (எம்.எஸ்.கோல்வால்கர், ஆர்கனைசர், ஜனவரி-2, 1961, பக்கம்-5)”

2004 ஆம் ஆண்டில் கோல்வால்கரின் எழுத்துகளை 12 தொகுதிகளாக வெளியிட்ட ஆர்.எஸ்.எஸ்., 5-வது தொகுதியில் 28-32 பக்கங்களில் இடம்பெற்றுள்ள இந்த உரையிலிருந்து மேற்கண்ட வரிகளை சத்தம் போடாமல் நீக்கிவிட்டது. ஆனால் என்ன செய்வது, நூலகங்களிலிருந்து ஆர்.எஸ்.எஸ்-ன் அதிகாரபூர்வ ஏடான ஆர்கனைசர் பத்திரிகையை இதுவரை நீக்க முடியவில்லை.

“பிள்ளை இல்லாமல் அந்தந்தக் குலம் நசிவதாக இருந்தால் அப்போது அந்தப் பெண்ணானவள் தன் கணவன் மற்றும் மாமனாரின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு தன் மைத்துனன் அல்லது தன் கணவனுக்கு ஏழு தலைமுறைக்கு உட்பட்ட பங்காளி இவர்களோடு மேற் சொல்கிறபடி புணர்ந்து குலத்திற்குத் தக்கதான ஒரு பிள்ளையை பெற்றுக் கொள்ளலாம் (மனு 9-59)“ என மனு அன்றே அயோக்கியத்தனத்திற்கு பச்சைக் கொடி காட்டிவிட்டான். இப்படி எதுவும் நடக்கவே இல்லை என்று இந்த ஒழுக்கசீலர்கள் மறுக்க முடியுமா?.
தமிழ்ர்களே வரலாற்றை படியுங்கள்.வரலாறு தெரியாத எந்த இனமும் தன் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக்கொள்ள முடியாது.
- இராமசாமி முத்துக்கிருஷ்ணன், முகநூல் பதிவு, 24.1.18

திங்கள், 22 ஜனவரி, 2018

ஆய்வுக் கட்டுரையை மேற்கோள்காட்டிதானே வைரமுத்துப் பேசி இருக்கிறார் - இதில் என்ன குற்றம்?

ஆய்வுக் கட்டுரையை மேற்கோள்காட்டிதானே

வைரமுத்துப் பேசி இருக்கிறார் - இதில் என்ன குற்றம்?

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி  கேள்வி

விசாரணைக்கு இடைக்காலத் தடை

 

சென்னை, ஜன.20 கவிஞர் வைரமுத்து ஆண்டாள்பற்றிக் குறிப்பிடும்பொழுது, மேற்கோள் காட்டியது எப்படித் தவ றாகும்? என்று வினா தொடுத்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் மேலும் விசா ரணைக்கு இடைக்காலத் தடையும் விதித் துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் கவிஞர் வைரமுத்து தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் ஒரு தமிழ் பத்திரிகையில் கடந்த 8-ஆம் தேதி நான் எழுதிய கட்டுரை வெளியானது. அதில், இந்து மக்களால் பெண் தெய்வம் என்று அழைக்கப்படும் ஆண்டாளை அமெரிக்காவை சேர்ந்த ஒரு அறிஞர், தேவதாசி என்று குறிப்பிட்டுள்ளார் என்று மேற்கோள் காட்டியிருந்தேன்.

இதையடுத்து நான் இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டதாகவும், ஆண் டாளின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விட்டதாகவும், சட்டம்-- - ஒழுங்கு பிரச் சினை ஏற்பட்டதாகவும் கூறி என் மீது சென்னை கொளத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசுவ இந்து பரிசத் அமைப்பின் ஒரு அங்கமான சமுதாய நல்லியக்கப் பேரவையின் நிர் வாகி முருகானந்தம் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தவறாக சித்தரிப்பு

புகாரில், அமெரிக்க அறிஞரின் ஆய்வு அறிக்கையை குறிப்பிட்டு, ஆண்டாளின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக எனக்கு எதிராக அவர் குற்றம்சாட்டியுள் ளார். ஆனால், அந்த கட்டுரையில் ஆண்டாளை பற்றி நான் நல்லவிதமான கருத்துக்களை தான் குறிப்பிட்டுள்ளேன்.

ஆனால், நான் மேற்கோள்காட்டிய ஆய்வு கட்டுரையை, ஒரு அரசியல் கட்சி யின் நிர்வாகி தவறாக சித்தரித்து பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார். அவர் கூறும் அந்த கருத்துகள் கட்டுரையில் எந்த ஒரு இடத்திலும் இல்லை. ஆனால், இதன் பின்னர் ஆண்டாள் குறித்த ஆய்வுக் கட்டுரை தவறாக மக்களுக்கு தெரியப் படுத்தப்பட்டுள்ளது. இதனால் என் மீது புகார் செய்யப்பட்டு சட்டத்துக்கு புறம் பாக என் மீது வழக்கும் பதிவு செய்யப் பட்டுள்ளது.

