செவ்வாய், 9 அக்டோபர், 2018

கீழடி கண்மாயில் பழைமையான உறை கிணறு கண்டுபிடிப்பு

கீழடி, அக்.8 கீழடி கண்மாயில் பழைமையான உறை கிணறு சனிக்கிழமை கண்டுபிடிக்கப் பட்டது.


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பசியாபுரம்-கீழடி சந்திப்பு பகுதியில் உள்ள நான்கு வழிச் சாலை அருகே கீழடி கண்மாய் உள்ளது.

இக்கண்மாயில் அப்பகுதி பள்ளி மாணவர்கள் சனிக்கிழமை விளையாடிக் கொண்டிருந்த போது, பழைமையான கிணறு இருப்பதை கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து கீழடி பள்ளிச் சந்தை புதூரில் அகழாய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த தமிழக தொல் லியல் துறை அலுவலர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, அங்கு வந்த தமிழக தொல்லியல் துறை அலுவலர்கள் உறை கிணற்றை ஆய்வு செய்தனர். கீழடி அக ழாய்வில் ஏற்கெனவே கிடைத்த உறை கிணற்றின் சம காலத்தை ஒட்டிய சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான உறை கிணறு என்பது ஆய்வில் தெரிய வந்தது.

மேலும், அதனை முழுமை யாக தோண்டி ஆய்வு செய்த போது, ஏற்கெனவே கீழடி அக ழாய்வில்  கண்டு பிடிக்கப்பட்ட உறை கிணற்றை விட இந்த கிணறு பல்வேறு வகைகளில் வடிவமைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

மேலும் அந்த கிணற்றுக்குள் சில மண்பாண்ட பொருள்களும் இருந்தன.

இதனால், இந்த பகுதி முழுவதும் பழங்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் மேடு பகுதியாக இருக்கலாம் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

- விடுதலை நாளேடு, 8.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...