புதன், 4 செப்டம்பர், 2019

கீழடி அகழாய்வில் தானியம் சேகரிக்கும் மண்பானை கண்டெடுப்பு



சென்னை, ஆக.31 சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், நெல் உள்ளிட்ட தானியம் சேகரிக்கும் பெரிய மண் பானை வெள்ளிக்கிழமை கண்டெ டுக்கப்பட்டுள்ளது.

கீழடியில் கடந்த 2015-இல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற் கொண்டது. அதில், கண்டெடுக்கப் பட்ட ஆயிரக்கணக்கான தொல் பொருள்கள் 2,500 ஆண்டுகள் பழைமையானவை என்றும், இதன் மூலம் நகர நாகரிகம் கீழடியில் இருந் ததும் தெரியவந்தது.    தொடர்ந்து, மத்திய தொல்லியல் துறை 2 மற்றும் 3-ஆம் கட்ட அகழாய்வோடு நிறுத்திக்கொண்டது. அதையடுத்து, தமிழக தொல்லியல் துறை 4-ஆம் கட்ட அகழாய்வை மேற்கொண்டது. கடந்த ஜூன்  13 -ஆம் தேதி முதல் 5-ஆம் கட்ட அகழாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த அகழாய்வு, தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் நடைபெறுகிறது. இதுவரை, முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு, நீதி ஆகியோரது நிலங்களில் 30-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட் டுள்ளன. அவற்றில், மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறைகிணறுகள், இரும்புப் பொருள்கள், செப்புக் காசுகள், உணவு குவளை, தண்ணீர் குவளை உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டெடுக் கப்பட்டுள்ளன. மேலும், சுவர்கள், கால்வாய்கள், தண்ணீர் தொட்டி ஆகியனவும் கண்டறியப்பட்டுள்ளன.       இந்நிலையில், வெள்ளிக்கிழமை முருகேசன் என்பவரது நிலத்தில், நெல் உள்ளிட்ட தானியங்களைச் சேகரிக்கும் பெரிய மண்பானை கிடைத்துள்ளது. இதன்மூலம், 2,500 ஆண்டுகளுக்கு முன் தானியங்களைச் சேகரிக்க மண்பாண்டப் பொருள் களை பயன்படுத்தியதும், விவசா யத்திலும் இப்பகுதி சிறந்து விளங் கியதும் தெரியவந்துள்ளது.

- விடுதலை நாளேடு, 31. 8. 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...