திங்கள், 30 செப்டம்பர், 2019

2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான மிகப் பெரிய குத்துக்கல் கண்டெடுப்பு



கிருஷ்ணகிரி, செப்.30 குந்தாரப் பள்ளி அருகே 2 ஆயிரம் ஆண்டு களுக்கு முந்தைய மிகப்பெரிய குத்துக்கல்லை வரலாற்று ஆய்வா ளர்கள் அண்மையில் கண்டறிந் தனர்.

கிருட்டிணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப் படுத்தும் குழுவினர், மாவட்ட அரசு அருங்காட்சியகம் இணைந்து கிருட்டிணகிரி மாவட்டத்தில் பல்வேறு வரலாறுகளைக் கண்ட றிந்து, அவற்றைப் பதிவு செய்து வருகின்றனர்.

அதன்படி, குந்தாரப்பள்ளியை அடுத்த சாமந்தமலை கிராமத்தின் மேற்கு திசையில் உள்ள பாரத கோயில் அருகே ராஜாமணி என் பவருக்குச் சொந்தமான வேடங் கொல்லை என்ற விளைநிலத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பெரிய பெருங்கற்கால அரிய வகை குத்துக்கல்லைக் கண்டறிந்து ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து கிருட்டிணகிரி அரசு அருங்காட்சியகக் காப்பாட் சியர் கோவிந்தராஜ் வெள்ளிக் கிழமை தெரிவித்தது:  குத்துக்கல் என்பது 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்புக் கால மக்கள், இறந்தவர்களுக்காக எழுப்பும் நினைவுச் சின்னங்களில் ஒன்று.

பொதுவாக குத்துக்கல் என்பது 2 அடி அகலமும், 12 முதல் 15 அடி உயரத்துடன் அடிப்பகுதி பெருத்து,  நுனிப்பகுதி சிறுத்து செங்குத்துக் கல்லாக இருக்கும்.  பெரிய பலகை கல் போன்ற இந்த வகை குத்துக்கல் தேவனூர், மல்லசந்திரம், மகாராஜ கடை போன்ற இடங்களில் காணப்படுகின்றன.

திருவண்ணாமலை மாவட்டம்,  மோட்டூர், உடையார்நத்தம் ஆகிய இடங்களில் காணப்படும் குத்துக் கல் பலகைகள் பெண் அல்லது பறவை உருவ அமைப்பில் காணப் படுகின்றன. சாமந்தமலையில் கண் டறியப்பட்ட குத்துக்கல் சுமார் ஒன்பதரை அடி அகலமும்,  11 அடி உயரமும்,  ஓர் அடி கனமும் உள்ள கல் பலகையாகும்.

இந்த கல் பலகையில் விசிறிப் பாறையாக உருவம் வடிக்க முயற்சி செய்துள்ளதைக் காண முடிகிறது.

இந்த குத்துக்கல்லுக்கு மேற்கு திசையில் 250 மீட்டர் தொலைவில் இதே போன்ற ஒரு குத்துக்கல் காணப்படுகிறது.

இதுபோன்ற குத்துக்கல், தமிழகத்தில் ஒரு சில மட்டுமே உள்ளன.

இந்த ஆய்வில்,  கிருட்டிணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் தலைவர் நாராயணமூர்த்தி, வர லாற்று ஆய்வாளர் சுகவன முருகன், சின்னப்பன் உள்ளிட்டோர் ஈடு பட்டனர்.

- விடுதலை நாளேடு, 30. 9. 19

சனி, 28 செப்டம்பர், 2019

சிவகங்கை அருகே பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டெடுப்பு

செப்.28 சிவகங்கை அருகே கோவானூரில் உள்ள ஊருணி படித்துறையில் கி.பி. 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டுகளை தொல்லியல் ஆய்வா ளர்கள் கண்டறிந்துள்ளனர்.


சிவகங்கை மாவட்டம், கோவானூர் பகுதியில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. ராஜகுரு, தொல்லியல் ஆய்வாளர்கள் கொல்லங்குடி புலவர் காளிராசா, ராமநாதபுரம் மோ. விமல் ராஜ் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, கோவானூரில் உள்ள ஊருணி படித்துறையில் பழைமையான 6 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. அவை அனைத்தையும் படியெடுத்த பின்னர் கல்வெட்டு ஆய்வாளர் வே.ராஜகுரு கூறியது:

கோவானூர் முகப்பில் உள்ள ஊருணியின் கிழக்குக் கரையில் படித்துறையும், வடக்கில் ஒரு வரத்துக் கால்வாயும் உள்ளன. அந்த ஊருணி படித்துறையில் வெவ்வேறு தகவல்களைக் கொண்ட பழைமையான கல்வெட்டுகள் 6 துண்டுகளாக காணப்படுகின்றன.

