திங்கள், 12 நவம்பர், 2018

மன்னனின் மூடத்தனம்

தஞ்சாவூர் சமஸ்தானத்தை ஆண்ட அந்த மன்னரு நாள், கிழமை பாக்காம எந்தக் காரியமும் செய்ய மாட்டாராம். ஒருநாள் ஏதோ வெளியூர்ப் பிராயாணம் போனதால அன்னைக்கு ஏகாதசின்னு தெரியாம சாப்பிட்டு முடிச்சதும் வெற்றிலை போட்டுட்டாராம். “அய்யய்யோ ஏகாதசியும் அதுவுமா இப்பிடி பண்ணிட்டேளே”ன்னு வேதம் அறிஞ்ச ஜோஷியக்காரர்  பீதியை ஏற்படுத்த, அதுக்கு என்ன பரிகாரம்னு மன்னர் கேட்டிருக்கார். உடனே, “என்னைய மாதிரி 40, 50 பிராமணாளுக்கு வீடு, வாசல், கிணத்தோட 50 ஏக்கர் நிலத்தையும் குடுத்து, ஒரு கிராமத்தை ஏற்படுத்திக் கொடுத்தேள்னா எல்லாம் சரியாய்ப்புடும்” என்று பக்குவம் சொல்லியிருக்கார். மன்னரும் அப்படிச் செஞ்சு பெரிய பாவ காரியத்துல இருந்து தப்பிட்டார்.
(நீதி: இலவசமாய் வாங்குனாத் தப்பு. இப்பிடி குணமா கேட்டு வாங்கோணும்)
ஆதாரம்: உ.வே.சா எழுதிய என் சரித்திரம் நூலில், தன் ஊரின் வரலாறாகப் பதிவு செய்திருப்பதில் இருந்து.

*கே.கே.மகேஷ்*
- கட்செவி பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இரும்புப் பயன்பாட்டில் மட்டுமல்ல எல்லாவற்றிலும் தமிழர்களே முன்னோடி !- மஞ்சை வசந்தன்

  தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், அண்மையில் ஒரு முக்கியச் செய்தியை அறிவிக்கப் போவதாகக் கூறி அச்செய்தியையும் ஒரு நிகழ்வி...