திங்கள், 24 பிப்ரவரி, 2020

ஈரோடு மாவட்டத்தில் 1,200 ஆண்டுக்கு முந்தைய ஏரி கண்டுபிடிப்பு


ஈரோடு, பிப்.24,  ஈரோடு  மாவட்டம் பவானி அருகே பிரம்மதேசம் கிராமத்தில் கல்லாம்பாறை பகுதியில் உள்ள  ஒரு ஓடைக்கு அருகில் பழங்கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பகுதியில் கி.பி.8ஆம்  நூற்றாண்டை சேர்ந்த ஒரு ஏரி  இருந்ததும், கொங்கு மண்டலத்தின் மிகவும்  பழைமையான ஏரி என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து கல்வெட்டு ஆய்வாளர் புலவர் ராசு கூறியதாவது: கல்வெட்டில் ‘செருக்கலி நாடாளரால் பணிக்கப்பட்டது’ என கூறப் பட்டுள்ளது. ஏரியின் கரை ‘சிறை’ என்றும், ஏரியின் நீர்வெளியேறும் மதகு  ‘வாய்’ என்றும் கூறப்பட்டது. ஏரிபோல கரைகளுக்கு நட்டன் சிறை, மதகுகளுக்கு  நட்டன் வாய் என்று  அழைக்கப்பட்டது.

இந்த ஏரியின் பயனை  நாடாளரின் வழியினராகிய ‘மக்கள் மக்கள், பேரர் பேரர்’  அதாவது நாடாளரின்  வம்சத்தினர் அனுபவித்த தாக  குறிப்பிடப்பட்டு உள்ளது. பிற்காலத்தில் 8 ஆறுகளில் 90  அணைகள் கட்டி நீர்ப்பாசன வசதி பெருக்கிய  மக்களின் தொடக்க முயற்சியை  இது காட்டுகிறது. இவ்வாறு புலவர் ராசு கூறினார்.

 - விடுதலை நாளேடு, 24.2.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...