ரத்துசெய்ய வேண்டும்

நான் ஏற்கெனவே, அப்பர், கம்பன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், திரு வள்ளுவர் உள்ளிட்டோர் குறித்து ஆய்வு அறிக்கைகள் வெளியிட்டுள்ளேன். தற் போது, கடைசியாக ஆண்டாள் குறித்த கட்டுரையை எழுதியுள்ளேன். என்னு டைய கட்டுரையை தவறாக புரிந்து கொண்டு என் மீது இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை ரத்துசெய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ஆய்வுக் கட்டுரையை மேற்கோள்காட்டி தானே கட்டுரையை மனுதாரர் எழுதியுள்ளார்? இதை ஏன் பெரிய பிரச்சினையாக உருவாக்க வேண் டும்? என்று கருத்து தெரிவித்தார்.

ஏற்க மறுப்பு

அப்போது வழக்குரைஞர் ஒருவர் ஆஜராகி, வைரமுத்து மீதான வழக்கை ரத்துசெய்ய கூடாது என்று மனு தாக்கல் செய்துள்ளேன். அதனால், இந்த வழக்கில் என் தரப்பு கருத்தையும் கேட்கவேண்டும் என்றார். அதேபோல தேவராஜன் என்பவர் ஆஜராகி, நான் ஒரு இந்து. வைரமுத்து என் மத உணர்வை புண்படுத்திவிட்டார். அதனால், என்னையும் ஒரு மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று கூறினார். ஆனால், இவர்களது கோரிக்கையை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார்.

இடைக்கால தடை

பின்னர் அரசு தரப்பு வழக்குரைஞர், மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் ஆகியோர் வாதம் செய்தனர். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, வைரமுத்து மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார். இந்த மனு மீதான விசா ரணையை பிப்ரவரி மாதத்துக்கு தள்ளிவைத்தார்.

==================

- விடுதலை நாளேடு, 20.1.18

வியாழன், 11 ஜனவரி, 2018

திப்புவின் ஆட்சியில் 3000 பார்ப்பனர்கள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டனரா?




 

திப்பு சுல்தானைப் பற்றி அவதூறு பரப்புவது பார்ப்பனர்களின் - பாரதீய ஜனதாகாரர்களின் வாடிக்கையாகி விட்டது. இவ்வார ‘துக்ளக்’கில் கூட (16.11.2017) வந்த ஒரு கேள்வி பதிலைப் பாருங்கள்.

கே: கர்நாடக பா.ஜ.க.வினரின் திப்புசுல்தான் எதிர்ப்புணர்வு சரியானதா? இது தேவையற்ற மத மோதலுக்கும், மனக் கசப்பிற்கும் வித்திடாதா?

பதில்: திப்புசுல்தான் கேரளாவில் செய்த அட்டூழியங்கள் சரித்திரத்தில் இடம் பெற்றி ருக்கின்றன. நம் நாட்டில் காசி, மதுரா கோவில்களை இடித்த ஔரங்கசீப்புக்கு பின் சரித்திரத்தைப் பற்றிப் பேசுவது கூட மத மோதலை ஏற்படுத்தும் என்று, அபத்தமாகப் பேசுவது மதச்சார்பற்ற அரசியலின் தத்துவமாகி விட்டது. சரித்திரம் என்பது எல்லோருக்கும் பொதுவான உண்மை. அதை ஏற்க வேண்டும். அப்போதுதான் அது திரும்ப நடக்காது. சரித்திரம் தவறாக இருந்தால், அதைத் திருத்த வேண்டுமே தவிர, அதை மறைக்கவோ, மறுக்கவோ கூடாது.

என்று பதில் எழுதுகிறார் திருவாளர் குருமூர்த்தி அய்யர், ஆனால் உண்மை வரலாறு என்ன? இந்தக் கட்டுரையை படியுங்கள். உண்மை தெரியும்.

இந்தியாவில் முஸ்லீம் மன்னர்கள் ஆட்சி காலத்தில் கூட - பார்ப்பனர்கள் தான் அவர்களை ஆட்டி படைத்திருக்கிறார்கள். திப்பு சுல்தான் காலத்திலும் இதுதான் நிலைமை. ஆனால் திப்பு சுல்தான், இஸ்லாம் மார்க்கத்தில் சேருமாறு கட்டாயப்படுத்திய தால், 3000 பார்ப்பனர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று டாக்டர் ஹர்பிரசாத் சாஸ்திரி என்ற பார்ப்பன வரலாற்று ஆசிரியர் உண்மைக்கு மாறான தகவலை எழுதினார். இது எந்த ஆதாரமும் இல்லாத ஒரு புரட்டு என்பது - பிறகு ஆதாரத்துடன் தெரிய வந்தது.

