வியாழன், 5 செப்டம்பர், 2019

கீழடியில் தானியம் சேகரிக்கும் பானை, தண்ணீர் தொட்டி கண்டெடுப்பு



கீழடி, செப்.5 சிவ கங்கை மாவட்டம் கீழடியில் புதன்கிழமை ஒரே குழியில் அரு கருகே 2,500 ஆண்டு களுக்கு முந்தைய தானியம் சேகரிக்கும் பானை, தண்ணீர் தொட்டி கண்டெடுக்கப் பட்டன.

கீழடியில் 2015-ஆம் ஆண்டு  மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டதில் ஆயிரக்கணக்கான  தொல்பொருள்கள் கண்டறியப்பட்டன. அவற்றை பரிசோதித்ததில் 2,500 ஆண்டுகள் பழைமையான நகர நாகரீகம் கீழடியில் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து மத்திய தொல்லியல் துறை 2 மற்றும் 3-ஆம் கட்டமாக அகழாய்வு நடத்தியது. அதன்பின் தமிழக தொல்லியல்துறை 4-ஆம் கட்ட அகழாய்வை மேற்கொண்டது.

அதன் தொடர்ச்சியாக 5-ஆம் கட்ட அகழாய்வு, தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவனாந்தம் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இதுவரை 5-ஆம் கட்ட அகழாய்வுக்காக 5 பேர்களின் நிலங்களில் 30-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதில் மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறை கிணறுகள், இரும்பு பொருள்கள், செப்புக் காசுகள், உணவுக்குவளை, தண்ணீர் கோப்பை உள்பட 750-க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன. மேலும் சுவர்கள், கால்வாய்கள், தரைத்தளம் உள்ளிட்டவையும் கண்டறியப்பட்டன.

இந்நிலையில் முருகேசன் என்பவரது நிலத்தில் புதன்கிழமை தோண்டப்பட்ட குழியில், தானியம் சேகரிக்கும் பானை, தண்ணீர் தொட்டி ஆகியவை அருகருகே கண்டெடுக் கப்பட்டன.

- விடுதலை நாளேடு, 5.9.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...