சனி, 31 ஆகஸ்ட், 2019

4,000 ஆண்டுகளுக்கு முந்தைய பாறைக் கீறல் ஓவியங்கள் கண்டெடுப்பு

தருமபுரி, ஆக.31  தருமபுரி மாவட்டம்,  பென்னாகரம் வட்டம், தாளப்பள்ளம் காடு என்ற இடத்திலிருந்து சுமார் 1.5 கி.மீ. தொலைவில் சீல நாயக்கனூர் அமைந்துள்ளது.  இக் கிராமத்தில் பெருங்கற் காலச் சின்னங்கள் இருப்பது குறித்து தகவலறிந்து, நல்லாம் பட்டி அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஆ.அன்பழகன்,  சீலநா யக்கம்பட்டி அரசுப் பள்ளி ஆசிரியர் கோ. திருப்பதி, அளே புரம் அரசுப் பள்ளி ஆசிரியர் முருகன் மற்றும் தொல்லியல் ஆர்வலர்கள் த. பார்த்திபன், ஆ.அன்பழகன் ஆகியோர் அங்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில்,  அங்கு வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த அரியவகை தொல்லியல் சின்னங்களான இரண்டு பாறைக் கீறல் ஓவி யங்கள் இருப்பதைக் கண்டறிந் தனர்.  இப் பாறை கீறல் ஓவியங் களை மேலாய்வு செய்த த. பார்த்திபன், ஆ.அன்பழகன் ஆகியோர் கூறியது:
இவை புதிய கற்காலத்தைச் சேர்ந்த பண்பாட்டுச் சின் னங் கள் ஆகும்.  இக்கீறல் ஓவியங் களில் ஒன்று குண்டுப் பாறை யிலும் மற்றொன்று சமதளமாக உள்ள பாறையின் உயரமான முகப்பிலும் கீறப் பட்டுள்ளன.  இரண்டிலும் மாட்டின் உரு வம் திமிலுடன் சற்று விரிந்து,  நீண்ட கொம் புகளுடன் செதுக்கப்பட்டுள்ளன.  இவற் றின் அழகிய வடிவமைப்பும், நேர்த்தியும் போற்றத்தக்க வகையில் உள் ளன.  தமிழகத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே வரலாற் றுக்கு முற்பட்ட  காலத்தைச் சார்ந்த பாறைக் கீறல் ஓவியங்கள் கிடைத் துள்ளன.
இதில், சீலநாயக்கனூர் பாறைக் கீறல் ஓவியங்கள் தனிச் சிறப்பு வாய்ந்தவையாக உள் ளன.  இவற்றின் தன்மைகளுக்கு இணையான பாறைக் கீறல் ஓவியங்களை புகழ் பெற்ற புதிய கற்கால வாழிடமான கர்நாடக மாநிலம்,  பெல்லாரி வட்டத்தைச் சேர்ந்த குப்கல்-சங்கனக்கல் என்ற இடத்தில் ஏராளமாகக் கிடைத்துள்ளன.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மேற்கொள் ளப்பட்ட அகழாய்வுகள்,  இப் பகுதியில் புதிய கற்காலப் பண்பாடும்,  பெருங்கற்காலப் பண்பாடும் ஒன்றை அடுத்து ஒன்றும் கலப்புற்ற நிலையில்  உள்ளதும் அறியப்பட்டிருப் பதால்,  இவற்றின் காலத்தை இன்றைக்கு சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கணிக்கலாம்.  மேலும், தருமபுரி மாவட்டத்தில் பெருங்கற் காலச் சின்னங்கள் அதிக அள வில் அமைந்துள்ளன என்று தெரிவித்துள்ளார்.
 - விடுதலை நாளேடு, 31.8.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...