திப்பு சுல்தான் என்ற முஸ்லீம் மன்னர் காலத்திலும் - பார்ப்பனர்களே  ஆட்சியை ஆட்டிப்படைத்தார்கள் என்பதையும் அந்த ஆட்சியில் 3000 பார்ப்பனர்கள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் வரலாற்றுப் புரட்டையும், பி.என்.பாண்டே எனும் வர லாற்று அறிஞர் அம்பலப்படுத்தியிருக்கிறார்.

இந்த சுவையான தகவல் ‘முஸ்லீம் இந்தியா’ பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.

செய்தி விவரம்:

ஒரிசா மாநில கவர்னராக இருப்பவர் பி.என்.பாண்டே வரலாற்று அறிஞர் - நூலாசிரியர் - முன்னாள் எம்.பி.யும் கூட. 1986 டிசம்பர் 19இல் ‘குதாபக்ஷ் நினைவுச் சொற்பொழிவு’ நிகழ்த்தினார். முஸ்லீம் மன்னர்களைப் பற்றி அவதூறுகள், பொய் யுரைகள், கற்பனைகள், துவேஷக் கருத்துகள் எவ்வளவு எழுப்பப்படுகின்றன; திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன. என்பதை தகுந்த ஆதாரங்களுடன் விளக்கி உள்ளார். அவரின் சொற்பொழிவில் ‘திப்பு சுல்தான்’ பற்றிய ஒரு வரலாற்றுப் புரட்டு விளக்கப்பட் டுள்ளது.

1928இல் அலகாபாத்தில் ஆய்வு செய்து கொண்டிருந்தேன். என் ஆய்வுக்குரிய பொருள் திப்பு சுல்தான்! ஆங்கிலோ - பெங்காளி மாணவர் பேரவையினர் என்னை அணுகி, சரித்திரப் பேரவையைத் தொடங்கி வைத்து உரையாற்ற வேண்டுமென வேண்டினர். கல்லூரியில் இருந்த வந்த மாணவர்கள் வரலாற்றுப் புத்தகங்களுடன் இருந்தனர். அவர்களிடத்தில் உள்ள சரித்திரப் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தேன். திப்புசுல்தான் பற்றி அதில் எழுதப்பட்டிருந்த தைப் பார்த்ததும் அது என்னை மிகவும் கவர்ந்தது. படித்தேன்; என் மனம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியது.

“மக்கள் வலுக்கட்டாயமாக இஸ்லாம் மார்க்கத்தில் மத மாற்றம் செய்யப்பட்டதால் 3000 பார்ப்பனர்கள் தற்கொலை செய்து கொண்டனர்”

திப்பு சுல்தான் இதைச் செய்தார் என்று எழுதப்பட்டிருந்தது.

அந்த சரித்திர பாடப்புத்தகத்தை எழுதியவர் மகா மஹோபாத்தியாயா டாக்டர் ஹர்பிரசாத் சாஸ்திரி - அவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்துறைத் தலைவராக இருப்பவர்.

ஆதாரம் என்ன?

திப்புவைப் பற்றிய இந்தச் செய்தியைப் பார்த்த நான், சாஸ்திரிக்கு உடனே கடிதம் எழுதினேன். இந்த மதமாற்றம், தற்கொலை பற்றிய செய்திக்கு ஆதாரம் எங்கே கண்டீர்கள் என்று கேட்டு  பலமுறை கடிதம்  எழுதிய பிறகு பதில் வந்தது. அதில் மைசூர் கெஜட்டீயர் ஆதார நூல் என்று கூறப்பட்டது.

மைசூர் கெஜட்டீயரை அலகாபாத்திலோ கல்கத்தாவில் உள்ள இம்பீரியல் நூலகத் திலோ காண முடியவில்லை. மைசூர் பல்கலைக்கழகத் துணை வேந்தர் சர் பிரிஜ்ஜேந்திரநாத்சீல் அவர்களுக்கு எழுதி, சாஸ்திரியாரின் கூற்றுக்கு மைசூர் கெஜட்டீரியல் ஆதாரமிருக்கிறதா? எனக் கேட்டேன். துணைவேந்தர் அவர்கள் என் கடிதத்தை பேராசிரியர் சிறீகாந்தையா அவர்களிடம் அனுப்பினார். காரணம் அவர் தான் மைசூர் கெஜட்டீயரின் மறு பதிப்பு அச்சிடும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

பேராசிரியர் சிறீகாந்தையா எனக்கு எழுதிய கடிதத்தில், 3000 பார்ப்பனர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மைசூர் கெஜட்டீயரில் எந்த இடத்திலும் குறிப்பிட வில்லையே என எழுதினார்.