மேலும், அங்குள்ள மற்றொரு கல்வெட்டில் கி.பி.1216 முதல் கி.பி.1244 வரை மதுரையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் "பூமருவிய திருமடந்தையும் புவிமடந்தையும்' எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தி 9 வரிகளில் உள்ளன. இதில், தஞ்சையும், உறந்தையும் செந்தழல் கொளுத்தியது, மாளிகையும், மண்டபமும் இடித்தது உள்ளிட்ட தகவல்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.

இக்கல்வெட்டுகளில், அரசின் வரிக் கணக்கை நிர்வகிக்கும் திணைக்கள நாயகம் பற்றியும், உழக்குடி முத்தன், தச்சானூருடையன், வீரபஞ்சான், முனையத்தரையன், அழகனான வானவன், விழயராயன், வந்தராயன் ஆகிய அரசு அதிகாரிகளின் பெயர்களும் பொறிக்கப் பட்டுள்ளன.

மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்று, கீழ்க்கூற்று, மதுரோதய வளநாடு, கீரனூர் நாடு, காஞையிருக்கை ஆகிய நாடுகளும், நல்லூர், மிழலைக் கூற்றத்து தச்சனூர், புல்லூர்க்குடி, மதுரோதய வளநாட்டு புறப்பற்று, காஞையிருக்கை உழக்குடி ஆகிய ஊர்களும் கல் வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.

கல்வெட்டில் வேலி, இருமா ஆகிய நில அளவுகளைக் குறிக்க குறியீடுகள் பயன்படுத்தப் பட்டுள்ளன. நெடில் எழுத்துகள் பெரும்பாலும் கல்வெட்டில் வருவதில்லை. ஆனால் இங்குள்ள ஒரு கல்வெட்டில் நீக்கி நீக்கி என்ற சொல் நெடிலாகவும், மற்றொன்றில் நிக்கி நிக்கி என குறிலாகவும் இடம்பெற்றுள்ளன.

இதுதவிர, இந்தப் பகுதியில் சங்க காலத்தைச் சேர்ந்த கருப்பு, சிவப்பு பானை ஓடுகள் அதிகளவில் காணப்படுகின்றன.
-  விடுதலை நாளேடு, 28.9.19

சனி, 14 செப்டம்பர், 2019

கீழடி அகழாய்வில் மேலும் ஓர் உறைகிணறு கண்டெடுப்பு




கீழடி, செப்.7 திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் 5-ஆம் கட்ட  அகழாய்வில் வெள்ளிக்கிழமை மேலும் ஒரு உறைகிணறு கண்டெடுக்கப்பட்டது.

கீழடியில் 2015-இல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. இதில் ஆயிரக்கணக்கான தொல்பொருள்கள் கண்டறியப்பட்டன. இதை பரிசோதித்ததில் சுமார் 2,500 ஆண்டுகள் பழைமையான நகர நாகரிகம் கீழடியில் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

தொடர்ந்து மத்திய தொல்லியல்துறை 2 மற்றும் 3-ஆம் கட்ட அகழாய்வோடு பணிகளை நிறுத்தி கொண்டது. இதையடுத்து தமிழக தொல்லியல் துறை 4-ஆம் கட்ட அகழாய்வை மேற் கொண்டது.

தொடர்ந்து 5-ஆம் கட்ட அகழாய்வு ஜூன் 13-ஆம் தேதி தொடங்கியது. இந்த அகழாய்வுப் பணி தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவனாந்தம் தலைமையில் நடைபெறுகிறது. இதுவரை 5 பேரின்  நிலங்களில் 30-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப் பட்டுள்ளன.

இதில் மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறைகிணறுகள், இரும்புப் பொருள்கள், செப்புக் காசுகள், உணவுக் குவளை, தண்ணீர் ஜாடி உள்பட 750-க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன. மேலும் அதிகளவில் சுவர்கள், கால்வாய்கள், தரைத்தளம், உறைகிணறு ஆகியனவும் கண்டெடுக்கப்பட்டன.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அகழாய்வின் போது முருகேசன் என்பவரது நிலத்தில் மேலும், ஒரு உறைகிணறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கிணற்றில் இதுவரை 2 உறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. மேலும், அப்பகுதியில் தொல்பொருள்கள் இன்னும் உள்ளதா என்பதை கண்டறிய விரைவில் ஜிபிஆர் கருவி மூலம் ஆய்வு செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதுரை செந்தமிழ் கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கீழடிக்கு வந்து அங்கு நடைபெறும் அகழாய்வை பார்வையிட்டுச் சென்றனர்.

- விடுதலை நாளேடு, 7 .9 .19

பல்லவர் காலத்து சிலைகள் கண்டெடுப்பு




காஞ்சிபுரம், செப்.8 காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே காவனூர் புதுச்சேரி கிராமத்தில் 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்து கொற்றவை தேவி, அய்யனார் சிலைகள்  கண்டெடுக்கப்பட்டுள்ளன. உத்தரமேரூர் வரலாற்று ஆய்வு மய்யத்தலைவர் க.பாலாஜி தலை மையில் ஆய்வாளர்கள் வடிவேலு மற்றும் கோகுல சூர்யா ஆகியோர் காவனூர் புதுச்சேரி கிராமத்தில் 7.9.2019 அன்று கள ஆய்வு மேற் கொண்டனர்.

