ஞாயிறு, 3 நவம்பர், 2019

தொல்லியல்துறையின் அகழ்வாய்வில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான வணிகமய்யம் ஆந்திராவில் கண்டுபிடிப்பு

நெல்லூர், நவ.3, ஆந்திர பிரதேசத்தின் நெல்லூரில் நாயுடுபேட்டா பகுதி அருகே கொட்டிபுரலு என்ற இடத்தில் இந்திய தொல்லியல் துறை முதற்கட்ட ஆய்வு பணியை மேற்கொண்டது.  இதில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த செங்கற்களால் கட்டப்பட்ட அமைப்பு ஒன்றும், விஷ்ணு சிலை ஒன்றையும் குழுவினர் கண்டறிந்தனர்.
இதில் பல கலை பொருட்களும் வெளியே எடுக்கப்பட்டன.  தொடக்க காலத்திற்கு உட்பட்ட பல்வேறு மண்பாண்டங்களும் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.  இதுபற்றிய ஆய்வு மேற் கொண்டதில், இந்த இடம் கடல்வழி வர்த்தகத்துடன் தொடர்புடைய ஒன்றாக இருந்திருக்கும் என தெரிய வந்துள்ளது.  தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டால், வர்த்தக மய்யமாக செயல்பட்ட இந்த பகுதியை பற்றிய சுவாரசிய உண்மைகள் தெரிய வரும் என குழுவினர் தெரிவித்து உள்ளனர்.
இந்த பகுதியில் செம்பு மற்றும் காரீய பொருட்களால் ஆன நாணயங்கள், இரும்பினால் ஆன ஈட்டி, டெரகோட்டா விதைகள், கற்களால் ஆன காதணிகள் உள்ளிட்ட மற்ற கலை பொருட்களும் கிடைத்துள்ளன.  தொடர்ந்து இந்த பகுதியில் புவியியல், ரசாயன ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- விடுதலை நாளேடு, 3.11.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...