திங்கள், 29 அக்டோபர், 2018

பழனி அருகே பழங்கால சின்னங்கள் புதைந்து கிடக்கின்றன அகழாய்வு நடத்த தொல்லியல் ஆய்வாளர்கள் கோரிக்கை



பழனி, அக்.27 பழனி அருகே இரவிமங்கலம் கிராமம் அமைந் துள்ளது. இப்பகுதியில் முது மக்கள் தாழிகள், எலும்புகள், மண் கலயங்கள், பானைகள், ஓடுகள் போன்றவை உடைந்த நிலையில் கிடக்கின்றன. சுமார் 200 ஏக்கர் பரப்பில் இந்த பழங் கால சின்னங்கள் புதைந்து கிடக்கின்றன.

இந்த இடத்தை தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்தால் மேலும் பல அரிய பொருட்கள் கிடைக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி மற்றும் ஆய்வாளர்கள் கூறிய தாவது:-

இரவிமங்கலம் பகுதியில் பாலாறு-பொருந்தலாறு அணையின் கிளை வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் அமைப்பதற்காக பள்ளம் தோண்டிய போதும், அப்பகுதி யில் விவசாய பணிக்காக நிலத்தை சீரமைத்த போதும் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் மண்ணுக்குள் புதைந்திருந்த பழங்கால பொருட்கள் சிதைந்து விட்டன.

மீதமுள்ள 100 ஏக்கரில் சுமார் 180-க்கும் மேற்பட்ட பழங்கால சின்னங்கள் கிடைத்துள்ளன.

இரவிமங்கலம் பகுதியில் உள்ள புதைகுழி பகுதிகளில் சங்க காலத்தில் 3 இரும்பு உருக் காலைகள் இருந்தது கண்டறியப் பட்டுள்ளது. இரும்பு அச்சு உலைகள், இரும்பை உருக்க தேவையான சுண்ணாம்பு கட்டிகள் இன்றும் அப்பகுதியில் உள்ளன. சங்க கால புதைகுழிகள் பொதுவாக வட்ட வடிவிலேயே காணப்படும். அதுபோல இங் குள்ள 2 புதைகுழிகளும் வட்ட வடிவில் உள்ளன. சங்க காலத் தின் இறுதியில் இந்த வடி விலான புதைகுழிகள் பயன் படுத்தப்பட்டிருக்கலாம்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இரவிமங்கலம் பகுதியில் இருக்கும் சின்னங்கள், புதை குழிகளை தொல்லியல் துறை யினர் அகழாய்வு செய்தால் ஆதிச்சநல்லூர், கொடுமணல், பொருந்தல் பகுதியில் கிடைத்த தைவிட அதிக சின்னங்கள், பழங்கால பொருட்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது எனக் கூறினர்.

- விடுதலை நாளேடு, 27.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...