அப்போது கொற்றவை தேவிக்கு தனது சிரத்தை தானே பலிகொடுக்கும் அரகண்ட வீரன் சிற்பத்துடன் கூடிய கொற்றவை சிலையையும், மகளிர் வழிபடும் நிலையில் உள்ள அய்யனார் சிலையையும் கண்டறிந்தனர். இந்த சிலை குறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் பாலாஜி கூறியது: இக்கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோயில் அருகே வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்ட கொற்றவை தேவி சிலை 4 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்டது.

8 கரங்களுடன் வலது புறம் பெரிய சூலாயுதம் காணப்படுகிறது. தலையில் மகுடமும், காதில் குழையும், கழுத்தில் அணிகலன்கள், கைககளில் வளையல்கள், கால்களில் சிலம்புடன் எருமை தலையின் மீது நின்ற கோலத்தில் காட்சி தருகிறது. கொற்றவை தேவியின் இடது புறம் தன் தலையை தானே வாளால் வெட்டி பலி கொடுக்கும் அரகண்ட வீரன் சிலையும் செதுக்கப்பட்டுள்ளது.

இதே கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளியின் விளையாட்டு மைதானம் அருகே உள்ள புளிய மரத்தடியில் கவனிப்பாரின்றிக் கிடந்த கல்லை ஆய்வு செய்தபோது அந்தக்கல்லில் அய்யனார் சிலை செதுக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அய்யனார் சிலை 4 அடி அகலமும், இரண்டரை அடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இந்தக் கல் சற்று சேதமடைந்த நிலையில் உள்ளது. அமர்ந்த நிலையில் செதுக்கப்பட்டுள்ள ஐயனார் சிலையின் இருபுறங்களிலும் மகளிர் கையில் சாமரம் ஏந்திய நிலையில் காட்சியளிக்கின்றனர்.

ஐயனாரின் காலடியில் இரண்டு குதிரைகள் காணப்படுகின்றன என்றார். இதுகுறித்து உத்தரமேரூர் வரலாற்று ஆய்வுத் துறையின் தலைவரும், தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியருமான மார்க்சியா காந்தி கூறியது: கண்டெடுக்கப்பட்ட இந்த ஐயனார் சிலையும், கொற்றவை சிலையும் 1,200 ஆண்டுகள் பழைமையான பல்லவர் காலத்தைச் சேர்ந்தவை என தெரிய வந்துள்ளது என்றார்.

- விடுதலை நாளேடு, 8 .9 .19

கீழடி: தொழில்நுட்பம் இல்லாத காலத்திலேயே தமிழர்கள் கட்டிடங்களை பிரமாண்டமாக கட்டியுள்ளனர்: பொறியியல் மாணவர்கள் தகவல்

, செப். 14- கீழடி அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட இரட்டைச்சுவர் செங்கல் கட்டு மானங்களை பொறியியல் மாண வர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடந்து வரும் அய்ந்தாம் கட்ட அகழாய்வில் இரட்டைச்சுவர், தொட்டி, தளம் போன்ற கட்டு மானங்கள், தாழி வடிவ பானை உள்ளிட்ட 750க்கும் மேற்பட்ட பழந்தமிழரின் தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டன. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்த பொருட்கள் தமிழர்களின் நாகரிகத்தையும் வாழ்வியல் முறை களையும் எடுத்துக்காட்டி வருகி றது. குறிப்பாக, இங்கு கண்டறியப் பட்ட செங்கல் கட்டுமானங்கள் அனைத்தும் பழங்காலத்திலேயே மிகச்சிறந்த கட்டுமான தொழில் நுட்பம் இருந்ததற்கு சான்றாக திகழ்ந்து வருவதுடன், தற்கால கட்டிட நிபுணர்களையும் வியப் பில் ஆழ்த்தியுள்ளது. செங்கல் கட்டுமான சுவர்களை தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்தப் பின் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

தற்போது, மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரி கட்டும்£ன பொறியியல் பிரிவு மாணவர்கள் 6 பேர் துறைப் பேராசிரியர்களுடன்  கீழடி அகழாய்வில் கிடைத்த இரட் டைச் சுவர் செங்கல் கட்டுமானம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து பொறியியல் மாண வர்கள் கூறுகையில், ‘‘தொழில் நுட் பம் இல்லாத அக்காலத்திலேயே தமிழர்கள் கட்டிடங்களை பிர மாண்டமாக கட்டியுள்ளனர். 2 ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இக்கட்டிடங்கள் இன்னும் உறு தித்தன்மையுடன் இருக்கின்றன. கட்டிடங்களின் நீளம், அகலம், உயரம், செங்கல்களின் தன்மை, செங்கல்களை இணைக்க பயன் படுத்திய பொருட்கள், கட்டிடங் களின் தாங்கு திறன் ஆகியவற்றை ஆய்வு செய்து வருகிறோம். 6 நாட் கள் நடக்கும் இந்த ஆய்வு முடிவில் தற்கால கட்டுமான தொழில்நுட்பத் திற்கும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கட்டு மான தொழில்நுட்பத் திற்கும் உள்ள வேறுபாடுகள் நிச்ச யம் வியப்பில் ஆழ்த்தும்’’ என்றனர்.

- விடுதலை நாளேடு, 14. 9 .19

வியாழன், 12 செப்டம்பர், 2019

சிவகங்கை அருகே17ஆம் நூற்றாண்டை சேர்ந்த குமிழி மடைத்தூண் கண்டுபிடிப்பு



சிவகங்கை, செப். 12-  சிவகங்கை அருகே கோவானூரில் 17ஆம் நூற்றாண்டை சேர்ந்த குமிழி மடைத்தூண் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் காளிராசா கூறிய தாவது:  சிவகங்கை அருகே கோவானூரில் 17ஆம் நூற் றாண்டை சேர்ந்த குமிழி மடைத்தூண் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

கோவானூர் பெரிய கண் மாய் என அழைக்கப்படுகிற மேலக்கோவானூர் கண்மா யில் மக்களால் அளவைக்கல், குத்துக்கல் என்று கூறப்படும் இரட்டைத்தூண் குமிழி மடை ஒன்று காணப்படுகிறது. இத்தூண்களின் உள்பகுதி களில் கல்வெட்டு எழுத்து உள்ளது.

சோழர், பாண்டிய மன்னர்கள் காலந்தொட்டு குமிழி மடை அமைப்பு ஏரி, குளங்கள் கண்மாய்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை நீரையும், வண்டலையும் தனித்தனியே வெளியேற்றுகிற வகையில் அமைக்கப்படும். பொதுவாக மடைகள் கரை யோரங்களில் காணப்படும். ஆனால் கோவானூரில் உள்ள குமிழிமடை கண்மா யின் பள்ளமான நடுப்பகுதி யில் காணப்படுகிறது. மடைத் தூண் சுமார் 10 அடி உயர முள்ளது. தூணின் வெளிப் புறத்தில் முகம் போன்ற அழ கிய வடிவமைப்பு 2 தூண் களிலும் காணப்படுகின்றன என்றார்.

- விடுதலை நாளேடு, 12 .9 .19

வியாழன், 5 செப்டம்பர், 2019

கீழடியில் தானியம் சேகரிக்கும் பானை, தண்ணீர் தொட்டி கண்டெடுப்பு



கீழடி, செப்.5 சிவ கங்கை மாவட்டம் கீழடியில் புதன்கிழமை ஒரே குழியில் அரு கருகே 2,500 ஆண்டு களுக்கு முந்தைய தானியம் சேகரிக்கும் பானை, தண்ணீர் தொட்டி கண்டெடுக்கப் பட்டன.

கீழடியில் 2015-ஆம் ஆண்டு  மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டதில் ஆயிரக்கணக்கான  தொல்பொருள்கள் கண்டறியப்பட்டன. அவற்றை பரிசோதித்ததில் 2,500 ஆண்டுகள் பழைமையான நகர நாகரீகம் கீழடியில் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து மத்திய தொல்லியல் துறை 2 மற்றும் 3-ஆம் கட்டமாக அகழாய்வு நடத்தியது. அதன்பின் தமிழக தொல்லியல்துறை 4-ஆம் கட்ட அகழாய்வை மேற்கொண்டது.

அதன் தொடர்ச்சியாக 5-ஆம் கட்ட அகழாய்வு, தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவனாந்தம் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இதுவரை 5-ஆம் கட்ட அகழாய்வுக்காக 5 பேர்களின் நிலங்களில் 30-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதில் மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறை கிணறுகள், இரும்பு பொருள்கள், செப்புக் காசுகள், உணவுக்குவளை, தண்ணீர் கோப்பை உள்பட 750-க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன. மேலும் சுவர்கள், கால்வாய்கள், தரைத்தளம் உள்ளிட்டவையும் கண்டறியப்பட்டன.

இந்நிலையில் முருகேசன் என்பவரது நிலத்தில் புதன்கிழமை தோண்டப்பட்ட குழியில், தானியம் சேகரிக்கும் பானை, தண்ணீர் தொட்டி ஆகியவை அருகருகே கண்டெடுக் கப்பட்டன.