அதோடு  அவர் மைசூர் வரலாற்றில் ஆய்வு செய்தவரும் ஆவார்.  அப்படியொரு சம்பவம் மைசூர் வரலாற்றில் நிகழ்ந்ததே இல்லை என்று தீர்க்கமாகக் கூற முடியும் என்றும் எழுதி இருந்தார்.

அவர் மேலும் எழுதியிருந்ததாவது:

திப்பு சுல்தானின் பிரதம மந்திரி ஒரு பார்ப்பனர்தான். அவர் பெயர் பூர்ணியா. அவரின் சேனாதிபதியும் ஒரு பார்ப்பனரே. அவரின் பெயர் கிருஷ்ணாராவ். (இந்த இடத்தில் ஓர் உண்மையைத் தெரிந்து கொள்வது நல்லது. மைசூரில் வாழ்ந்த ராவ்களுக்கு ‘ஆலமென்’ என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. திப்பு சுல்தான் ஆட்சியில், ‘அல் அமீல்’ என்ற அரபிப் பதத்தின் சிதைவானதே ‘ஆலமென்’ ஆகும். அதாவது திப்பு சுல்தானின் ‘நம்பிக்கைக்கு உரியவர்கள்’ ஆக கருதப்பட்டு, நம்பப்பட்டவர்கள் பார்ப்பனர்கள் ஆகும். அந்த நம்பிக்கைக்கு உரியவர்களாக அவர்கள் வாழ்ந்து வரலாறு படைத்தார்களா என்பது கேள்விக்குறியாகும். இருப்பினும் திப்பு சுல்தான் பார்ப்பனர்களை முழுமையாக நம்பியிருந்தார் என்பது தான் உண்மை வரலாறு - ஆசிரியர் குறிப்பு)

அதோடு வேறு சில தகவல்களையும் எனக்கு அனுப்பி இருந்தார். ஆண்டுதோறும் மான்யங்கள் வழங்கப்பட்டு வந்த 156 கோயில் களின் பட்டியல் வந்தது. சிருங்கேரிநாத் ஜகத்குரு சங்கராச்சாரி அவர்களுடன் திப்புசுல்தான் மிக அணுக்கமான உறவு கொண்டிருந்தார். ஆச்சாரியாருக்கு சுல்தான் எழுதிய 30 கடிதங்களின் போட்டோ நகல்களும் வந்தன.

மைசூர் மன்னர்களிடையே ஒரு பழக்கமிருந்தது. ரங்கநாதர் கோவிலுக்கு காலை உணவுக்கு முன் சென்று பார்வையிட்டு வருவது ஒவ்வொரு அரசரின் வழக்கமாகும். அதே பழக்கத்தை திப்புவும் மேற்கொண்டிருந்தார்.

பேராசிரியர் சிறீகாந்தையா ஒரு அனுமானத்தையும் கூறி இருந்தார். கர்னல் மைல்ஸ் என்பவர் ‘ஹிஸ்டரி ஆஃப் மைசூர் என்னும் நூல் எழுதி இருக்கிறார். அதில் தப்பும், தவறும் ஏராளமுண்டு. ஒரு வேளை டாக்டர் சாஸ்திரி அந்தப் புத்தகத்தைப் பார்த்து எழுதி இருந்தாலும் இருக்கலாம்’  என்று எழுதி இருந்தார். கைல்ஸ் எழுதிய புத்தகம் திப்பு சுல்தான் வரலாறு என்னும் பாரசீக புத்தகத்தை ஆதாரமாகக் கொண்டதெனவும் அந்நூல் விக்டோரியா மகாராணியின் சொந்த நூலகத்தில் உள்ளதென்றும் கூறப்பட்டது. அதையும் விசாரித்துப் பார்த்ததில் விக்டோரியா மகாராணி நூலகத்தில் அப்படியொரு நூலோ, அதன் கையேட்டுப் பிரதியோ கிடையாது என்று தெரிய வந்தது.

ஆனால் விந்தை என்னவென்றால் டாக்டர் சாஸ்திரி எழுதிய வரலாற்றுப் புத்தகம், வங்காளம், அஸ்ஸாம், பீகார், ஒரிஸா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள உயர் நிலை பள்ளிக்கூடங்களில் சரித்திரப் பாடப் புத்தகமாக பிரசுரிக்கப்பட்டிருந்தது.

