சனி, 12 அக்டோபர், 2019

கி.பி. 12ஆம் நூற்றாண்டு நடுகல் கண்டுபிடிப்பு

திருப்பத்தூர், அக்.12  அம்பலூர் பாலாற்றில், கி.பி., 12ஆம் நுற்றாண்டைச் சேர்ந்த, நடுகல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லுரி பேராசிரியர் பிரபு கூறியதாவது:
வாணியம்பாடி அடுத்த, அம்பலூர் அருகே, தேங்காய் தோப்பு வட்டத்தில், பாலாற்றங் கரையில் பாதி உடைந்த நிலையில், ஒரு நடுகல் கண்டு பிடிக்கப்பட்டது.
இயந்திரத்தில், இப்பகுதியில் தூர் வாரிய போது, நடுகல் இரண்டாக உடைந்துள்ளது. இந்த நடுகல்லை ஆய்வு செய்ததில், கி.பி., 12ஆம் நுற்றாண்டை சேர்ந்த, பிற்கால சோழர்கள் ஆட்சியைச் சேர்ந்தது என, தெரிய வந்தது.
நடுகல்லில், ஒரு வீரனின் வலது கையில், போர் வாள் உள்ளது. இடது கையில், கேடயம் உள்ளது. போரில் எதிரி விட்ட அம்பு, வீரனின் மார்பில் பாய்ந்து இறந்து கிடக்கிறார். கல்லின் இடது பக்க மேல்புறத்தில், இரு பெண்கள், வீரனை  அழைத்து செல்வது போல உள்ளது.
உடைந்த நிலையில், நடுகல்லின் மேற்புறம் மட்டும் கிடைத்துள்ளது. அதை, இப்பகுதி மக்கள், சலவை கல்லாக பயன்படுத்துகின்றனர். கல்லின் கீழ்புறம் காணவில்லை. இது போன்ற நடுகல், இப்பகுதியில் நிறைய உள்ளது.தொல்பொருள் ஆய்வுத்துறையினர், ஆய்வு நடத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
- விடுதலை நாளேடு,12.10.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...