வியாழன், 12 ஆகஸ்ட், 2021

சிங்கம்புணரி அருகே பழைமையான மண்குடுவை கண்டெடுப்பு

 

ஜெயங்கொண்டம்ஜூலை 26 சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கழிப்பறைக்காகத் தோண்டிய குழியில் பழைமையான கருப்புநிற மண்குடுவை கண்டெடுக் கப்பட்டது.

சிங்கம்புணரி அருகே ஜெயங்கொண்ட நிலை யைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி பொன்னழகுஇவர் தனது வீட்டின் அருகே கழிப்பறை கட்டு வதற்காகக் குழி தோண் டியுள்ளார்அப்போது

அடி ஆழத்தில் பழை மையான மன்னர்கள் காலத்து கருப்பு நிற மண்குடுவை இருந்ததுஇது அரை அடி உயரம் இருந்தது.

இதுகுறித்து பொன் னழகு உறவினர் திருநாவுக்கரசு வருவாய்த் துறையினருக்குத் தகவல் கொடுத்தார்அங்கு வந்த வட்டாட்சியர் திருநாவுக் கரசுகிராம நிர்வாக அலுவலர் சசிவர்ணம் மண் குடுவையைக் கைப் பற்றி சிங்கம்புணரி வட் டாட்சியர் அலுவலகத் திற்கு எடுத்துச் சென் றனர்.

இதுகுறித்து வட் டாட்சியர் திருநாவுக்கரசு கூறுகையில், ‘’பழைமை யான குடுவையாக இருப் பதால் தொல்லியல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளோம்அவர்கள் ஆய்வு செய் தால் மட்டுமே குடுவை யின் காலம் போன்றவை தெரியவரும்‘’ என்றார்.

குடுவை கிடைத்துள்ள பகுதியில் மேலும் தொல் பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளதால் அப் பகுதியை அகழாய்வு நடத்த வேண்டுமெனத் தொல்லியல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழ்நாடு மாவட்டங்கள் பிரிந்த வரலாறு – நிர்வாகமும் வளர்ச்சியும்!

  படிக்க – பாதுகாக்க!தமிழ்நாடு மாவட்டங்கள் பிரிந்த வரலாறு – நிர்வாகமும் வளர்ச்சியும்! விடுதலை நாளேடு Published February 15, 2025 தமிழ்நாட்டி...