கல்கத்தா பல்கலைக்கழக துணைவேந்தர் சர் அஷூகோஸ் சவுத்திரிக்கு, எல்லா விவரங்களையும் எழுதினேன். டாக்டர் சாஸ்திரி, மைசூர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சர். பிரஜேந்திரநாத் சீல், பேராசிரியர் சிறீகாந்தையா ஆகியோருடன் கொண்ட கடிதத் தொடர்புகளின் நகல் களையும் அனுப்பி வைத்தேன். டாக்டர் சாஸ் திரியின் சரித்திரப் பாடப் புத்தகத்திலுள்ள சரித்திரப்புரட்டு நீக்கப்படுவதற்கு உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன்.

சாஸ்திரியின் பாடப்புத்தகத்தை பாட நூலாக ஏற்றதை நீக்கி, அதைப் போதிக்கக் கூடாது என்று உத்தரவு போடப்பட்டதாக சர் அஷூகோஷ் சவுத்திரி உடனே பதில் எழுதினார்.

ஆனால் இந்த பார்ப்பன தற்கொலை பொய்யுரை இன்றுங்கூட சில பாடப்புத்தகங் களில் இடம் பெற்றிருப்பதைக் காணும் போது எனக்கு பேராச்சரியம் ஏற்படுகிறது!

இவ்வாறு பி.என்.பாண்டே தனது சொற்பொழிவில் குறிப்பிட்டுள்ளார்.

எனவேதான் பிரிட்டிஷார் வருகைக்கு முன் இந்தநாட்டில் நிலவியது ‘பார்ப்பன பொருள் உற்பத்தி முறை’ என்று நாம் கூறுகிறோம்!

உண்மை புரிகிறதா? பார்ப்பன உன்மத்தர் களின் புரட்டின் உயரமும் ஆழமும் எத்தகையது என்பது விளங்குகிறதா!
- விடுதலை ஞாயிறு மலர், 11.11.17

புதன், 3 ஜனவரி, 2018

2017ஆம் ஆண்டு முக்கிய நிகழ்வுகள்

ஜனவரி



ஜன. 2: ஜாதி, மதத்தின் பெயரை பயன்படுத்தி தேர்தலில் ஒட்டுகேட்பது சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

ஜன. 4: சென்னையில் நடைபெற்ற பொதுக்குழுவில் தி.மு.க. செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

ஜன. 8: பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக விடுத்த அழைப்பை ஏற்று தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் திரண்டு மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜன. 9: பொங்கல் விழாவை பொதுவிடுமுறை பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஜன. 13: மாஞ்சா நூலுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஜன. 20: தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் 25 லட்சம் பேர் ஈடுபட்டனர். சென்னையில் 10 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழகத்தில் திமுக ரயில் மறியல் போராட்டம் நடத்தியது.

ஜன. 23: தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க வகை செய்யும் நிரந்தர சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேறியது.

ஜன. 24: நாடு முழுவதும் உள்ளகூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனுக்கான ரூ.665 கோடி வட்டியை மத்திய அரசு ரத்து செய்தது.

* ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் 8 நாட்கள் நடந்தபோராட்டம் முடிவடைந்தது.

ஜன. 25: அமெரிக்க வளாகத்தில் முதன்முதலாக இந்திய வம் சாவளியை சேர்ந்த பெண் நிக்கி ஹாலிக்கு, கேபினட் அந்தஸ்து கிடைத்துள்ளது. அவர் அய்.நா. சபைக்கான தூதராக நியமிக்கப்பட்டதற்கு செனட் சபை அங்கீகாரம் அளித்தது.

ஜன. 30: தமிழக சட்டசபையில் ஒரு மனதாக நிறை வேற்றப்பட்ட ஜல்லிக்கட்டு அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கினார்.

பிப்ரவரி



பிப். 1: மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ரூ. 3 லட்சத்துக்கு மேல் ரொக்க பரிமாற்றத்துத் தடை விதிக்கப்பட்டது.

பிப். 5: சென்னையில் நடந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சசிகலா முதல் அமைச்சராக தேர்வு செய்யப்பட் டார். அவரது பெயரை ஒ.பன்னீர் செல்வம் முன்மொழிந்தார்.

* முதல்-அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தனது பதவியை விட்டு விலகினார். அதற்கான கடிதம் ஆளுநர் மாளிகையில் ஒப்படைக்கப்பட்டது.

