வெள்ளி, 2 மார்ச், 2018

ஆதிச்சநல்லூர்


1876 ஆம் ஆண்டில் ஆதிச்சநல்லூ ரில் முதலாவது அகழ்வாய்வு நடத்தப் பட்டதாகத் தெரிகிறது. பின்னர் 1896 இலும் 1904 ஆம் ஆண்டிலும் ஆய்வுகள் நடத் தப்பட்டுள்ளன. அக்காலத்தில் ஆய்வு களை நடத்திய பிரித்தானியத் தொல்லி யலாளரான அலெக்சாண்டர் ரெயா (Alexander Rea) என்பவர், தென்னிந்தி யாவில் கண்டுபிடிக்கப்பட்டவற்றுள் மிகவும் பரந்த தொல்லியல் களம் இதுவெனக் குறிப்பிட்டுள்ளார். அப்போது ஆயிரக்கணக்கான தொல் பொருட்களை இவர் கண்டெடுத்து பதிவு செய்துள்ளார். இவற்றுள், மட்பாண்டங்கள், இரும்புக் கருவிகள், ஆயுதங்கள், நகையணிகள் என்பனவும், பொன், வெண்கலம், அரிய கல் முதலியவற்றாலான மணிகளும் (beads), எலும்புகளும் கண்டெடுக்கப் பட்டுள்ளன. பண்டைத்தமிழர் நாகரிகத் தின் தொல்பழங்காலத் தொட்டில் ஆதிச்ச நல்லூரில் இருந்தது எனத் தொல்லியலா ளர்கள் கருதுகிறார்கள்.

2004 ஆம் ஆண்டில் இங்கே நடத்தப் பட்ட ஆய்வுகள் மிகவும் முக்கியமான வையாகக் கருதப்படுகின்றன. 3,800 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடு களும் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ 114 ஏக்கர் பரப்பளவில் நடத் தப்படும் ஆய்வில் ஏராளமான ஈமத்தாழி கள் காணப்பட்டுள்ளன. இக்களத்திலுள்ள புதைகுழித் தொகுதி மூன்று அடுக்கு களாகக் காணப்படுகின்றது. பாறைகள் நிறைந்த மலைச் சரிவுகளில் குழி தோண்டப்பட்டுச் சுட்ட களிமண்ணினால் ஆன தாழிகள் புதைக்கப்பட்டுள்ளன. ஒன்றினால் ஒன்று மூடப்பட்ட இரண்டு தாழிகளைக் கொண்ட புதைகுழிகளும் உள்ளன. பண்டைத் தமிழ் எழுத்துக் களுடன்கூடிய பல தாழிகளும் கண் டெடுக்கப்பட்டுள்ளன.

ஆங்கிலேயர் காலத்தில் இருந்து இன்றுவரை உலகளவில் ஆதிச்சநல்லூர் பற்றி அறிந்துகொள்ள பலரும் ஆர்வமு டன் உள்ளனர். அது தமிழர்களின் பண் டைய நாகரீகத்தைச் சொல்லும் இடம், சிந்து சமவெளிக்குமுன்பாகவே ஒரு முழுமையடைந்த நாகரீகத்தைக் கொண்ட நாகரீகமாக இருந்தது. இங்கு கிடைத்த தொல்பொருட்கள் சிலவற்றை பெர்லின் நகரத்திற்கு ஒரு தொல்லியல் நிபுணர் கொண்டுசென்று அங்கு காட்சிப்படுத்தி யுள்ளார். ஆனால் இந்தியாவில், அகழ்வு பணிகள் முடிந்து பன்னிரண்டு ஆண்டு களுக்குப் பின்னர் கூட மத்திய அரசின் தொல்லியல் துறை முதல்கட்ட அறிக்கை யைக்கூட வெளியிடவில்லை, அகழ்வுப் பணிகளுக்காக 114 ஏக்கர் நிலம் ஆதிச்ச நல்லூர் கிராமத்தில் கையகப்படுத்தப்பட்டு உள்ளது  ''2004 மற்றும் 2005இல் மத்திய அரசு நடத்திய அகழ்வு பணிகளில் என்ன தெரியவந்தது என்று இன்று வரை வெளி யிடப்படவில்லை. 2014-ஆம் ஆண்டு மத்திய கலாச்சாரத்துறை வெளிநாட்டு ஆய்வாளர்கள் இந்தியா வந்து ஆய்வு செய்ய கடுமையான விதிமுறைகளை விதித்த பிறகு ஆதிச்சநல்லூர் குறித்த ஆய் வுகளை அரசைத்தவிர மற்ற யாருமே செய்ய இயலாமல் போனது. இதனால் ஆதிச்ச நல்லூர் நாகரீகம் மெல்ல மெல்ல மக்களி டையே மறைக்கப்பட்டுக்கொண்டு இருக் கிறது.

- விடுதலை ஞாயிறு மலர், 24.2.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...