திங்கள், 15 ஜூன், 2020

இராசராச_சோழனின்_பொற்கால_ஆட்சி ?

பரவலாக வரலாற்றை நன்கறிந்தவர்கள் ராசராச சோழனை தெலுங்கன் என்று சொல்லுகிறார்கள். அதாவது கொல்டி என்பதே இதனுடைய ஆழமான அர்த்தமுறை. ராசராச சோழன் எப்படி தெலுங்கன் என்பதனை நாம் இந்த கட்டுரையின் கடைசி வரிகளில் பார்ப்போம். எல்லா மாமன்னர்கள் போலவும் தமிழ் மன்னர் என்று சொல்லப்படும் சத்திரிய குல வம்சத்தை சார்ந்த ராசராச'னும் பல பொண்டாட்டிகள் மற்றும் வைப்பாட்டியுடன் உடன் அந்தபுரத்தின் பிடியில் சிக்கியிருந்தார் என்பது தனிக்கதை . பின்னென்னா ? மன்னர் எனறால் அந்தபுரம் இல்லாமலையா இருக்கும் ? வரலாற்றை நோண்டி பார்க்கும்போது பல மன்னர்களின் வாழ்கை அந்நபுரத்திலே கழிந்துதான் போயிருக்கிறு. இங்கு வைப்பாட்டியை பற்றி பேசினால் பல கூமுட்டை தமிழ்த்தேசியவாதிகள் கலைஞர் ஏன் மூன்று பொண்டாட்டி கட்டினார் என்று கேள்வி எழுப்புவார்கள். குறிப்பாக இந்த கேள்வியை எந்த தமிழ்த்தேசியவாதிகள் கேட்பார்கள் என்றால் ? ஈழத்தில் பிணத்தை வைத்து இங்கு அரசியல் செய்யும் சாமான் என்கிற டோபர் ஆமைக்கறிகாரனும் அவருடைய ஆளுமையின்கீழ் வரும் விசிலடித்தான் குஞ்சிகளான அவனுடைய தம்பிமார்களும்தான் இதுபோல ஒவ்வாத அதாவது பொருந்தாக கேள்வியை கேட்டு பையத்தியகாரன்கள் போல கூவிக்கிட்டு இருப்பானுங்க. இவீங்களுக்கு பொண்டாட்டிக்கும் வைப்பாட்டிக்கும் அர்த்தம் தெரியாத ஒருவகையான அழுகிபோன கூமுட்டைகள்.
சரி நாம , ராசராச சோழன் மேட்டருக்கு வருவோம் !
ஆமாம் ராசராச சோழனை பற்றி பேசினால் வழக்குவேற போடுவானுங்கனு வெளியில அரக்கபறக்க பேசிக்கிறானுங்க ? சரி , அவனுங்க நம்ம மீது வழக்காவது போடட்டும் இல்ல வேற எதாவது கூட போடட்டும் . நாம மறைக்கப்பட்ட ராசராச சோழனின் வரலாற்றுக்கு வருவோம் .
ஆமா ராசராசனை பார்ப்பனீய அடிமைனு வேற இங்கே பேசிக்கிறானுங்களோ ?
அடா ஆமா'பா , நீங்க நினைக்கிற மாதிரி மாமன்னர் ரசாராச சோழன் ஆரிய பாரப்பனீயனி்ன் அடிமைதான் . ராசராசன் மட்டுமா பார்ப்பனீயத்தின் அடிமை ? இல்லையில்லை ! ஏறதாழ இந்தியாவை ஆண்ட குறுநில மன்னர்கள் முதல் சிற்றரசர்கள்வரை ஆரிய பார்ப்பனீயத்தின் ஒருவகையான அடிமைகள்தான் .
ஆமா ரஞ்சித் சொன்ன மாதிரி பறையர்களின் நிலத்தை ராசராச சோழன் புடுங்கி கைபர் , போலான் , கணவாய் வழியாக ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டு பஞ்சம் பிழைக்க பரதேசியாக இந்தியாவில் ஊடுருவிய ஆரிய பார்ப்பனீயத்துக்கு கொடுத்தரா ? ஆமா ! ராசராச சோழன் இந்த மண்ணின் பூர்வகுடிகளான ஆதிக்குடிகளான பறையர்களின் நிலங்களை புடுங்கிதான் பார்ப்பனீயத்துக்கு கொடுத்தார் என்று ராசராச சோழன் காலத்தில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் நமக்கு சாட்சியாக இருக்கிறன. மற்றும் இதற்கான ஆராய்ச்சி தரவுகளும் நம்மிடம் உள்ளன.
