திருப்புவனம், ஆக.17 சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தை புதூரில் தமிழக தொல்லியல் துறை சார்பில் நடத்தப்படும் அகழாய்வில் களிமண் அச்சுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சோணை என்பவரின் நிலத்தில் நடைபெறும் அகழாய்வில் களிமண்ணால் ஆன அச்சுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆண், பெண் அச்சுக்கள், முகம் மட்டும் கொண்ட அச்சுக்கள் கண்டறியப் பட்டுள்ளன. இதில் ஆண், பெண் அச்சுக்களில் வேலைப்பாடுகள் எதுவும் இல்லாமல் சாதாரண அச்சுகளாக காணப்படுகின்றன.
ஆனால் முகம் மட்டும் கண்டறியப்பட்டுள்ள அச்சில் நுணுக்க மான வேலைப்பாடுகள் உள்ளன, அணிகலன்கள், மீசை, முகத்தில் உள்ள வரிகள், கண் இமை, காதணி உள்ளிட்ட அனைத்தும் நுணுக்கமான அளவில் உள்ளன.
தொல்லியல் அதிகாரிகள் கூறுகையில், இந்த அச்சுகளை வைத்து சிலைகள் செய்ய பயன்படுத்தி இருக்கலாம், ஆண், பெண் அச்சுக்கள் அரை அடி முதல் ஒரு அடி உயரம் வரை உள்ளன. முகம் அச்சு மட்டும் சற்று பெரிய அளவில் உள்ளது.
சிலைகள் உள்ளிட்டவைகள் செய்வதற்கு முன் களிமண் அச்சுக்களை மாதிரிகளாக பயன்படுத்தி இருக்கலாம், ஆய்விற்கு பின்தான் இவற்றின் உண்மையான பயன்பாடு தெரியவரும் என்றனர்.
- விடுதலை நாளேடு 17. 8 .18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக