திருவண்ணாமலை, செப். 4- திருவண்ணாமலையை அடுத்த செல்லங்குப்பம் கிரா மத்தில் 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செக்குக் கல்வெட்டை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் கண்டெடுத்தது.
திருவண்ணாமலையை அடுத்த செல்லங்குப்பம் கிரா மம், பெரிய ஏரிக்கரையில் கல்செக்கு ஒன்றில் கல்வெட்டு இருப்பதாக திருவண்ணா மலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆய்வு நடுவத்தின் தலைவர் த.ம.பிரகாஷ், செயலர் ச.பால முருகன், இணைச் செயலர் பிரேம்குமார், மதன்மோகன், சேது, சுதாகர், சிறீதர் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை அந்த இடத் தில் இருந்த செக்குக் கல் வெட்டை ஆய்வு செய்தனர்.
ஆய்வில், அந்தச் செக்குக் கல்வெட்டு 11-ஆம் நூற்றாண் டைச் சேர்ந்தது என்பது தெரிய வந்தது. மேலும், கூரியூர் கிரா மத்தைச் சேர்ந்த பெருவன் மகன் சேந்தன் என்பவர் இந் தச் செக்கை செய்து கொடுத் ததும் தெரிய வந்தது.
- விடுதலை நாளேடு, 4.9.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக