வெள்ளி, 31 மே, 2019

சோழர் காலத்து நடுகல் கண்டெடுப்பு



சென்னை, மே 31  வாணியம்பாடி அருகே சோழர் காலத்து நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறைப் போராசிரியர் க.மோகன்காந்தி, ஆங்கிலப் பேராசிரியர் வ.மதன், காணிநிலம் மு.முனிசாமி ஆகியோர் வாணியம்பாடி அருகே மேற்கொண்ட கள ஆய்வில் சோழர் காலத்தைச் சேர்ந்த நடுகல்லைக் கண்டெடுத் தனர். இதுகுறித்து பேராசிரியர் க.மோகன் காந்தி கூறியது:

வாணியம்பாடியில் இருந்து நாட்டறம் பள்ளிக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நெக்குந்தி கிராமம் உள்ளது. நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள காட்டுப்பகுதியில் கி.பி. 10-11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் உள்ளது. இதன் காலத்தை வைத்து கணக்கிடுகையில் இது, சோழர் காலத்தைச் சேர்ந்ததாகக் கருத முடிகிறது.

1.5 அடி உயரம் மண்ணில் புதைந்த நிலையில், 2 அடி உயரம் மேலே தெரிந்த நிலையில் உள்ளது. 3 அடி அகலம் கொண்ட பலகைக் கல்லில் இந்த நடுகல் செதுக்கப்பட்டுள்ளது.

உருவம் தேயாமல் நேர்த்தியான வடிவில் உள்ளது. இக்கல்லில் உள்ள வீரன் வலது புறம் கொண்டையிட்டு, கையில் வில், அம்புடன் உள்ளார்.

காதுகளில் காதணிகள், முதுகுப்புறம் அம்புக் கூடு காணப்படுகின்றன. கைகளில் வீரக் கடகங்களும் உள்ளன.

இந்த நடுகல்லை இப்பகுதி மக்கள் வேடியப் பன் என்ற பெயரில் வழிபட்டு வருகின்றனர்  என்றார் அவர்.

- விடுதலை நாளேடு 31. 5 .2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...