புதன், 4 செப்டம்பர், 2019

குன்றக்குடி மலைப்பகுதியில் பழங்காலக் குகை, ஓவியங்கள் கண்டுபிடிப்பு



ராஜபாளையம், செப்.2  ராஜபாளையம் அருகே உள்ள மீனாட்சிபுரம் குன்றக் குடி மலைப் பகுதியில் பழங்கால குகைகள், ஓவியங்கள் கண்டுபிடிக்கப் பட் டுள்ளன.

மீனாட்சிபுரம் குன்றக்குடி மலைப் பகுதியில் ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியரும், தொல்லியல் ஆய்வாள ருமான போ. கந்தசாமி, முதுகலை இரண்டாம் ஆண்டு வரலாற்று மாணவர் இருளப்பன், இளங்கலை ஆங்கில இலக்கியப் பிரிவு மாணவர் அந்தோணி, மாங்குடியைச் சேர்ந்த மலைக்கனி ஆகியோர் பழமை யான குகைகள், பழங்கால மக் கள், சித்தர்கள் வாழ்விடங்கள் ஆகியவற்றைக் கண் டறிந்துள்ளனர்.

இது குறித்து உதவிப் பேராசிரி யர் போ.கந்தசாமி கூறியதாவது:

இந்த மலையில் பெரிய குகை ஒன்று இரண்டு பிரிவாக உள்ளே நீண்டு செல்கிறது. உள்ளே தவழ்ந்து செல்லும் வகையில் வழி அமைக்கப்பட்டுள்ளது. மீனாட்சிபுரம் அருகே உள்ள புத்தூர் மலை சமணர் மலை ஆகும்.

இப்பகுதியில் சமண முனிவர்கள், சித்தர்கள் இக்குகைகளைப் பயன் படுத்தி இருக்கலாம்.

மேலும் பாறை இடுக்குகளில் அறை போன்று அமைத்து வாழ்ந்துள்ளதாகத் தெரிகிறது. இவற்றில் ஒரு பாறையில் மட்டும், வெள்ளை நிறக் கோடுகளால் குறுக்கு நெடுக்காக ஓவியம் வரையப் பட்டுள்ளது. இந்த உருவம் பழங்காலத் தில் வாழ்ந்த ஒருவகை விலங்கைக் குறிக்கிறது.

அதன் அருகே உள்ள பாறையில் நந்தி போன்று கோடு உருவம் உள்ளது. இம்மலையில் ஒரு பகுதியில் சமணப் படுக்கை உள்ளது.

இம்மலைக்கு அருகிலேயே உள்ள ஆமைமலையில் ஏற்கெனவே கண்டு பிடிக்கப்பட்ட 5,000 ஆண்டு களுக்கு முற்பட்ட கற்கால மனிதர்கள் வரைந்த வெள்ளை நிற பாறை ஓவியங்கள் அழியும் நிலையில் உள்ளன.

இம்மலையில் சிறு, சிறு குகை களில் கற்கால மனிதர்களின் வாழ் வியலை வெளிப்படுத்தும் வகையில், வரையப் பட்ட இப்பாறை ஓவி யங்கள் வெள்ளை நிறத்தில் மூன்று குகைகளில் தீட்டப் பட்டுள்ளன. பல வீரர்கள் விலங்குகளை ஆயுதங் களால் தாக்குவது, சூரி யன், புலி, யானை போன்ற உருவங்கள் காணப் படுகின்றன. வேட்டைக்காட்சி யில் குழுத்தலைவன் கிரீடம் அணிந் துள்ளார். மற்றொரு மலையின் கீழ்ப்பகுதி யில் உள்ள குகையில் ஒருவர் தியானம் செய்யும் காட்சி உள்ளது.

இந்த இடத்தைப் பாதுகாக்க தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

- விடுதலை நாளேடு, 2.9. 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...