அப்படி , ராசராச சோழன் பறையர்களின் நிலங்களை பிடிங்கி பார்ப்பனர்களுக்கு கொடுக்கவில்லை என்றால் ? யாருடைய நிலத்தை ராசராச சோழன் பார்ப்பனர்களுக்கு கொடுத்தான் ! பொதுவாகவே பார்ப்பனர்கள் பஞ்சம் பிழைக்க இந்தியாவில் ஊடுருவினார்கள் என்று நமக்கு வரலாற்று சான்றுழ்கள் உள்ளன . அப்படி இருக்கையில் பார்ப்பனர்களுக்கு எப்படி இங்கு நிலம் வந்தது ? சிலர் சொல்லுவார்கள் பார்ப்பனர்கள் உழைத்து நிலங்களை வாங்கினார்கள் என்று . பார்ப்பனர்கள் கோயிலில் மணியாட்டித்தான் பழக்கப்பட்டவர்கள் , இவர்கள் எப்படி உழைத்து நிலங்களை வாங்கி இருப்பார்கள் ?
பிரம்மதேயம் என்ற பெயரில் பார்ப்பனர்களுக்கு நிலங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. வரியும் கிடையாது ! தேவதானம் , இறையிலி , அகரங்கள் , அக்ரகாரங்கள் , சதுர்வேதி மங்கலங்கள் , தனிக் கிராமங்கள் என்று Tatal free Allowance'க 250 ஊர்கள் ராசராச சோழன் பார்ப்பனீயத்துக்கு தானமாகவே கொடுத்துள்ளார். இவ்ஊர்களில் எதாவது குற்றம் நிகழ்ந்தாலும் பார்ப்பனீய காவலன் ராசராச சோழனின் அதிகாரிகள் உள்நுழைய மாட்டார்கள். அது மட்டுமா ? லட்சகணக்கானா ஏக்கர் விவாசய நிலங்களையும் ராசராச சோழன் தானமாக பார்ப்பனர்களுக்கு கொடுத்துள்ளான்.
பார்ப்பனர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலங்கள் யாருடைய நிலம் என்று இங்கு இயல்பாகவே ஒரு கேள்வி எழுகிறது , இதற்கான விடயம்தான் பா.ரஞ்சித் சொன்ன விடயம் .
ராசராசன் ஆட்சிக்காலத்தில் 11 வகையான வரிகள் விதிக்கப்பட்டன . இதில் ஆச்சிரியமான ஒரு விஷயம் என்னவெனறால் இதில் 11 வகையான வரிகளில் பார்ப்பனர்கள் ஒருவரியை கூட கட்டவேண்டிய அவசியமில்லை என்பதே நாம் இங்கு கவனிக்கவேண்டிய விஷயம் .
ராசராசன் ஆட்சியில் விதிக்கப்பட்ட வரிகள் விபரங்கள் இங்கு பார்ப்போம் .
📎 வட்டி நாழி = கழணிக்குத் தண்ணீர் பாய்ச்சிய நேரத்துக்கு வரி
📎 கண்ணாலக் காணம் = பொதுமக்கள் திருமணம் செய்து கொண்டால் செலுத்தப்பட்ட வரி
📎 வண்ணாரப பாறை = துணி வெளுப்பவர்கள் செலுத்திய வரி
📎 மீன் பாட்டம் = மீனவர் செலுத்திய வரி
📎 குசக காணம் = மண்பாண்டக் குயவர்கள் செலுத்திய வரி
📎 தறி இறை = தறி நெய்யும் நெசவாளர் செலுத்திய வரி
📎 ஆட்டு இறை = ஆடு வளர்ப்பவர்கள் செலுத்திய வரி
📎 நல்லெரு இறை = எருது பசு வளர்ப்போர் செலுத்திய வரி
📎 ஓடக் கூலி = ஓடம் செலுத்துவோர் செலுத்திய வரி
📎 ஈழம் பூட்சி = பனைக் கள் இறக்குவோர் செலுத்திய வரி
ராசராச சோழன் ஆட்சிகாலத்தில் மக்கள் இத்தனை வகையான வரிகளை கட்டி நொந்துபோனார்கள் . ராசராச சோழனின் ஆட்சிக்காலத்தை பொற்கால ஆட்சி என்று சொல்லுவார்கள் . ஆமா அவை உண்மைதான் ராசராச சோழனின் ஆட்சி பொற்கால ஆட்சிதான் . இதில் ஒருசின்ன திருத்தம் இது ஒட்டுமொத்த மக்களுக்கான பொற்கால ஆட்சி கிடையாது . மாறாக பஞ்சம் பிழைக்கவந்த ஆரிய பார்ப்பனர்க்கனா பொற்கால ஆட்சி .
