வியாழன், 29 ஆகஸ்ட், 2019

வாணியம்பாடி அருகே 2 நடுகற்கள் கண்டெடுப்பு



வாணியம்பாடி, ஆக.21  திருப் பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியர் க.மோகன் காந்தி, காணிநிலம் மு.முனிசாமி ஆகியோர் மேற் கொண்ட கள ஆய்வில் இந்த நடுகற்கள் கண்டெடுக்கப்பட் டுள்ளன.

இதுகுறித்து க.மோகன் காந்தி கூறியது:  வாணியம் பாடியை சுற்றியுள்ள பகுதிகள் ஆந்திர எல்லைப் பகுதியில் இருப்பதால் அக்காலத்தில் அந்நியர் படையெடுப்பு மிகுதி யாக இருந்தது. அப்போது, நடந்த போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு ஆங் காங்கே நடுகற்கள் அமைக்கப் பட்டுள்ளதைக் காணமுடிகிறது.

அதன்படி, சின்ன வட சேரியில் கற்திட்டை வடிவிலான நடுகல் கண்டெடுக்கப்பட் டுள்ளது. அதன் அமைப்புப் பிற்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்ததாகத் தெரிகிறது. இந்த நடுகல் மூன்றடி ஆழத்தில் புதைந்த நிலையில் உள்ளது. 3 பக்கமும் பலகைக் கல்லால் மூடி, மேற்பகுதியிலும் பெரிய பல கைக் கல்லைக் கொண்டு மூடும் அமைப்புக்கு கற்திட்டை வடி வம் என்று பெயர். இந்த நடுகல் லும் 3 பக்கமும் பலகைக் கல்லால் மூடப்பட்டு, மேலே ஒரு பலகைக் கல் கொண்டு மூடப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் கல் சேதமடைந்த நிலை யில் உள்ளது. இக்கலில் உள்ள வீரன் வலது பக்கக் கொண்டையிட்டுள்ளான். இடது கையில் வில் ஏந்திய நிலையில் உள்ளது. வீரனின் மார்பு வரை மட்டுமே மேலே தெரிகிறது. சின்ன வடசேரியைச் சேர்ந்த சில குடும்பங்கள்  இக்கல்லை வழிபடுகின்றனர்.

மற்றொரு நடுகல்...

மேல்குப்பம்-சின்ன வடசேரி எல்லையில் நாயக்கர் காலத்தைச் சேர்ந்த மற்றொரு நடுகல் காணப்படுகிறது.

இது உடன் கட்டை நடுகல் ஆகும். கும்பிடும் நிலையில் ஓர் ஆண் உருவமும், அதன் அருகே பெண் உடன் கட்டை ஏறிய தற்கான அடையாளத்தோடு நடுகல் காணப் படுகிறது.

இந்த நடுகல் சேத மடைந்து சரியான உருவமின்றிக் காணப் படுகிறது. இந்த நடுகல் லை இவ்வூர் மக்கள் தேசத்துமாரி என்ற பெயரில் வழிபட்டு வரு கின்றனர்.

இவ்வூரை மேலும் ஆய்வுக்கு உட்படுத்தினால் பல வர லாற்றுத் தடயங்கள் வெளிப் படும் என்றார் அவர்.

- விடுதலை நாளேடு, 21.8.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...