செவ்வாய், 14 நவம்பர், 2017

தாமரை தேசிய மலர் அல்ல!


இந்திய தாவரவியல் ஆய்வு மய்யம் தகவல்

டில்லி, நவ.14 உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவைச் சேர்ந்த அய்ஸ்வர்யா பராஷர் என்பவர், தாமரை தேசிய மலராக அறிவிக்கப்பட்டுள் ளதா? என்று கேள்வி எழுப்பி,  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ்  இந்திய தாவர வியல் ஆய்வு மய்யத்தில் விண்ணப்பித்திருந்தார். நாடு முழுவதும் இந்தியாவின் தேசியமலர் தாமரை  என்று நம்பப்பட்டு வந்தது. பள்ளிப் புத்தகங்களிலும் தாமரையே தேசிய மலர் என்றே குறிப் பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய தாவரவியல் ஆய்வு மய்யம் அளித்துள்ள பதிலில் தாமரை தேசிய மலர் அல்ல என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்தியா வுக்கு தேசிய மலர் என்று ஒன்றே இல்லை என்று தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் விடுதலைக்குப் பின்னர், இந்தியாவின் தேசிய மலர் தாமரை என்று கருதப் பட்டு வரும் நிலையில், தாமரை மலர் இந்தியாவின் தேசிய மலரே அல்ல. ஆகவே, இந்திய அரசு தகவல் தொடர்பு ஊடகங்களில் தாமரை குறித்த தவறான தகவல்களை அகற்ற வேண்டும் என்றும் குறிப்பிட் டுள்ளது.
- விடுதலை நாளேடு,14.11.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...