- விடுதலை நாளேடு, 5.9.19

புதன், 4 செப்டம்பர், 2019

குன்றக்குடி மலைப்பகுதியில் பழங்காலக் குகை, ஓவியங்கள் கண்டுபிடிப்பு



ராஜபாளையம், செப்.2  ராஜபாளையம் அருகே உள்ள மீனாட்சிபுரம் குன்றக் குடி மலைப் பகுதியில் பழங்கால குகைகள், ஓவியங்கள் கண்டுபிடிக்கப் பட் டுள்ளன.

மீனாட்சிபுரம் குன்றக்குடி மலைப் பகுதியில் ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியரும், தொல்லியல் ஆய்வாள ருமான போ. கந்தசாமி, முதுகலை இரண்டாம் ஆண்டு வரலாற்று மாணவர் இருளப்பன், இளங்கலை ஆங்கில இலக்கியப் பிரிவு மாணவர் அந்தோணி, மாங்குடியைச் சேர்ந்த மலைக்கனி ஆகியோர் பழமை யான குகைகள், பழங்கால மக் கள், சித்தர்கள் வாழ்விடங்கள் ஆகியவற்றைக் கண் டறிந்துள்ளனர்.

இது குறித்து உதவிப் பேராசிரி யர் போ.கந்தசாமி கூறியதாவது:

இந்த மலையில் பெரிய குகை ஒன்று இரண்டு பிரிவாக உள்ளே நீண்டு செல்கிறது. உள்ளே தவழ்ந்து செல்லும் வகையில் வழி அமைக்கப்பட்டுள்ளது. மீனாட்சிபுரம் அருகே உள்ள புத்தூர் மலை சமணர் மலை ஆகும்.

இப்பகுதியில் சமண முனிவர்கள், சித்தர்கள் இக்குகைகளைப் பயன் படுத்தி இருக்கலாம்.

மேலும் பாறை இடுக்குகளில் அறை போன்று அமைத்து வாழ்ந்துள்ளதாகத் தெரிகிறது. இவற்றில் ஒரு பாறையில் மட்டும், வெள்ளை நிறக் கோடுகளால் குறுக்கு நெடுக்காக ஓவியம் வரையப் பட்டுள்ளது. இந்த உருவம் பழங்காலத் தில் வாழ்ந்த ஒருவகை விலங்கைக் குறிக்கிறது.

அதன் அருகே உள்ள பாறையில் நந்தி போன்று கோடு உருவம் உள்ளது. இம்மலையில் ஒரு பகுதியில் சமணப் படுக்கை உள்ளது.

இம்மலைக்கு அருகிலேயே உள்ள ஆமைமலையில் ஏற்கெனவே கண்டு பிடிக்கப்பட்ட 5,000 ஆண்டு களுக்கு முற்பட்ட கற்கால மனிதர்கள் வரைந்த வெள்ளை நிற பாறை ஓவியங்கள் அழியும் நிலையில் உள்ளன.

இம்மலையில் சிறு, சிறு குகை களில் கற்கால மனிதர்களின் வாழ் வியலை வெளிப்படுத்தும் வகையில், வரையப் பட்ட இப்பாறை ஓவி யங்கள் வெள்ளை நிறத்தில் மூன்று குகைகளில் தீட்டப் பட்டுள்ளன. பல வீரர்கள் விலங்குகளை ஆயுதங் களால் தாக்குவது, சூரி யன், புலி, யானை போன்ற உருவங்கள் காணப் படுகின்றன. வேட்டைக்காட்சி யில் குழுத்தலைவன் கிரீடம் அணிந் துள்ளார். மற்றொரு மலையின் கீழ்ப்பகுதி யில் உள்ள குகையில் ஒருவர் தியானம் செய்யும் காட்சி உள்ளது.

இந்த இடத்தைப் பாதுகாக்க தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

- விடுதலை நாளேடு, 2.9. 19

கீழடி அகழாய்வில் சூது பவளம், செப்புப் பொருள் கண்டெடுப்பு



சிவகங்கை, செப்.2 சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடந்து வரும் 5-ஆம் கட்ட அகழாய்வில் சூது பவளம், வெள்ளிக் காசு மற்றும் செப்புப் பொருள் கண்டெடுக்கப்பட்டன.

தமிழக அரசு சார்பில் கீழடியில் 5-ஆம் கட்ட அகழாய்வு, கடந்த ஜூன் 13-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இதற்காக அப்பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அப்போது மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறைகிணறுகள், இரும்புப் பொருள்கள், செப்புக் காசுகள், உணவுக் குவளை, தண்ணீர் குவளை உள்பட 750-க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன.

மேலும் சுவர்கள், கால்வாய்கள், தண்ணீர் தொட்டி ஆகியவையும் கண்டறியப்பட்டன.

தற்போது கீழடியில் மணிகள் அதிகமாக கிடைத்து வருவதால், பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள், மணிகள் செய்தல் தொழிலில் சிறந்து விளங்கியிருக்கலாம் என கருதப்படுகிறது.

