ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2022

2,500 ஆண்டுகள் பழைமையான முதுமக்கள் தாழி, மண்குவளை கண்டெடுப்பு


கமுதி, ஆக. 3-- ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே 2,500 ஆண்டுகள் பழைமை யான முதுமக்கள் தாழி, மண்குவளை கண்டெடுக் கப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம் மாவட் டம் கமுதியை அடுத் துள்ள செய்யாமங்கலம் கிராமத்தில் சில மாதங் களுக்கு முன்பு கண்மாய் வரத்து கால்வாய் சீர மைப்பு பணி நடைபெற்றது. 

அப்போது அங்கு ஒரு பகுதியில் 10 முதல் 20 வரையிலான முதுமக்கள் தாழிகள் பூமிக்கு அடியில் இருப்பது தெரிய வந்தது. இந்தநிலையில் இதே கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் முருகானந்தம் என்பவர் சிதைந்து கிடந்த பொதுமக்கள் தாழி மற்றும் அருகில் புதைந்து கிடந்த முது மக்கள் தாழி களை தோண்டி பார்த் துள்ளார். அதில் வித்தி யாசமான நிறத்தில் மண், அதனுள் சிறிய வகை கருப்பு,சிவப்பு நிறத்தில் மண்குவளைகள், எலும் புக்கூடுகள், பட்டையான இரும்பு கம்பிகள் ஆகி யவை இருந்தது தெரிய வந்தது. அதன் அருகே கீழடியில் கிடைத்ததை போன்று 2,500 ஆண்டு கள் பழைமையான 3 அடுக்கு உறைகிணறு புதைந்து இருப்பது கண் டறியப்பட்டது. 

இதுகுறித்து முருகானந்தம் வருவாய்த் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த அதிகாரி யும் பார்வையிட வர வில்லை என புகார் தெரிவித்தார். 

இதுதொடர்பாக தொல்லியல் அலுவலர் களுக்கு தகவல் தெரிவித்து விசாரித்தபோது வைகை ஆற்றின் கிளை ஆறுகளான கிருதுமால் நதி குண்டாறு படுக்கை யில் பண்டைய தமிழர்கள் வாழ்ந்ததாக அடையா ளங்கள் கிடைத்துள்ளன. முதுமக்கள்தாழி, மண் குவளை, உறைகிணறு ஆகிய 2,500 முதல் 3000 ஆண்டுகள் பழைமையா னது என தெரிவித்து உள்ளனர். எனவே செய் யாமங்கலம் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் அகழாய்வு செய்தால் தமிழர்களின் வாழ்வியல் சிறப்புகள் தெரியவரும். தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...