பிப். 14: சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு விதிக்கப் பட்ட 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.10 கோடி அபராதத்தையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. அவரை உடனடியாக சரண் அடைய உத்தரவிட்டது. இதே போன்று சசிகலா உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் பெங்களூரு கோர்ட்டு அளித்த 4 ஆண்டு சிறை மற்றும் ரூ.10 கோடி அபராதத் தொகையையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

* தீர்ப்பு வந்த சிறிது நேரத்தில் கூவத்தூரில் தங்கியிருந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் சட்டப் பேரவைத் தலைவராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்தனர்.

பிப். 15: ஒரே நேரத்தில் 104 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி இஸ்ரோ உலக சாதனை படைத்தது.

பிப். 16: தமிழகத்தின் புதிய முதல் அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றார். அவருடன் செங்கோட்டையன் உள்பட 30 அமைச்சர்கள் பதவி ஏற்றனர்

பிப். 18: நம்பிக்கை வாக்கெடுப்பின்  போது ஏற்பட்ட ரகளையால் தமிழக சட்டசபை போர்களமானது. சபாநாயகரின் மைக் உடைக்கப்பட்டது மோதலில் மு.க.ஸ்டாலின் சட்டை கிழிந்தது. திமுக உறுப்பினர்களை வெளியேற்றிய பின்னர் நடந்த வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி அரசு 122 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது.

* எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக மெரினாவில் காந்தி சிலை அருகே பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின், கனிமொழி, திமுக எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டனர்.

பிப். 20: காவிரி நடுவர் மன்ற தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி அபயமனோகர் சப்ரே நியமிக்கப்பட்டார்.

மார்ச்



மார்ச் 6: பாபர்மசூதி இடிப்பு விவகாரத்தில் எல்.கே.அத்வானி, முரளிமனோகர்ஜோஷி உள்ளிட்டோர் விடுவிக்கப் பட்டதை ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியது.

மார்ச் 9: ஜெயலலிதா மரணம் அடைந்ததால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப். 12இல் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

மார்ச் 11: உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாரதீய ஜனதா   ஆட்சியை கைப்பற்றியது. முதல் அமைச்சர் அகி லேஷ் யாதவ் தோல்வி அடைந்தார். உத்தரகாண்டிலும் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியை பிடித்தது. பஞ்சாபில் காங்கிரசு கட்சி ஆட்சியை கைப்பற்றியது. மணிப்பூர், கோவாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

மார்ச் 15: ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வேட்பாளராக டி.டி.வி. தினகரனும் தி.மு.க. வேட்பாள ராக மருதுகணேசும் போட்டியிடுவதாக அறிவிப்பு.

மார்ச் 20: நியூட்ரினோ திட்டத்துக்கு மத்தியசுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதியை ரத்து செய்து தேசிய பசுமை தீர்பாயம் உத்தரவு.

மார்ச் 21: காவிரி வழக்கில் ஜூலை 11 முதல் இறுதி விசாரணை நடைபெறும் என்றும் தமிழகத்துக்கு கருநாடகம் நொடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மார்ச் 22: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் இரு அணிகளில் யாருக்கும் இரட்டை இலை சின்னம் கிடையாது என்றும் அந்த சின்னம் முடக்கப்படும் என்றும் அதிமுக கட்சி பெயரை யாரும் பாயன்படுத்தக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

மார்ச் 23: தமிழக சட்டப்பேரவையில் அவைத்தலைவர் ப..தனபாலுக்கு எதிரான தீர்மானம் தோல்வி அடைந்தது. தி.மு.க. கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவாக97 பேரும் எதிராக 122 பேரும்வாக்களித்தனர். ஓ.பி.எஸ். அணி புறக்கணிப்பு.

* தமிழகத்துக்கு வார்தா - வறட்சி நிவாரண நிதியாக ரூ. 2,014 கோடியே 45 லட்சத்தை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது.

மார்ச் 27: நெடுவாசல், காரைக்கால் உள்ளிட்ட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்ட ஒப்பந்தம் கையெழுத் தானது. மக்களுடன் கலந்து ஆலோசித்த பிறகே திட்டம் தொடங்கப்படும் என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரபிரதான் அறிவித்தார்.

மார்ச் 29: நாடாளுமன்றத்தில் ஜி.எஸ்.டி.மசோதாக்கள் நிறைவேறின.

ஏப்ரல்

ஏப். 5: சென்னை உயர்நீதிமன்றத்தின் 47ஆவது தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி பதவி ஏற்றார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் 2ஆவது பெண் தலைமை நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப் 19: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளிமனோகர் ஜோசி, மத்திய அமைச்சர் உமாபாரதி உள்ளிட்ட 13 பேர் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்கும்படி சி.பி.அய்க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மே

மே 11: பிளஸ்-2 தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி மாணவர்களின் ரேங்க் பட்டியல் வெளியிடப் படமாட்டாது. குறைந்த மதிப்பெண் பெறுவோருக்கு மன அழுத்தம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மே 17: பிளஸ்-1 தேர்வுக்கும் இனிமேல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.