ஏற்கெனவே வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா கண்டங்களில் உள்ள மலைகளில் காணப்படும் அகேட் கல்லில் செய்யப்பட்ட அணிகலன்கள் கிடைத்தன. தற்போது சூது பவளம், வெள்ளிக் காசு மற்றும் செப்புப் பொருள் கிடைத்துள்ளன.

சூது பவளம் என்ற அரிய வகை கற்கள் குஜராத், மகாராட்டிர மாநிலங்களில் காணப்படுகின்றன. சூது பவளம், சங்க காலத்தில் மதிப்புள்ள பொருளாக கருதப்பட்டுள்ளது.

இந்த வகை கல்லால் செய்யப்பட்ட அணிகலன்களை மன்னர்கள் மற்றும் செல்வந்தர்கள் மட்டுமே அதிகமாகப் பயன்படுத்தியுள்ளனர்.

ஏற்கெனவே கீழடியில் செப்புக் காசு கிடைத்துள்ள நிலையில், தற்போது வெள்ளிக் காசும் கிடைத்துள்ளது. இதன்மூலம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் செப்பு மற்றும் வெள்ளி ஆகிய உலோக காசுகளை பயன்பாட்டில் வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.

அதேபோல் செப்புப் பொருளும் கிடைத்துள்ளதால், மண்டபாண்டப் பொருள்களுடன் அவர்கள் செப்பு பொருள்களையும் பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் அமல்: அபராதம் பன்மடங்கு உயர்கிறது


சென்னை, செப்.2 திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம், செப்டம்பர் 1   முதல் அமலானது.

திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்ட மசோதா அண்மையில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இதன்படி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ. 10,000, அதிவிரைவாகவும், பொறுப்பற்ற வகையிலும் வாகனம் ஒட்டினால் ரூ. 5,000, உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ. 5000 என அபராதத் தொகை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

கார்களில் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ. 1000, வாகனங்கள் இயக்கத்தில் இருக்கும் போது செல்லிடப்பேசி பயன்படுத்தினால் ரூ. 5000, வாகனங்களில் அதிக பாரம் ஏற்றிச் செல்பவர்களுக்கு ரூ. 20,000 மேலும் ஒவ்வொரு கூடுதல் டன்னுக்கும் தனியாக ரூ.2,000, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் போன்ற அவசர கால ஊர்திகளுக்கு வழிவிடாமல் இருந்தால் ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதம் பொதுமக்களுக்கு மட்டுமில்லாமல் அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் பொருந்தும்.

மேலே உள்ள குற்றங்களில் அதிகாரிகளோ அல்லது காவல்துறையினரோ ஈடுபட்டால், பொதுமக்களிடம் வசூலிக்கப்படும் அபராதத் தொகையை விட இருமடங்கு அதிகமாக வசூலிக்கப்படும்.

சிறுவர்கள் கார், பைக், ஸ்கூட்டர் வாகனங்களை ஓட்டினால், அவர்களுடைய பெற்றோருக்கு தண்டனை விதிக்கப்படும். மேலும், வாகனங்களுக்கான பதிவு ரத்து செய்வதோடு, இந்த குற்றத்திற்காக 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

குறிப்பாக ஓட்டுநர் உரிமம் பெற கல்வித் தகுதி தேவையில்லை.

மேலும், விபத்தில் பாதிக்கப்பட்டவர் உயிரிழந்துவிட்டால் ரூ. 2 லட்சம் வரையும் விபத்தில் படுகாயமடைந்தால் அவர்களுக்கு

ரூ. 50,000 வரையும் இழப்பீடு வழங்க இந்த சட்டத்திருத்தம் வழிவகை செய்கிறது.

- விடுதலை நாளேடு, 2 .9 .19

கீழடி அகழாய்வில் தானியம் சேகரிக்கும் மண்பானை கண்டெடுப்பு



சென்னை, ஆக.31 சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், நெல் உள்ளிட்ட தானியம் சேகரிக்கும் பெரிய மண் பானை வெள்ளிக்கிழமை கண்டெ டுக்கப்பட்டுள்ளது.

