சனி, 14 செப்டம்பர், 2019

கீழடி: தொழில்நுட்பம் இல்லாத காலத்திலேயே தமிழர்கள் கட்டிடங்களை பிரமாண்டமாக கட்டியுள்ளனர்: பொறியியல் மாணவர்கள் தகவல்

, செப். 14- கீழடி அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட இரட்டைச்சுவர் செங்கல் கட்டு மானங்களை பொறியியல் மாண வர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடந்து வரும் அய்ந்தாம் கட்ட அகழாய்வில் இரட்டைச்சுவர், தொட்டி, தளம் போன்ற கட்டு மானங்கள், தாழி வடிவ பானை உள்ளிட்ட 750க்கும் மேற்பட்ட பழந்தமிழரின் தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டன. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்த பொருட்கள் தமிழர்களின் நாகரிகத்தையும் வாழ்வியல் முறை களையும் எடுத்துக்காட்டி வருகி றது. குறிப்பாக, இங்கு கண்டறியப் பட்ட செங்கல் கட்டுமானங்கள் அனைத்தும் பழங்காலத்திலேயே மிகச்சிறந்த கட்டுமான தொழில் நுட்பம் இருந்ததற்கு சான்றாக திகழ்ந்து வருவதுடன், தற்கால கட்டிட நிபுணர்களையும் வியப் பில் ஆழ்த்தியுள்ளது. செங்கல் கட்டுமான சுவர்களை தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்தப் பின் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

தற்போது, மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரி கட்டும்£ன பொறியியல் பிரிவு மாணவர்கள் 6 பேர் துறைப் பேராசிரியர்களுடன்  கீழடி அகழாய்வில் கிடைத்த இரட் டைச் சுவர் செங்கல் கட்டுமானம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து பொறியியல் மாண வர்கள் கூறுகையில், ‘‘தொழில் நுட் பம் இல்லாத அக்காலத்திலேயே தமிழர்கள் கட்டிடங்களை பிர மாண்டமாக கட்டியுள்ளனர். 2 ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இக்கட்டிடங்கள் இன்னும் உறு தித்தன்மையுடன் இருக்கின்றன. கட்டிடங்களின் நீளம், அகலம், உயரம், செங்கல்களின் தன்மை, செங்கல்களை இணைக்க பயன் படுத்திய பொருட்கள், கட்டிடங் களின் தாங்கு திறன் ஆகியவற்றை ஆய்வு செய்து வருகிறோம். 6 நாட் கள் நடக்கும் இந்த ஆய்வு முடிவில் தற்கால கட்டுமான தொழில்நுட்பத் திற்கும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கட்டு மான தொழில்நுட்பத் திற்கும் உள்ள வேறுபாடுகள் நிச்ச யம் வியப்பில் ஆழ்த்தும்’’ என்றனர்.

- விடுதலை நாளேடு, 14. 9 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...