மே 21: தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவரப்படுகிறது. ஒவ்வொரு பாடத்திற்கும் வழங்கப் படும் 200 மதிப்பெண்களை 100 ஆக குறைக்கவும், 40 மதிப்பெண்ணுக்கு அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் கேட்கவும் முடிவு.

ஜூன்



ஜூன் 3: திமுக தலைவர் கலைஞரின் சட்டபேரவை வைரவிழா, 94ஆவது பிறந்த நாள் விழா சென்னையில்  நடந்தது. இதில் ராகுல்காந்தி, நிதிஷ்குமார் உள்ளிட்ட அகில இந்திய தலைவர்கள் பங்கேற்று கலைஞருக்கு புகழாரம் சூட்டினார்கள்.

ஜூன் 9: இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

ஜூன் 12: மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவை வெளியிட மதுரை உயர்நீதிமன்றம் விதித்த இடைக் கால தடையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜூன் 22: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் நாடாளுமன்ற முன்னாள் அவைத் தலைவர் மீராகுமார் வேட்பாளராக போட்டியிடுவார் என்று சோனியாகாந்தி அறிவித் தார்.

ஜூன் 23: மத்திய அரசின் ஸ்மார்ட் நகர திட்டத்துக்கு தமிழ்நாட்டில் இருந்து திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர் ஆகிய நகரங்கள் தேர்வு, புதுச்சேரியும் இடம் பிடித்தது.

* 11 லட்சம் பேர் எழுதிய மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவு வெளியானது. முதல் 25 இடங்களில் தமிழக மாணவர்கள் யாரும் தேர்வாகவில்லை.

ஜூன் 24: தவறான தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்த மத்திய பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவை 3 ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்தது.

ஜூன் 30: நாடாளுமன்ற மய்ய மண்டபத்தில் நள்ளிரவில் நடந்த சரக்கு, சேவை வரி அறிமுக விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து சரக்கு, சேவை வரி நாடு முழுவதும் அமலுக்கு வந்தது.

* ஈரான், லிபியா, சோமாலியா உள்ளிட்ட 6 நாடுகள் அமெரிக்காவில் நுழைவதற்கு டிரம்ப் நிர்வாகம் பிறப்பித்த தடை அமலுக்கு வந்தது.

ஜூலை

ஜூலை 3: தமிழகத்தில் அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடனையும் தள்ளுபடி செய்யுமாறு மதுரை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

ஜூலை 4: தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி.

ஜூலை 11: காங்கிரசு தலைமையிலான 18 எதிர்க்கட்சிகள் சார்பில் துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட மேற்கு வங்காள முன்னாள் ஆளுநரும் காந்தியின் பேரனு மான கோபால கிருஷ்ணகாந்தி தேர்வு செய்யப்பட்டார்.

ஜூலை 12: ஆதார் அட்டை தொடர்பான வழக்குகளை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

ஜூலை 14: மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மாநில பாட திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

ஜூலை 19: தமிழக எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் 2 மடங்காக உயருகிறது. மாதம் ரூ. 1 லட்சத்து 5 ஆயிரம் கிடைக்கும். தொகுதி மேம்பாட்டு நிதியும் ரூ. 2.5 கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது.

ஜூலை 20: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் 65 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

ஜூலை 26: பீகார் முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ்குமார் பதவி விலகினார்.

ஜூலை 27: பீகார் மாநில முதல் அமைச்சராக பா.ஜனதா ஆதரவுடன் நிதிஷ்குமார் மீண்டும் பதவி ஏற்றார். இதன் மூலம் மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடித்தது.

ஜூலை 31: மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர் களுக்கு மருத்துவ படிப்பில் 85 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியது செல்லாது என்று கூறிய உயர்நீதிமன்றம் தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியது.

ஆகஸ்டு



ஆக. 1: நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான அவசர சட்ட நகலை மத்திய அரசிடம் தமிழக அரசு வழங்கியது.

ஆக.3: நடுவர்மன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஏன்? என்பது பற்றி பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆக.4: இறப்பை பதிவு செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது.

ஆக.10: கும்பகோணத்தில்  நடந்த பள்ளி விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் 7 பேரை விடுதலை செய்த சென்னை உயர்நீதிமன்றம் பள்ளிக்கூட நிறுவனர் பழனி சாமியின் ஆயுள் தண்டனையைக் குறைத்து உத்தர

விட்டது.