கீழடியில் கடந்த 2015-இல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற் கொண்டது. அதில், கண்டெடுக்கப் பட்ட ஆயிரக்கணக்கான தொல் பொருள்கள் 2,500 ஆண்டுகள் பழைமையானவை என்றும், இதன் மூலம் நகர நாகரிகம் கீழடியில் இருந் ததும் தெரியவந்தது.    தொடர்ந்து, மத்திய தொல்லியல் துறை 2 மற்றும் 3-ஆம் கட்ட அகழாய்வோடு நிறுத்திக்கொண்டது. அதையடுத்து, தமிழக தொல்லியல் துறை 4-ஆம் கட்ட அகழாய்வை மேற்கொண்டது. கடந்த ஜூன்  13 -ஆம் தேதி முதல் 5-ஆம் கட்ட அகழாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த அகழாய்வு, தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் நடைபெறுகிறது. இதுவரை, முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு, நீதி ஆகியோரது நிலங்களில் 30-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட் டுள்ளன. அவற்றில், மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறைகிணறுகள், இரும்புப் பொருள்கள், செப்புக் காசுகள், உணவு குவளை, தண்ணீர் குவளை உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டெடுக் கப்பட்டுள்ளன. மேலும், சுவர்கள், கால்வாய்கள், தண்ணீர் தொட்டி ஆகியனவும் கண்டறியப்பட்டுள்ளன.       இந்நிலையில், வெள்ளிக்கிழமை முருகேசன் என்பவரது நிலத்தில், நெல் உள்ளிட்ட தானியங்களைச் சேகரிக்கும் பெரிய மண்பானை கிடைத்துள்ளது. இதன்மூலம், 2,500 ஆண்டுகளுக்கு முன் தானியங்களைச் சேகரிக்க மண்பாண்டப் பொருள் களை பயன்படுத்தியதும், விவசா யத்திலும் இப்பகுதி சிறந்து விளங் கியதும் தெரியவந்துள்ளது.

- விடுதலை நாளேடு, 31. 8. 19

கீழடி அகழாய்வில் பழங்கால மண் கிண்ணம் கண்டெடுப்பு



திருப்புவனம்,ஆக.16, கீழடி அய்ந்தாம் கட்ட அகழாய்வில் பழங்கால மண் கிண்ணம் நேற்று கண்டெடுக்கப்பட் டது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழ டியில் அய்ந்தாம் கட்ட அகழாய்வு ரூ.47 லட்சம் செலவில் நடந்து வருகிறது. இதில் நீண்ட கட்டுமானம் கொண்ட கோட்டைச்சுவர், 7 அடுக்குகள் கொண்ட உறைகிணறு கண்டறியப் பட்டது. இந்த இடத்தை சுற்றியே கடந்த சில நாட்களாக அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. கட்டிட சுவர் கிடைத்திருப்பதால் இப்பகுதியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நகர நாகரிகத்துடன் மக்கள் வாழ்ந்திருப்பது உறுதியாகி உள்ளது. வேறு  பொருட்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப் பில் அகழாய்வு பணிகள் தீவிரம் அடைந்து வருகிறது.

இந்நிலையில் வாய் அகன்றும், உட்புறம் குழி போன்ற அமைப்புடன் கூடிய பழங்கால மண் கிண் ணம் போன்ற பாத்திரம் நேற்று கண்டெடுக்கப்பட் டது. இதை சுடுமண் பாத் திரம் என்றும் கூறுகின்றனர். சேதமடைந்த நிலையில் காணப்பட்ட இந்த கிண்ணம் உட்புறம் கருப்பு, வெளிப்புறம் சிவப்பு வண்ணத்தில் உள் ளது. இது பண்டை காலத்தில் உணவு சாப்பிட பயன்படுத்தப் பட்ட மண் கிண்ணமாக இருக்கலாம் என கருதப் படுகிறது. நீண்ட சுவர், சுடுமண் பாத்திரம்  போன்ற பொருட் களை தேடித்தான் கடந்த சில நாட்களாக தமிழக தொல்லியல் துறை ஆய்வை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் மண் கிண்ணம் கிடைத்திருப்பது தொல்லி யல் ஆய்வாளர்களை உற்சா கப்படுத்தியுள்ளது.

