செவ்வாய், 21 செப்டம்பர், 2021

இளையான்குடி அருகே 3,200 ஆண்டுகளுக்கு முந்தைய தாழி, கீறல் குறியீடுகள் கண்டெடுப்பு

 

இளையான்குடிசெப். 21- சிவகங்கை மாவட்டம்இளையான் குடி அருகே முனைவென்றியில் 3,200 ஆண்டுகளுக்கு முந்தைய மூடியு டன் கூடிய முதுமக்கள் தாழி கள்கீறல் குறியீடுகள் கண்டெடுக்கப் பட்டனஇப்பகுதியை கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல் லூரி தமிழ் உதவிப் பேராசிரியரும்தொல்லியல்ஆர்வலருமான முனைவர் .ராஜேந்திரன் கள ஆய்வு செய்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

முனைவென்றி என்பது கொடு மணலுக்கு இணையான ஊர்இங்குள்ள வயல்வெளிகொழஞ்சித் திடல்ஆவடியாத்தாள் கண் மாய் பகுதிகளில் 100 ஏக்கரில் பெருங்கற்கால தொல்சான்றுகள் பரவிக் கிடக்கின்றன.

இங்கு மூடியுடன் கூடிய முது மக்கள் தாழிகள்கருப்புசிவப்பு நிறப் பானை ஓடுகள்கீறல் குறி யீடுகள்செங்கல் வட்டு சில்கள்,

சிறிய கலயங்கள்கற் கருவிகள்மனித எலும்புகள் காணப்படுகின் றனஇந்த தொல்பொருட்களை ஆய்வு செய்ததில்அவை 3,200 ஆண்டுகளுக்கு முந்தையதாக உள்ளதுஆதிச்சநல்லூர்அழகன் குளம்கொடுமணல்பொருந்தல்கீழடிசிவகளை அகழாய்வுகளில் கிடைத்த தொல்பொருட்கள் பல இங்கும் காணப்படுகின்றன.

இப்பகுதியை தொல்லியல்துறையினர் முழுமையாக ஆய்வுசெய்தால் ஏராளமான தொல்பொருட்கள் கிடைக்கும்இதன் மூலம் தமிழ னின் பெருமையை உலகறியச் செய் யலாம்இவ்வாறு அவர் கூறினார்.

விருதுநகர் மாவட்டம்திருச் சுழி அருகே உள்ள புரசலூரில் பள்ளி சுற்றுச்சுவர் கட்ட பள்ளம் தோண்டியபோது சுமார் 400 ஆண்டுகள் பழைமையான சதிக் கல் கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து அவ்வூரைச் சேர்ந்த வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் செ.ரமேஷ்ராமநாத புரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் வே.ராஜகுருவுக்குத் தக வல் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழ்நாடு மாவட்டங்கள் பிரிந்த வரலாறு – நிர்வாகமும் வளர்ச்சியும்!

  படிக்க – பாதுகாக்க!தமிழ்நாடு மாவட்டங்கள் பிரிந்த வரலாறு – நிர்வாகமும் வளர்ச்சியும்! விடுதலை நாளேடு Published February 15, 2025 தமிழ்நாட்டி...