காலச்சுவடு

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2023

அரூர் அருகே 1400 ஆண்டுகள் பழைய பல்லவர் கால நடுகல் கண்டெடுப்பு



  February 18, 2023 • Viduthalai

தர்மபுரி, பிப். 18- தருமபுரி மாவட்டம் அருர் வட்டத்திற்குட்பட்ட ஆலம்பாடி என்ற கிராமத்தில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த ச.பாலமுருகன், சி.பழனிச்சாமி, சிற்றிங்கூர் ராஜா, தண்டராம்பட்டு சிறீதர் மற்றும் விக்னேஷ்வரன் ஆகியோரைக் கொண்ட குழு கள ஆய்வு செய்தது. இதில் 2 பல்லவர்கள் கால நடுகல் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன.

ஆலம்பாடி கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள வேடியப்பன் கோயிலில் புதைந்த நிலையில் இரண்டு நடுகற்களையும் வெளியே எடுத்து ஆய்வு செய்ததில் இரண்டு நடுகற்களிலும் வட்டெழுத்துக் கல்வெட்டு இருப்பது கண்டறியப் பட்டது.இந்த நடுகல் கல்வெட்டை படித்து விளக்கமளித்த தொல்லியல் அறிஞர் ர.பூங்குன்றன் கூறியதாவது, "ஒரு நடுகல் வீரர் உருவம் ஒன்றும், அதில் இடது கையில் கேடயமும் வலது கையில் வாளும் அமைக்கப்பட்டுள்ளது. இடைக்கச்சையும் அணிந்து சண்டைக்கு ஆயத்தமாகும் நிலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் இட புறத்தில் வட்டெழுத்தில் உள்ள கல்வெட்டு, பல்லவ மன்னன் மகேந்திர வர்மனின் நான்காவது ஆட்சியாண்டில் இது வெட்டப்பட்டதென்றும், இதில் காட்டி சாமி என்பவர் கீழ் வாளப்பாடி மாத விண்ணனோடு கால்நடைகள் அதிகம் இருக்கும்  புஞ்சி என்ற ஊரை ஆளும் ராமசாத்தன் என்பவர் இறந்துபோனதை குறிப்பிடுகிறது. என்றும் சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பே பல்லவர்கள் காலத்தில் வெட்டப்பட்ட இந்த நடுகற்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது " எனத் தெரிவித்தார்.

தென்பெண்ணையாற்றின் கரையில் அமைந்துள்ள இந்த வேடியப்பன் கோயிலில் மண்ணில் புதைந்திருந்த நடுகற்களை மீட்டு, ஆய்வு நடுவத்தினரும் ஊர்மக்களும் இணைந்து அதே இடத்தில் அடிபீடம் அமைத்து நிலையாக நிற்கவைக்கப்பட்டது.தென்பெண்ணையாற்றின் கரையில் ஏற்கெனவே திருவண்ணாமலை, கள்ளக் குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் பல நடுகல் கல்வெட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இதுபோல மண்ணில் புதைந்த நிலையில் இன்னும் நடுகற்கள் கிடைப்பதினால் தென்பெண்ணை யாற்றின் இருகரைகளிலும் உள்ள ஊர்களில் ஆய்வுகள் மேற்கொண்டால் இன்னும் பல அரிய வரலாற்றுத் தடங்கள் வெளிவர வாய்ப்புள்ளது என்றும் இந்த நான்கு மாவட்டங்களையும் உள்ளடக்கிய இந்த பகுதியை நடுகல் மண்டலமாக அறிவித்து நடுகற்களையும் கல்வெட்டு களையும் ஆவணப்படுத்தி பாதுகாக்க தமிழ்நாடு தொல்லியல் துறை முன்வரவேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

நேரம் பிப்ரவரி 19, 2023
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: நடுக்கல், பல்லவர் காலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

தமிழ்நாடு மாவட்டங்கள் பிரிந்த வரலாறு – நிர்வாகமும் வளர்ச்சியும்!

  படிக்க – பாதுகாக்க!தமிழ்நாடு மாவட்டங்கள் பிரிந்த வரலாறு – நிர்வாகமும் வளர்ச்சியும்! விடுதலை நாளேடு Published February 15, 2025 தமிழ்நாட்டி...

  • பார்ப்பனர்கள் மட்டுமே நீராட படித்துறையாம்! கல்வெட்டுக் கண்டுபிடிப்பு!
      Published October 21, 2024 விடுதலை நாளேடு நெல்லை, அக். 21- தென்காசி மாவட்டம் அனுமன் நதியில், 114 ஆண்டுகள் பழைமையான படித்துறைக் கல்வெட்டு க...
  • தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வில் மயிலாடும்பாறை பகுதியில் பழங்கால இரும்பு வாள், மண் பானைகள் கண்டுபிடிப்பு
      July 20, 2021  • Viduthalai கிருஷ்ணகிரி , ஜூலை  20-  மயிலாடும்   பாறை   பகுதியில்   தொல்லியல்   துறை   சார்பில்   மேற்கொள்ளப்பட்டு   வரும்...
  • மாவலி, நரகாசுரன் போன்றோர் நம் இன மண்ணுரிமைப் போராளிகள்!
    புராணங்கள் கற்பனை என்பதில் எந்த மறுப்பும் இல்லை. ஆனால், அவற்றுள் நுழைத்துள்ள சில உள்ளார்ந்த கருத்துகள் அன்றைய நிகழ்வுகளை அடிப்படையாகக் க...
Powered By Blogger