- விடுதலை நாளேடு, 16. 8. 19

திங்கள், 2 செப்டம்பர், 2019

குன்றக்குடி மலைப்பகுதியில் பழங்காலக் குகை, ஓவியங்கள் கண்டுபிடிப்பு

ராஜபாளையம், செப்.2  ராஜபாளையம் அருகே உள்ள மீனாட்சிபுரம் குன்றக் குடி மலைப் பகுதியில் பழங்கால குகைகள், ஓவியங்கள் கண்டுபிடிக்கப் பட் டுள்ளன.
மீனாட்சிபுரம் குன்றக்குடி மலைப் பகுதியில் ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியரும், தொல்லியல் ஆய்வாள ருமான போ. கந்தசாமி, முதுகலை இரண்டாம் ஆண்டு வரலாற்று மாணவர் இருளப்பன், இளங்கலை ஆங்கில இலக்கியப் பிரிவு மாணவர் அந்தோணி, மாங்குடியைச் சேர்ந்த மலைக்கனி ஆகியோர் பழமை யான குகைகள், பழங்கால மக் கள், சித்தர்கள் வாழ்விடங்கள் ஆகியவற்றைக் கண் டறிந்துள்ளனர்.
இது குறித்து உதவிப் பேராசிரி யர் போ.கந்தசாமி கூறியதாவது:
இந்த மலையில் பெரிய குகை ஒன்று இரண்டு பிரிவாக உள்ளே நீண்டு செல்கிறது. உள்ளே தவழ்ந்து செல்லும் வகையில் வழி அமைக்கப்பட்டுள்ளது. மீனாட்சிபுரம் அருகே உள்ள புத்தூர் மலை சமணர் மலை ஆகும்.
இப்பகுதியில் சமண முனிவர்கள், சித்தர்கள் இக்குகைகளைப் பயன் படுத்தி இருக்கலாம்.
மேலும் பாறை இடுக்குகளில் அறை போன்று அமைத்து வாழ்ந்துள்ளதாகத் தெரிகிறது. இவற்றில் ஒரு பாறையில் மட்டும், வெள்ளை நிறக் கோடுகளால் குறுக்கு நெடுக்காக ஓவியம் வரையப் பட்டுள்ளது. இந்த உருவம் பழங்காலத் தில் வாழ்ந்த ஒருவகை விலங்கைக் குறிக்கிறது.
அதன் அருகே உள்ள பாறையில் நந்தி போன்று கோடு உருவம் உள்ளது. இம்மலையில் ஒரு பகுதியில் சமணப் படுக்கை உள்ளது.
இம்மலைக்கு அருகிலேயே உள்ள ஆமைமலையில் ஏற்கெனவே கண்டு பிடிக்கப்பட்ட 5,000 ஆண்டு களுக்கு முற்பட்ட கற்கால மனிதர்கள் வரைந்த வெள்ளை நிற பாறை ஓவியங்கள் அழியும் நிலையில் உள்ளன.
இம்மலையில் சிறு, சிறு குகை களில் கற்கால மனிதர்களின் வாழ் வியலை வெளிப்படுத்தும் வகையில், வரையப் பட்ட இப்பாறை ஓவி யங்கள் வெள்ளை நிறத்தில் மூன்று குகைகளில் தீட்டப் பட்டுள்ளன. பல வீரர்கள் விலங்குகளை ஆயுதங் களால் தாக்குவது, சூரி யன், புலி, யானை போன்ற உருவங்கள் காணப் படுகின்றன. வேட்டைக்காட்சி யில் குழுத்தலைவன் கிரீடம் அணிந் துள்ளார். மற்றொரு மலையின் கீழ்ப்பகுதி யில் உள்ள குகையில் ஒருவர் தியானம் செய்யும் காட்சி உள்ளது.
இந்த இடத்தைப் பாதுகாக்க தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விடுதலை நாளேடு, 2.9.19

கீழடி அகழாய்வில் சூது பவளம், செப்புப் பொருள் கண்டெடுப்பு

சிவகங்கை, செப்.2 சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடந்து வரும் 5-ஆம் கட்ட அகழாய்வில் சூது பவளம், வெள்ளிக் காசு மற்றும் செப்புப் பொருள் கண்டெடுக்கப்பட்டன.
தமிழக அரசு சார்பில் கீழடியில் 5-ஆம் கட்ட அகழாய்வு, கடந்த ஜூன் 13-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இதற்காக அப்பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அப்போது மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறைகிணறுகள், இரும்புப் பொருள்கள், செப்புக் காசுகள், உணவுக் குவளை, தண்ணீர் குவளை உள்பட 750-க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன.
மேலும் சுவர்கள், கால்வாய்கள், தண்ணீர் தொட்டி ஆகியவையும் கண்டறியப்பட்டன.
தற்போது கீழடியில் மணிகள் அதிகமாக கிடைத்து வருவதால், பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள், மணிகள் செய்தல் தொழிலில் சிறந்து விளங்கியிருக்கலாம் என கருதப்படுகிறது.
ஏற்கெனவே வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா கண்டங்களில் உள்ள மலைகளில் காணப்படும் அகேட் கல்லில் செய்யப்பட்ட அணிகலன்கள் கிடைத்தன. தற்போது சூது பவளம், வெள்ளிக் காசு மற்றும் செப்புப் பொருள் கிடைத்துள்ளன.
சூது பவளம் என்ற அரிய வகை கற்கள் குஜராத், மகாராட்டிர மாநிலங்களில் காணப்படுகின்றன. சூது பவளம், சங்க காலத்தில் மதிப்புள்ள பொருளாக கருதப்பட்டுள்ளது.
இந்த வகை கல்லால் செய்யப்பட்ட அணிகலன்களை மன்னர்கள் மற்றும் செல்வந்தர்கள் மட்டுமே அதிகமாகப் பயன்படுத்தியுள்ளனர்.
ஏற்கெனவே கீழடியில் செப்புக் காசு கிடைத்துள்ள நிலையில், தற்போது வெள்ளிக் காசும் கிடைத்துள்ளது. இதன்மூலம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் செப்பு மற்றும் வெள்ளி ஆகிய உலோக காசுகளை பயன்பாட்டில் வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.
அதேபோல் செப்புப் பொருளும் கிடைத்துள்ளதால், மண்டபாண்டப் பொருள்களுடன் அவர்கள் செப்பு பொருள்களையும் பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.
- விடுதலை நாளேடு,,2.9.19

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...