சோழ நாட்டு மக்கள் , வரி கொடா இயக்கம் நடத்தியது கூட உண்டு! அதை ஆடுதுறையில் இருக்கும் கல்வெட்டு பேசுகிறது. பிராமணர் முதலிய சதுர்வேதி மங்கல நிலச் சொந்தக்காரர்கள் , இடங்கை 96 வகைச் சாதியினருக்கு இழைத்த கொடுமைகளைக் கல்வெட்டுகள் கூறுகிறது. வரிச் சுமைகளைத் தெரிவிக்கும் கல்வெட்டுகளும் , ஆவணி ஊரில் நமக்கு ஆதாரமாக கிடைத்துள்ளன . இவ்வளவு கொடுமையான வரிகளை கட்டமுடியாமல் பல மக்கள் கோயிலின் கோபுர உச்சியில் ஏறி தற்கொலை செய்துக் கொண்ட வரலாறும் உண்டு . ஒருவர் ஆட்சியில் மக்கள் வரியை கட்டமுடியாமல் தற்கொலை செய்து கொள்ளுவதுதான் பொற்கால ஆட்சியா ?
உங்க சொந்த நிலத்தில் பாட்டியும் , தாத்தாவும் , அம்மாவும் , அப்பாவும் கழணியில் வேர்க்க விறுவிறுக்க உழைச்சிக் கொட்ட , நேரே வந்து 11 வகயைான வரியை ராசராச சோழ அரசாங்கம் புடுங்கும் . ஆனா பிராமண மானியமாகத் தரப்பட்ட இலவச அரசு நிலத்தில் , தாங்கள் உழைக்காது , உங்களை வைத்தே உழவு செய்து , காசும் பார்த்த பார்ப்பனீயர்கள் , வரி என்று சல்லி காசு கொடுக்க மாட்டார்கள் . இவர்களும் வரியை கொடுக்க மாட்டார்கள் அவர்களும் இவர்களிடம் வரியை கேட்கமாட்டார்கள். இதற்காகதான் ராசராச சோழனின் ஆட்சியை வரலாற்று ஆசிரியர்கள் பார்ப்பனீய மனுதரும ஆட்சி என்று சொல்லுகிறார்கள் .
ராசரசா சோழன் செய்த கொடுமைகள் என்னென்னா ❓
📎 தமிழக கோயில்களை முழுவதும் பிராமண மயமாய் ஆக்கியது
📎 தேவரடியாள் என்ற இறைப்பாலியல் தொழிலை கட்டாய நிறுவனமாக்கி வரிவு செய்தது
📎 தமிழ் மொழியைச் சிதைத்து அரசு ஆவணங்களைக் கிரந்த மயமாய் ஆக்கிக் குவித்தது
📎 சதுர்வேதி மங்கலம் / தேவதானம்/ அக்ரஹார இலவசங்கள் ! பொதுமக்கள் தலையில் வரி ஏற்றம்
📎 வரி கொடுக்காத ஏழை உழவர்களை "சிவத் துரோகி" என்ற சூழ முத்திரை குத்தி அடிமை ஆக்குதல்
📎 பறைச் சேரி / பறைச் சுடுகாடுகள் உருவாக்கம் செய்தது .
சோழ நாட்டின் வயல்களில் பெரும்பகுதி பெரிய கோவிலுடன் இணைக்கப்பட்டு இருந்தது . மக்களிடம் இருந்து விளைச்சலில் 6இல் 1 பங்கு கோயிலுக்கு வரியாக வசூலிக்கப்பட்டன . கோயில் பண்டாரத்தில் இருந்து கடன் கொடுக்கப்பட்டு 12% வட்டி [கந்து மீட்டர் வட்டி] வசூலிப்பட்டது. வரியும் கட்டி , வட்டியும் கட்டி நொடித்துப்போன மக்கள் வெற்றுக்குடிகள் எனும் கோயில் அடிமைகளாக ஆக்கப்பட்டன. பார்ப்பனர்களும் கடன் வழங்கப்படும் ஆனா அவர்களிடம் வட்டி வசூலிக்கப்பட மாட்டார்கள் .
பாரந்தகச் சோழனின் மகளான அனுபமாவை , கொடும்பாளூர் முத்தரையார் மணந்தார் . அதே கொடும்பாளூர்க் குடும்பத்துப் பெண் பூதி ஆதிச்ச பிடாரியை பராந்தகனின் மகன் அரிகுலகேசரி மணந்தான். ஒரு கட்டத்தில் சோழ குலமே தெலுங்கு ஆனது.
- ஶ்ரீதர் முகநூல் பக்கம், 15.6.20

1 கருத்து:

  1. Can online betting sites pay out the winnings? - Work
    How do you kadangpintar make money online? Online sports betting sites have to be good This type of gambling is done as a หาเงินออนไลน์ result of febcasino

    பதிலளிநீக்கு

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...