வியாழன், 22 ஜூலை, 2021

கீழடியில் மேலும் ஓர் உறை கிணறு கண்டுபிடிப்பு

 

திருப்புவனம்ஜூலை 17- தமிழ் ஆட்சிமொழிதமிழ் கலாசாரம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையின் கீழ் சுற்றுலாகலாசாரம் மற்றும் இந்து சமய அறநிலையங்கள் துறை முதன் மைச்செயலாளர் பி.சந்திர மோகன் வழிகாட்டுதலில்மாநில தொல்லியல் துறை ஆராய்ச்சி ஆலோசகர் பேரா சிரியர் கே.ராஜன் மற்றும் கீழடி அகழாய்வு இயக்குநர் ஆர்.சிவா னந்தம் ஆகியோர் மேற்பார்வை யில் சிவகங்கை மாவட்டம் கீழடிதூத்துக்குடி மாவட்டம் ஆதிச்ச நல்லூர்சிவகளைகொற்கைஈரோடு மாவட்டம் கொடுமலைஅரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலா டும்பாறை ஆகிய 7 இடங்களில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி நடந்து வரு கிறது.

சிவங்கை மாவட்டம் திருப்பு வனம் அருகே உள்ள கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வு கடந்த பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வரு கிறதுஇதில் பண்டைய மக்கள் விளையாடுவதற்காக பயன்படுத் தப்பட்ட உபகரணங்கள்ஓடுக ளால் செய்யப்பட்ட அணி கலன்கள்மண் பாத்திரங்கள்நெசவாளர் கருவிகள்கையால் தயாரிக்கப்பட்ட ஓடுகள் உள் ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளனஇதன்மூலம் பண்டைய தமிழர்களின் நாகரி கத்தை தொல்லியல் துறை வெளிக்கொணர்ந்து வருகிறது.

கீழடி 7ஆம் கட்ட அகழாய் வில் சில தினங்களுக்கு முன்பு 3 அடுக்குகளை கொண்ட உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டதுஉறை கிணற்றின் வெளிப்புறத்தில் கயிறு வடிவில் 2 டிசைன்கள் வடிவமைக்கப்பட்டிருந்தனஇந்தநிலையில் மேலும் ஒரு உறை கிணறு கீழடியில்  கண்டு பிடிக்கப்பட்டுள்ளதுஇந்த உறை கிணற்றிலும் அலங்காரம் செய் யப்பட்டிருந்ததுகிழக்கில் இருந்து மேற்காக 58 செ.மீநீளமும்அதன் பெரும்பான்மை யான பகுதி தெற்கு பகுதியின் உள்ளே செல்லும் வகையிலும் இருக்கிறது.

தெற்கு பகுதியில் செங்குத்தாக இது 18 செ.மீநீளமும் உள்ளதுஅலங்காரம் செய்யப்பட்ட விளிம்பின் தடிமன் 3 செ.மீஆகும்அகழாய்வுக்காக தோண் டப்பட்ட குழியின் தென்கிழக்கு மூலையில் இந்த உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுஅந்த குழியின் பிற பகுதிகளில் மண்ணில் செய்யப்பட்ட பொருட்களோகலைப்பொருட் களோ எதுவும் கண்டுபிடிக்கப் படாத நிலையில்நதியின் வண் டல் மண் படிவுகள் கண்டுபிடிக் கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...