Translate

இந்த வலைப்பதிவில் தேடு

  • முகப்பு

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

பின்பற்றுபவர்கள்

வலைப்பதிவு காப்பகம்

  • மார்ச் 2025 (1)
  • அக்டோபர் 2024 (2)
  • பிப்ரவரி 2024 (1)
  • மே 2023 (2)
  • மார்ச் 2023 (2)
  • பிப்ரவரி 2023 (3)
  • ஜனவரி 2023 (3)
  • ஆகஸ்ட் 2022 (2)
  • ஜூலை 2022 (1)
  • பிப்ரவரி 2022 (1)
  • ஜனவரி 2022 (2)
  • அக்டோபர் 2021 (1)
  • செப்டம்பர் 2021 (2)
  • ஆகஸ்ட் 2021 (8)
  • ஜூலை 2021 (4)
  • மே 2021 (2)
  • ஏப்ரல் 2021 (1)
  • ஜனவரி 2021 (1)
  • டிசம்பர் 2020 (1)
  • ஜூன் 2020 (1)
  • மார்ச் 2020 (1)
  • பிப்ரவரி 2020 (3)
  • டிசம்பர் 2019 (2)
  • நவம்பர் 2019 (3)
  • அக்டோபர் 2019 (6)
  • செப்டம்பர் 2019 (13)
  • ஆகஸ்ட் 2019 (3)
  • ஜூலை 2019 (2)
  • ஜூன் 2019 (5)
  • மே 2019 (5)
  • ஏப்ரல் 2019 (6)
  • பிப்ரவரி 2019 (1)
  • ஜனவரி 2019 (1)
  • டிசம்பர் 2018 (3)
  • நவம்பர் 2018 (4)
  • அக்டோபர் 2018 (4)
  • செப்டம்பர் 2018 (2)
  • ஆகஸ்ட் 2018 (2)
  • ஜூலை 2018 (5)
  • ஜூன் 2018 (7)
  • மே 2018 (3)
  • மார்ச் 2018 (8)
  • பிப்ரவரி 2018 (9)
  • ஜனவரி 2018 (4)
  • டிசம்பர் 2017 (18)
  • நவம்பர் 2017 (4)
  • அக்டோபர் 2017 (5)

லேபிள்கள்

  • அகழ்வாய்வு
  • அகழாய்வு
  • அம்பேத்கர்
  • அய்யனார் சிலை
  • அய்ராவதம் மகாதேவன்
  • ஆணைகள்
  • ஆதிச்சநல்லூர்
  • ஆந்திரா
  • ஆய்வு
  • ஆஷ் துரை
  • இந்தியா
  • இராசராசன்
  • இராஜராஜ சோழன்
  • இரும்பு
  • இளையான்குடி
  • உறைகிணறு
  • எழுத்தாணிகள்
  • ஏரி
  • கண்டுபிடிப்பு
  • கல் கருவி
  • கல் செக்கு
  • கல் திட்டை
  • கல்செக்கு
  • கல்யாண ரத்து
  • கல்வி
  • கல்வி உரிமை
  • கல்வெட்டு
  • கலகம்
  • கற்பதுக்கை
  • கற்றூண்
  • காசு
  • காண்டாமிருகம்
  • கால்வாய்
  • கிணறு
  • கிருஷ்ணகிரி
  • கீழடி
  • குகை
  • குத்துக்கல்
  • குமிழி மடைத் தூண்
  • கேரளா
  • கொந்தகை
  • கொற்கை
  • கோட்சே
  • கோயில் அனுமதி
  • கோயில் நுழைவு
  • சங்க கால நகரம்
  • சமணம்
  • சாத்தூர்
  • சாதனை
  • சிங்கம்புணரி
  • சிலை
  • சிவகங்கை
  • சிவகளை
  • சிவாஜி
  • சுவர்
  • செங்கல்பட்டு
  • செப்பேடு
  • செய்யாறு
  • சென்னிமலை
  • சோழர்
  • சோழன்
  • தடயம்
  • தடுப்பணை
  • தமிழ் எழுத்து
  • தமிழ்நாடு மாவட்டங்கள்
  • தானம்
  • திப்புசுல்தான்
  • திராவிடர் இயக்கம்
  • திருமணம்
  • திலகர்
  • தீவிரவாதிகள்
  • துலாபாரம்
  • தென்காசி
  • நடுக்கல்
  • நடுகல்
  • நம்பூதிரி
  • நாணயம்
  • நியாண்டர்தல்
  • நினைவகம்
  • நினைவுச் சின்னம்
  • நீதிக்கட்சி
  • நீராட படித்துறை
  • நெல்
  • படுக்கை
  • பரோடா
  • பல்லவர் காலம்
  • பல்லவர்கால சிலை
  • பழமை
  • பழனி
  • பழைமை
  • பாண்டியர் காலம்
  • பார்ப்பன ஆதிக்கம்
  • பார்ப்பனத்தி
  • பார்ப்பனர்
  • பார்ப்பனர்கள் மட்டும்
  • பார்ப்பனர்களுக்கு
  • பாறை ஓவியம்
  • பாறை கீரல்
  • பானை
  • புத்தம்
  • புதை படிமம்
  • புதைவிடம்
  • புரட்டு
  • பூம்புகார்
  • பெண்கள் சட்டய
  • பொருட்கள்
  • பொற்பனைக் கோட்டை
  • மகாபாரதம்
  • மகாவீரர்
  • மண் பானை
  • மறைவு
  • மன்னன்
  • மானாமதுரை
  • முதுமக்கள்
  • முதுமக்கள் தாழி
  • மூடத்தனம்
  • மேலாடை
  • ராமநாதபுரம்
  • வரலாறு
  • வாணியர்
  • வாள்
  • விருது
  • விலங்கு மனிதன்
  • வைரமுத்து
நீர்வரி தீம். Blogger இயக்குவது.