ஆக.11: மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் தமிழக அரசு அறிவித்த 85 சதவிகித இடஒதுக்கீடு செல்லாது என்று உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

ஆக.12: உ.பி. அரசு மருத்துவமனையில் 5 நாட்களில் 60 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத் தையும் ஏற்படுத்தியது.

ஆக.15: சிறுவர்களை தற்கொலைக்கு தூண்டும் நீலத் திமிங்கல சவால் விளையாட்டுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதை இணைய தளத்தில் இருந்து உடனடியாக நீக்கவும் உத்தரவிட்டது.

* பீகாரில் வடக்குப் பகுதியில் தொடர் மழை, வெள்ளத் தினால் 78 பேர் சாவு.

ஆக.21: ‘நீட்’ தேர்விற்கு தமிழ்நாட்டுக்கு இந்த ஆண்டு விலக்கு இல்லை. நீட் தேர்வின் அடிப்படையில் தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.

* 3 முறை தலாக் கூறி விவாகரத்து பெறப்படும் முத்தலாக் நடைமுறை சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கூறியது.

ஆக.23: ஆதார் அட்டைக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தனிநபர் ரகசியம் காப்பது அடிப்படை உரிமை என்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.

ஆக.25: பாலியல் வழக்கில் மதத் தலைவர் குர்மீத் ராம் ரகீம்சிங் குற்றவாளி என தீர்ப்பு கூறப்பட்டதால்  அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் பயங்கர கலவரம் ஏற்பட்டது. இதில் 36 பேர் இறந்தவர்கள். ஆக.28இல் குர்மீத் சிங்கிற்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சி.பி.அய் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

செப்டம்பர்



செப். 1: நீட்தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து போராடிய மாணவி அனிதா தனது மருத்துவ கனவு தகர்ந்ததால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செப். 7: அரசு ஊழியர் - ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. அரசு ஊழியர் - ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு மதுரை உயர்நீதிமன்றம்  இடைக்கால தடை விதித்தது

செப். 9: மியான்மாவில் இருந்து 15 நாளில் 3 லட்சம் ரோகிங்யா முசுலிம்கள் வங்காளதேசத்தில் தஞ்சம் அடைந்திருப்பதாக அய்.நா.சபை புள்ளி விவரம் தெரிவித்தது.

செப். 13: சிங்கப்பூரின் முதல் பெண் அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹலிமா தேர்வு.

செப். 25: ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமியை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

அக்டோபர்

அக். 5: தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்றார்.

அக். 9: கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் 11 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை குஜராத் உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டயை£க குறைத்து உத்தரவிட்டது.20 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.

அக். 24: உயிருடன் இருப்பவர்களின் படத்துடன் பொது இடங்களில் பேனர் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை.

அக்.  27: ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ்இருக்கை ஏற்படுத்துவதற்காக தமிழ அரசின் சார்பில் ரூ. 10 கோடி நிதி வழங்கப்படும் என்று முதல் அமைசசர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

நவம்பர்

நவ. 6: வெளிநாடுகளில் 714 இந்தியர்கள் ரகசிய முதலீடு செய்து இருப்பதாக பாரடைஸ் பேப்பர்ஸ் ஆவணங்கள் அம்பலப்படுத்தியது.

நவ. 20: 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான அனைத்து பாடங்களுக்கு புதிய வரைவு பாடத்திட்டம் வெளியிடப்பட்டது. இதனை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

நவ. 23: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை இலை சின்னம் மற்றும் கட்சி பெயர் கொடியை பயன்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது.

நவ. 29: தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளை 6 மாத காலத்திற்குள் மூட வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

டிசம்பர்

டிச. 2: ஒக்கி புயலில் சிக்கி நடுக்கடலில் காணாமல் போன 1,000 மீனவர்களை கடற்படை மற்றும் கடலோர காவல்படை கப்பல்கள், ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி மும்முரம்,



டிச. 11: அகில இந்திய காங்கிரசு கட்சியின் தலைவராக ராகுல்காந்தி போட்டியின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

டிச. 12: உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் கவுசல்யாவின் தாயார் உள்பட 3 பேர் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப் பட்டனர்.

டிச. 13: ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற சென்னை - மதுரவாயல் காவல்நிலைய ஆய்வாளர் பெரிய பாண்டியன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

டிச. 16: காங்கிரசு தலைவராக போட்டியின்றி ராகுல் காந்தி பதவி ஏற்றுக் கொண்டார்.



டிச. 21: 2ஜி வழக்கில் இருந்து கனி மொழி எம்.பி. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்பட குற்றம் சாட்டப்பட்ட அனை வரையும் விடுதலை செய்து டில்லி சி.பி.அய். தனி நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.

- விடுதலை நாளேடு, 31.12.17

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...