காலச்சுவடு

வெள்ளி, 1 ஜூலை, 2022

நாட்றாம்பள்ளி அருகே கி.பி.12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் கண்டெடுப்பு



  June 12, 2022 • Viduthalai

திருப்பத்தூர், ஜூன் 12 நாட்றாம் பள்ளி அருகே கி.பி.12ஆம் நூற்றாண் டைச் சேர்ந்த கல்வெட்டுகள் கண் டெடுக்கப்பட்டுள்ளன.

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசி ரியர் முனைவர். க.மோகன்காந்தி தலைமையில், காணிநிலம் மு.முனிசாமி மற்றும் ஆய்வுக் குழுவினர் திருப்பத்தூர் மாவட்டத்தில் பல் வேறு இடங்களில் கள ஆய்வு நடத்தி பல்வேறு வரலாற்று தடயங்களை ஆவணப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், நாட்றாம்பள்ளி அருகே நடத்திய கள ஆய்வில் கி.பி.12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றை ஆய்வுக்குழுவினர் கண் டெடுத்துள்ளனர்.

இது குறித்து பேராசிரியர் முனைவர். க.மோகன்காந்தி கூறிய தாவது, ''திருப்பத்தூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி வட்டம், பங்களா மேடுப் பகுதியைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் கமலநாதன் அளித்த தகவலின் பேரில், எங்கள் ஆய்வுக் குழுவினர் அங்கு சென்று கள ஆய்வு நடத்தினோம். அப்போது, அங்கு 4.5 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வெள்ளை நிறப்பலகைக் கல்லில் கல்வெட்டு ஒன்று வாசகத்துடன் இருப்பதை கண்டோம்.

கி.பி.12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த கல்வெட்டில், 7 வரி களில் எழுதப்பட்டுள்ளன. ஆற்றின் வழியாக ஏரிக்கு செல்லும் கால் வாயை சீர்ப்படுத்திய செய்தியை இக்கல்வெட்டு நமக்கு எடுத்துரைக் கிறது. அத்தியூர் என இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றைக்கு இதே பெயரில் புதுப்பேட்டைக்கு அருகாமையில் சிற்றூர் ஒன்று உள்ளது. இந்த ஆற்றுக் கால்வாய்க்கு சித்திரமேழி என பொருள். சித்திர மேழி என்றால் அலங்கரிக்கப்பட்ட ஏர்க்கலப்பை என பொருள்.

சித்திரமேழி பெரியநாட்டார் சபை என்ற குழுவினர் அரியலூர் பகுதியை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் வேளாண்மை பொருட்களை வாங்கி தமிழ்நாடு முழுவதும் வணிகம் செய்துள்ளனர்.

விவசாயத்தைப் பெருக்கும் வித மாக பங்க ளாமேட்டிற்கு அருகே ஓடும் அக்ரகாரத்து ஆற்றுக் கால் வாய் சீரமைக்கப்பட்டிருக் கிறது. இந்தக் கால்வாய் வழியாக செல்லும் தண்ணீர் கரப்ப ஏரிக்கு சென்றதாக இக்கல்வெட் டில் குறிப்பிடப் பட்டுள்ளது. சித்திரமேழி என்ற கல்வெட்டு வாசகத்துக்கு வலு சேர்க்கும் விதமாக அழகிய வடிவில் ஏர்க்கலப்பை ஒன்று சித்திரிக்கப்பட் டுள்ளது.

அதன் அருகிலேயே, குத்துவிளக்கு ஒன்றும் சித்திரிக்கப்பட்டுள்ளது. நாட்றாம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வரும் நீரோடைகளை சிறு ஆற்றுக் கால்வாயாக மாற்றி அந்த வழித் தடத்தை செம்மைப்படுத்தி, கால் வாய் வழியாக ஓடி வரும் தண்ணீரை ஏரியில் சேமித்து, அந்த தண்ணீரை வேளாண்மைக்கு பயன்படுத்தி யுள்ளனர்.

சோழர் காலத்தை சேர்ந்த இக்கல்வெட்டின் மூலம் பண்டைத் தமிழ் மக்களின் நீர் மேலாண் மைப்பற்றி தெரிந்துகொள்ள சிறந்த சான்றாக இக்கல்வெட்டு அமைந் துள்ளது. கால்வாய் வெட்டித் தருதல் ஒரு அறப்பணியாக பார்க்கப்பட் டுள்ளது என்பது இக்கல்வெட்டு மூலம் நமக்கு உணர்த்தப்படுகிறது.

மேலும், அதேபகுதியில் கி.பி.19 நூற்றாண்டைச் சேர்ந்த மற்றொரு கல்வெட்டும் கண்டெடுத்தோம். அக்கல்வெட்டானது 'பூன குடுத் தான்' என்ற வாசகம் தொடங்குகிறது. பங்களாமேட்டின் வடக்குப்பக்கம் பார்த்தீபன் என்பவரின் நிலத்தின் அருகே இக்கல்வெட்டு நட்டு வைக்கப்பட்டுள்ளது. 

சரியான மழை இல்லாத போது புதுப்பேட்டைச் சுற்றியுள்ள கிராம மக்கள் இக்கல் வெட்டிற்கு ஆடு வெட்டி பலி கொடுத்து பொங்கல் படைத்து வழிபாடு நடத்தி வரு கின்றனர். 

இந்தபகுதி மக்கள் இந்த கல்லை வணங்கினால் மழைப்பொழியும் என நம்பிக்கை கொண்டு இந்த செயலை செய்து வருவது 

தெரிகிறது.

ஆகவே, இது போன்ற வரலாற்று சிறப்பு மிக்க கல்வெட்டுகளை மாவட்ட தொல்லியல் துறையினர் ஆவணப்படுத்தி அதை பாதுகாக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை'' என்றார்.

நேரம் ஜூலை 01, 2022
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கல்வெட்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

தமிழ்நாடு மாவட்டங்கள் பிரிந்த வரலாறு – நிர்வாகமும் வளர்ச்சியும்!

  படிக்க – பாதுகாக்க!தமிழ்நாடு மாவட்டங்கள் பிரிந்த வரலாறு – நிர்வாகமும் வளர்ச்சியும்! விடுதலை நாளேடு Published February 15, 2025 தமிழ்நாட்டி...

  • பார்ப்பனர்கள் மட்டுமே நீராட படித்துறையாம்! கல்வெட்டுக் கண்டுபிடிப்பு!
      Published October 21, 2024 விடுதலை நாளேடு நெல்லை, அக். 21- தென்காசி மாவட்டம் அனுமன் நதியில், 114 ஆண்டுகள் பழைமையான படித்துறைக் கல்வெட்டு க...
  • தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வில் மயிலாடும்பாறை பகுதியில் பழங்கால இரும்பு வாள், மண் பானைகள் கண்டுபிடிப்பு
      July 20, 2021  • Viduthalai கிருஷ்ணகிரி , ஜூலை  20-  மயிலாடும்   பாறை   பகுதியில்   தொல்லியல்   துறை   சார்பில்   மேற்கொள்ளப்பட்டு   வரும்...
  • மாவலி, நரகாசுரன் போன்றோர் நம் இன மண்ணுரிமைப் போராளிகள்!
    புராணங்கள் கற்பனை என்பதில் எந்த மறுப்பும் இல்லை. ஆனால், அவற்றுள் நுழைத்துள்ள சில உள்ளார்ந்த கருத்துகள் அன்றைய நிகழ்வுகளை அடிப்படையாகக் க...
Powered By Blogger

Translate

இந்த வலைப்பதிவில் தேடு

  • முகப்பு

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

பின்பற்றுபவர்கள்

வலைப்பதிவு காப்பகம்

  • மார்ச் 2025 (1)
  • அக்டோபர் 2024 (2)
  • பிப்ரவரி 2024 (1)
  • மே 2023 (2)
  • மார்ச் 2023 (2)
  • பிப்ரவரி 2023 (3)
  • ஜனவரி 2023 (3)
  • ஆகஸ்ட் 2022 (2)
  • ஜூலை 2022 (1)
  • பிப்ரவரி 2022 (1)
  • ஜனவரி 2022 (2)
  • அக்டோபர் 2021 (1)
  • செப்டம்பர் 2021 (2)
  • ஆகஸ்ட் 2021 (8)
  • ஜூலை 2021 (4)
  • மே 2021 (2)
  • ஏப்ரல் 2021 (1)
  • ஜனவரி 2021 (1)
  • டிசம்பர் 2020 (1)
  • ஜூன் 2020 (1)
  • மார்ச் 2020 (1)
  • பிப்ரவரி 2020 (3)
  • டிசம்பர் 2019 (2)
  • நவம்பர் 2019 (3)
  • அக்டோபர் 2019 (6)
  • செப்டம்பர் 2019 (13)
  • ஆகஸ்ட் 2019 (3)
  • ஜூலை 2019 (2)
  • ஜூன் 2019 (5)
  • மே 2019 (5)
  • ஏப்ரல் 2019 (6)
  • பிப்ரவரி 2019 (1)
  • ஜனவரி 2019 (1)
  • டிசம்பர் 2018 (3)
  • நவம்பர் 2018 (4)
  • அக்டோபர் 2018 (4)
  • செப்டம்பர் 2018 (2)
  • ஆகஸ்ட் 2018 (2)
  • ஜூலை 2018 (5)
  • ஜூன் 2018 (7)
  • மே 2018 (3)
  • மார்ச் 2018 (8)
  • பிப்ரவரி 2018 (9)
  • ஜனவரி 2018 (4)
  • டிசம்பர் 2017 (18)
  • நவம்பர் 2017 (4)
  • அக்டோபர் 2017 (5)

