வெள்ளி, 8 நவம்பர், 2019

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே பாறைக்கீறல் ஓவியங்கள்

கிருஷ்ணகிரி, நவ. 2- ‘தமிழகத் தின் மிகப்பெரிய பாறைக் கீறல் ஓவியங்கள், வேப்பனப் பள்ளி அருகே உள்ளன’ என கிருஷ்ணகிரி அரசு அருங் காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே நக்கநாயன பண்டா என்ற இடத்தில் உள்ள மலையில், காப்பாட்சியர் கோவிந்தராஜ் தலைமையிலான குழுவினர் மற்றும் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் முருகன் ஆகியோர் ஆய்வுக்கு சென்றனர். அங்கு 3 இடங்க ளில் பாறையில் வரையப்பட் டுள்ள கீறல் ஓவியங்களை ஆய்வு செய்தனர்.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:

கொங்கனப்பள்ளி கிராமத்தின் அருகே உள்ள மலைப்பகுதியில் 2 கிமீ தொலைவு வனப்பகுதியில் நடந்து சென்றால் நக்கநாயன பண்டா என்கிற இடம் உள் ளது. இவ்விடத்தில் உள்ள 3 பாறைகளில், பாறைக்கீறல் ஓவியங்கள் காணப்படுகின் றன. பாறை ஓவியங்களும், பாறைக்கீறல்களும், வரலாற் றுக்கு முற்பட்ட கால மக்க ளின் முக்கியமான இரு கலை வடிவங்களாகும். தமிழகத் தின் முதல் பாறை ஓவியம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கண்டு பிடிக்கப்பட்டது போல், தற்போது தமிழகத் தின் மிகப்பெரிய அதாவது சுமார் 6 அடி உயரமுள்ள ஒரே வடிவிலான 3 பாறை கீறல்களும் முதன்முறையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

இங்கிருந்து 50 அடி தொலைவிலேயே பெருங்கற் படைக் காலத்தை சேர்ந்த கற்திட்டைகளும் காணப்படு வதால், இப்பெரிய பாறைக் கீறலின் காலத்தையும் பெருங் கற்படைக்காலம் என தீர் மானிக்கலாம். இக்கால ஓவி யங்களில் உருவங்கள், ஒற்றை கோட்டால் வரையப்பட்டி ருக்கும். ஆனால், இக்கீறல் உருவமோ இரட்டைக் கோட் டால் முழு உருவமாகவே குறைந்த ஆழத்தில் கீறப் பட்டுள்ளது.

6 அடி உயரத்தில் பெண் வடிவத்தில் இருபுறம் சடை யும், உடலின் அமைப்பும் கத்தரி போலவும் உள்ளது. இருபுறமும் இரு சிற்றுருவங் கள் வரையப்பட்டுள்ளன. இவை பிற்காலத்தில் வரையப் பட்டவை என அதன் அமைப்பை வைத்து சொல்ல லாம். தலையும், கழுத்தும் தனித்த இரு வட்டங்கள் இணைந்தது போலவும், உடல் கத்தரிக்கோல் போன்ற அமைப்பிலும் வரையப்பட்டு உள்ளது. மூன்றாவது பாறை யில் உள்ள உருவம் இவை போன்றே இருந்தாலும், அது மிகவும் தேய்ந்து காணப்படு கிறது. கிருஷ்ணகிரி மாவட் டம் மட்டுமல்லாது, தமிழகத் தில் இதுவரை அறியப்பட்ட பாறைக் கீறல்களில் இதுவே பெரியதாகவும் இருக்கக் கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

- விடுதலை நாளேடு 2 11 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...