திங்கள், 19 பிப்ரவரி, 2018

அரிய வகை பாறை ஓவியங்கள் : திண்டுக்கல் ‘ஓவா’ மலையில் கண்டுபிடிப்பு

 



போடி, பிப்.19 தேனிமாவட்டம் போடி சி.பி.ஏ., கல்லூரி தொல்பொருள் ஆராய்ச்சி பேராசி ரியர்கள் மூலம் திண்டுக்கல் அருகே ஓவா மலைப்பகுதியில் பழைமையான அரிய வகை பாறை ஓவியங்கள் கண்டுபிடிக் கப்பட்டுள்ளன.

கல்லூரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் மாணிக்கராஜ் கூறியதாவது: தொல்பொருள் மற்றும் விழிப்புணர்வு மய்யத் தின் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் பழமையான கல்வெட்டுகள், கற்கள், மண்ணில் புதைந்துள்ள கற்கால பொருட்களை கண்டு பிடிக்கும் பணியில் கல்லுரி முதல்வர் மனோகரன் வழிகாட்டு தலில், தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் கனகராஜ், மாண வர்கள் ராம்குமார், சவுந்திர பாண்டி, பிரகாஷ், ராஜேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் ஈடுபட்டு வருகிறோம்.இரண்டு நாட்களுக்கு முன் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா சித்தரேவு ஊரின் வடமேற்கு 5 கி.மீ.,தொலைவில் உள்ள ஓவா மலைப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

வெள்ளை நிற ஓவியங்கள் 

ஓவா மலையில் பெருமாள் பொடவு என அழைக்கப்படும் பழங்கால குகைகளில் வெள்ளை நிற பாறை ஓவியத் தொகுப்பை கண்டறிந்துள்ளோம்.இதில் ஏழுக்கும் மேற்பட்ட மனித உருவங்களும், புலி, மான் போன்ற விலங்குகளின் உருவங் களும் வெள்ளை நிறத்தில் ஓவியமாக வரையப்பட்டுள்ளன. குகை வெளிப்புறத்தில் மனித உருவங்கள் கைகளை உயர்த்தி நடனமாடும் நிலையிலும், சில மனித உருவங்கள் கைகளை உயர்த்தி, குச்சி போன்ற ஒன்றை கையில் பிடித்து புலி, மானை பார்த்த நிலையில் உள்ளன. இது புலி, மானை மனிதர்கள் வேட் டையாடும் நிகழ்வு போல காட்சியளிக்கிறது.

புலி தன் அருகில் உள்ள மானை பார்த்து தன் வாலை உயர்த்திய நிலையிலும், புலியின் உடல் முழுவதும் கோடுகள் வெள்ளை நிறத்திலும், மான் புலியை பார்ப்பது போல வரையப்பட்டுள்ளன.

பெரிய மனித உருவம் ஒன்று தன் கைகளை தொங்க விட்ட நிலையிலும், அருகில் கைகளை உயர்த்தி நடனமாடுவது போன்றும் காணப்படுகின்றன.

இதே பகுதியில் 1500 ஆண்டு களுக்கு முந்தைய கல்வெட்டு கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப் பட்டது. மேலும் ஆய்வு செய் வதன் மூலம் வரலாற்று தொன் மையான தடயங்கள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன, என்றார்.

- விடுதலை நாளேடு, 19.2.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...