லேபிள்கள்

  • அகழ்வாய்வு
  • அகழாய்வு
  • அம்பேத்கர்
  • அய்யனார் சிலை
  • அய்ராவதம் மகாதேவன்
  • ஆணைகள்
  • ஆதிச்சநல்லூர்
  • ஆந்திரா
  • ஆய்வு
  • ஆஷ் துரை
  • இந்தியா
  • இராசராசன்
  • இராஜராஜ சோழன்
  • இரும்பு
  • இளையான்குடி
  • உறைகிணறு
  • எழுத்தாணிகள்
  • ஏரி
  • கண்டுபிடிப்பு
  • கல் கருவி
  • கல் செக்கு
  • கல் திட்டை
  • கல்செக்கு
  • கல்யாண ரத்து
  • கல்வி
  • கல்வி உரிமை
  • கல்வெட்டு
  • கலகம்
  • கற்பதுக்கை
  • கற்றூண்
  • காசு
  • காண்டாமிருகம்
  • கால்வாய்
  • கிணறு
  • கிருஷ்ணகிரி
  • கீழடி
  • குகை
  • குத்துக்கல்
  • குமிழி மடைத் தூண்
  • கேரளா
  • கொந்தகை
  • கொற்கை
  • கோட்சே
  • கோயில் அனுமதி
  • கோயில் நுழைவு
  • சங்க கால நகரம்
  • சமணம்
  • சாத்தூர்
  • சாதனை
  • சிங்கம்புணரி
  • சிலை
  • சிவகங்கை
  • சிவகளை
  • சிவாஜி
  • சுவர்
  • செங்கல்பட்டு
  • செப்பேடு
  • செய்யாறு
  • சென்னிமலை
  • சோழர்
  • சோழன்
  • தடயம்
  • தடுப்பணை
  • தமிழ் எழுத்து
  • தமிழ்நாடு மாவட்டங்கள்
  • தானம்
  • திப்புசுல்தான்
  • திராவிடர் இயக்கம்
  • திருமணம்
  • திலகர்
  • தீவிரவாதிகள்
  • துலாபாரம்
  • தென்காசி
  • நடுக்கல்
  • நடுகல்
  • நம்பூதிரி
  • நாணயம்
  • நியாண்டர்தல்
  • நினைவகம்
  • நினைவுச் சின்னம்
  • நீதிக்கட்சி
  • நீராட படித்துறை
  • நெல்
  • படுக்கை
  • பரோடா
  • பல்லவர் காலம்
  • பல்லவர்கால சிலை
  • பழமை
  • பழனி
  • பழைமை
  • பாண்டியர் காலம்
  • பார்ப்பன ஆதிக்கம்
  • பார்ப்பனத்தி
  • பார்ப்பனர்
  • பார்ப்பனர்கள் மட்டும்
  • பார்ப்பனர்களுக்கு
  • பாறை ஓவியம்
  • பாறை கீரல்
  • பானை
  • புத்தம்
  • புதை படிமம்
  • புதைவிடம்
  • புரட்டு
  • பூம்புகார்
  • பெண்கள் சட்டய
  • பொருட்கள்
  • பொற்பனைக் கோட்டை
  • மகாபாரதம்
  • மகாவீரர்
  • மண் பானை
  • மறைவு
  • மன்னன்
  • மானாமதுரை
  • முதுமக்கள்
  • முதுமக்கள் தாழி
  • மூடத்தனம்
  • மேலாடை
  • ராமநாதபுரம்
  • வரலாறு
  • வாணியர்
  • வாள்
  • விருது
  • விலங்கு மனிதன்
  • வைரமுத்து
நீர்வரி தீம். Blogger இயக்குவது.