திருப்பத்தூர், பிப்.19 ஜவ்வாதுமலையில் 3 ஆயிரம் ஆண்டு களுக்கு முற்பட்ட புதைவிடம் கண்டறியப்பட்டுள்ளது.
திருப்பத்தூரை அடுத்த ஜவ்வாதுமலைப் பகுதியில் புதூர் நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு உள்ளிட்ட 32 மலைக் கிராமங்கள் உள்ளன. இதில், புங்கம்பட்டு நாட்டிற்கு உள்பட்ட “கல்லாவூர்’ என்ற கிராமத்தில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புதைவிடம் ஒன்றை திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர் க.மோகன் காந்தி, சென்னை மாநிலக் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் கே.ஆர்.லட்சுமி, காணி நிலம் மு.முனிசாமி, ஓய்வு பெற்ற ஆசிரியர் ராமன், ஜவ்வாது மலையைச் சேர்ந்த ஆய்வாளர் கோவிந்தராஜ் ஆகியோர் அடங்கிய குழு களஆய்வின் போது கண்டறிந்தனர்.
சென்னை, பிப்.19 ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு, தகுதியானவர் களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன. சென்னை மாவட்ட ஆட்சியர், அன்புச்செல்வன்
வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், காலியாக உள்ள, நாவிதர், சமையலர், அலுவலக உதவியாளர், பதிவுரு எழுத்தர் உள்ளிட்ட காலி பணியிடங்களுக்கு, தகுதியான வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கு, 18 வயது முதல், 35 வயது வரையுள்ள, 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு தேறிய, தவறியவர்கள் விண்ணப்பிக்கலாம். ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அடுக்குமாடி கட்டடம் 1இல், வரும் 19ஆம் தேதி முதல், 26ஆம் தேதி வரை, விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் மார்ச் 2ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விடுதலை நாளேடு ,19.2.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக