சனி, 15 செப்டம்பர், 2018

கொங்கு சேர மன்னர் கால அரிய நாணயம் கண்டறிதல்



திண்டுக்கல், செப்.15 திண்டுக்கல் மாவட் டம், பழனியில் கொங்கு சேர மன்னர் காலத்தைய அரிய செம்பு நாணயம் கிடைத்துள்ளது. பழனியைச் சேர்ந்த பழங்கால நாணய சேகரிப்பாளர் சுகுமார் போஸ். இவர், பல்வேறு இடங்களுக்குச் சென்று பழங்கால நாணயங்களை சேகரித்து வருகிறார். இந்த நிலையில், இவர் சேகரித்த நாணயங்களில் கொங்கு சேர மன்னர்கள் காலத்தைய செம்பு நாணயம் இருந்ததை, பழனி தொல்பொருள் ஆய் வாளர் நாராயணமூர்த்தி கண்டறிந்தார். இது குறித்து நாராயணமூர்த்தி கூறி யதாவது: செம்பு உலோகத்தால் செய் யப்பட்ட இந்த நாணயம் ஒழுங்கற்ற வட்ட வடிவத்தில் 3.200 கிராம் எடையுடனும், 1 செ.மீ. குறுக்குவட்ட அளவிலும் உள்ளது. ஒருபுறம் கொங்கு சேர அரசின் முத்திரை பொறிக்கப் பட்டுள்ளது. இடது கோடியில் வில் லும், அடுத்து யானையும், அதற்கடுத்து பனை மரமும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்றுமே பண்டைய சேர நாட் டின் அரச முத்திரைகளாகும். நாணயத்தின் மேற்புறம் மங்கள விளக்கும், ஓரங்களில் புள்ளிகளும் பொறிக்கப்பட்டுள்ளன. நாணயத்தின் மற்றொரு புறம் பலிபீடத்தின் குறுக்கே வைக்கப்பட்டது போன்று இரு வாள் கள் உள்ளன. இடது மற்றும் வலது ஓரங்களில் மங்கள விளக்குகள் உள் ளன. ஓரங்களில் மொத்தம் ஒன்பது புள்ளிகள் உள்ளன.

சேர நாட்டையும் (தற்போதைய கேரளம்), தமிழகத்தின் கொங்கு பகு திகளையும் ஆண்டு வந்த மன்னர்கள், கொங்கு சேரர்கள் என அழைக்கப்பட் டனர். சங்க கால சேரர்கள் வழியிலும், தமிழகத்தின் சோழ, பாண்டிய, மன்னர் களின் ரத்தக் கலப்புகளின் வழியிலும் வந்த கொங்குச் சேர மன்னர்களின் நாணயங்கள் அரிதாகவே கிடைக் கின்றன. அந்த வகையில், இந்த நாணயமும் அரியவகையாகும். பொதுவாக, கொங் குச் சேர மன்னர்கள் நாணயங்களில் யானை உருவம் அதிகமாக இருக்காது. கொங்கு சேர மன்னர்கள் வெளியிட்ட இந்த நாணயங்களில் யானை உருவம் பொறிக்கப்பட்டுள்ளதால், இது அரிய வகை நாணயமாகும். இந்த நாணயம் எந்த மன்னர் ஆட்சியில் வெளியிடப் பட்டது என்பது குறித்து ஆய்வு மேற் கொள்ளப்பட்டுள்ளது.

கி.பி.14 ஆம் நூற்றாண்டில் கொடுங் களூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவர் ரவிவர்ம குலசேகரப் பெரு மாள் ஆவார். இவர் காலத்தில் இந்த நாணயம் வெளியிடப்பட்டிருக்கலாம் என்றாலும், உறுதிப்படுத்த ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்தார்
- விடுதலை நாளேடு, 15.9.18

செவ்வாய், 4 செப்டம்பர், 2018

11-ஆம் நூற்றாண்டு செக்குக் கல்வெட்டு கண்டெடுப்பு

திருவண்ணாமலை, செப். 4- திருவண்ணாமலையை அடுத்த செல்லங்குப்பம் கிரா மத்தில் 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செக்குக் கல்வெட்டை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் கண்டெடுத்தது.
திருவண்ணாமலையை அடுத்த செல்லங்குப்பம் கிரா மம், பெரிய ஏரிக்கரையில் கல்செக்கு ஒன்றில் கல்வெட்டு இருப்பதாக திருவண்ணா மலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆய்வு நடுவத்தின் தலைவர் த.ம.பிரகாஷ், செயலர் ச.பால முருகன், இணைச் செயலர் பிரேம்குமார், மதன்மோகன், சேது, சுதாகர், சிறீதர் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை அந்த இடத் தில் இருந்த செக்குக் கல் வெட்டை ஆய்வு செய்தனர்.
ஆய்வில், அந்தச் செக்குக் கல்வெட்டு 11-ஆம் நூற்றாண் டைச் சேர்ந்தது என்பது தெரிய வந்தது. மேலும், கூரியூர் கிரா மத்தைச் சேர்ந்த பெருவன் மகன் சேந்தன் என்பவர் இந் தச் செக்கை செய்து கொடுத் ததும் தெரிய வந்தது.
- விடுதலை நாளேடு, 4.9.18

திங்கள், 20 ஆகஸ்ட், 2018

திருப்பத்தூர் அருகே சித்திரங்கள் நிரம்பிய 2 நடுகற்கள் கண்டெடுப்பு

திருப்பத்தூர், ஆக.18 திருப்பத்தூர் அருகே நத்தம் கிராமத்தில் சித்திரங்கள் நிரம்பிய 2 நடுகற்கள் கண் டெடுக்கப்பட்டுள்ளன.


திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரி யர்கள் க.மோகன் காந்தி, வீரராகவன், காணிநிலம் மு.முனிசாமி மற்றும் சமூக ஆர்வலர் ஜானகிராமன் ஆகியோர் திருப்பத்தூ ரை அடுத்த நத்தம் கிராமத்தில் மேற்கொண்ட கள ஆய்வின்போது, பழைமையான 2 நடுகற்களைக் கண்டறிந்துள்ளனர்.


இதுகுறித்து பேராசிரியர் க.மோகன்காந்தி கூறியதாவது:


திருப்பத்தூரிலிருந்து தருமபுரி செல்லும் வழியில் 15-ஆவது கி.மீ. தொலைவில் உள்ள நத்தம் கிராமத்தில் ஒய்சாளர் காலத்தைச் சேர்ந்த கி.பி 13-ஆம் நூற்றாண்டில் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு எடுக்கப்பட்ட 2 நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த நடுகற்கள் இரண்டும் வேப்ப மரம் சாய்ந்த காரணத்தால் உடைந்த நிலையில் நிலத்தில் படுக்கவைக்கப்பட்டுள்ளன. 2 நடுகற்களும் 6 அடி உயரத்தில் 5 அடி அகலத்துடன் உள்ளன. இந்த 2 நடுகற்களிலும் வீரமரணம் அடைந்த வீரனோடு அழகான பல சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.


முதல் நடுகல் 6 அடி வட்ட வடிவ கல்லில் வலது பக்கக் கொண்டையுடன் வலது கையை மார்பில் வைத்த நிலையிலும், இடது கை உடைந்த நிலையிலும் காட்சித் தருகிறது. இடையில் குறுவாள் உள்ளது. வீரனின் இடது கால் செதுக்கப்பட்டுள்ள கல் உடைந்த நிலையில் காணப்படுகிறது.


நடுகல்லில் மேற்பகுதியில் 3 பெண்கள் விளையாடும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. கல்லின் வலது பக்க ஓரத்தில் 2 பணிப் பெண்கள் பல்லக்கைத் தூக்கிச் செல்கின்றனர். அதற்கு கீழே குதிரை உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.


அதற்கும் கீழே பல்லக்கில் அரசி அமர்ந்துள்ளார். அரசியை வணங்கிய நிலையில் பணிப்பெண் ஒருவர் நிற்கிறார். அதற்கும் கீழாக மத்தளத்தை ஒரு பெண் கொட்ட, நாகசுரத்தை ஒரு பெண் ஊதும் காட்சி இடம்பெற்றுள்ளது. இக்காட்சி ஒய்சாளர் காலத்தில் இசைக் கலை மேம்பட்டிருந்ததையும், தமிழக இசைக் கலைஞர்கள் மதிப்புடன் போற்றப்பட்ட செய்தியையும் எடுத்துக்காட்டுகின்றது.


மேலும், வலது கைப்பக்கத்தில் ஒரு மனித உருவமும், வலது கால்பக்கம் 3 மனித சிறு உருவங்களும் உள்ளன.


2-ஆவது நடுகல் 6 அடி உயரமும், 5 அடி அகலமும் உள்ளது. இக்கல்லில் வீரன் வலது பக்கம் கொண்டையிட்டு, இடது கையில் வில்லுடன் காட்சி தருகிறான். இடையில் குறுவாள் உள்ளது. அணிந்திருக்கும் ஆடை வடிவமைப்பு அழகாக சித்தரிக்கப் பட்டுள்ளது. வலது கால் அருகில் பெண் ஒருவர் அமர்ந்த நிலையில் தவக்கோலத்தில் உள்ளார். அவரை ஒருவர் வணங்கும் நிலையில் நின்று கொண்டிருக்கிறார். அதற்கும் சற்று மேலாக குதிரை உருவம் உள்ளது. குதிரைக்கு அருகே மனித உருவம் ஒன்று உள்ளது.


இவ்வாறாக இந்த இரு நடுகற்களும் கி.பி. 13ஆம் நூற்றாண்டில் போரின் போது, குதிரை, இசைக் கலைஞர்கள் வீரர்களோடு இடம்பெற்றிருக்கும் காட்சி பண்டைத் தமிழரின் சிறப்புகளை எடுத்துரைக்கின்றன. இந்த நடுகற்களை இவ்வூர் மக்கள் வேடி யப்பன் என்று அழைக்கின்றனர் என்றார் அவர்.


- விடுதலை நாளேடு, 18.8.18

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

கீழடியில் களிமண் அச்சுகள் கண்டெடுப்பு

திருப்புவனம், ஆக.17 சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தை புதூரில் தமிழக தொல்லியல் துறை சார்பில் நடத்தப்படும் அகழாய்வில் களிமண் அச்சுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சோணை என்பவரின் நிலத்தில் நடைபெறும் அகழாய்வில் களிமண்ணால் ஆன அச்சுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆண், பெண் அச்சுக்கள், முகம் மட்டும் கொண்ட அச்சுக்கள் கண்டறியப் பட்டுள்ளன. இதில் ஆண், பெண் அச்சுக்களில் வேலைப்பாடுகள் எதுவும் இல்லாமல் சாதாரண அச்சுகளாக காணப்படுகின்றன.

ஆனால் முகம் மட்டும் கண்டறியப்பட்டுள்ள அச்சில் நுணுக்க மான வேலைப்பாடுகள் உள்ளன, அணிகலன்கள், மீசை, முகத்தில் உள்ள வரிகள், கண் இமை, காதணி உள்ளிட்ட அனைத்தும் நுணுக்கமான அளவில் உள்ளன.

தொல்லியல் அதிகாரிகள் கூறுகையில், இந்த அச்சுகளை வைத்து சிலைகள் செய்ய பயன்படுத்தி இருக்கலாம், ஆண், பெண் அச்சுக்கள் அரை அடி முதல் ஒரு அடி உயரம் வரை உள்ளன. முகம் அச்சு மட்டும் சற்று பெரிய அளவில் உள்ளது.

சிலைகள் உள்ளிட்டவைகள் செய்வதற்கு முன் களிமண் அச்சுக்களை மாதிரிகளாக பயன்படுத்தி இருக்கலாம், ஆய்விற்கு பின்தான் இவற்றின் உண்மையான பயன்பாடு தெரியவரும் என்றனர்.

 - விடுதலை நாளேடு 17. 8 .18

செவ்வாய், 31 ஜூலை, 2018

தமிழ் நாட்டில் நினைவகங்கள்

எனக்கு ஒரு வாட்ஸ் அப் செய்தி வந்தது. ''மானங்கெட்ட தமிழனே! என்று அது தொடங்குகிறது.

தமிழ்நாட்டில் திரும்பிய பக்கம் எல்லாம் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். பெயராக இருக்கிறது.

அட மானங்கெட்ட தமிழனே ராஜராஜசோழனை, ராஜேந்திரசோழனை, பாண்டிய மன்னனை எங்கேடா காணும்? வெள்ளையர்களை எதிர்த்தவர்களுக்கு சிலை எங்கே? என்று நீட்டி முழக்குகிறது அந்த வாட்ஸ் அப்.

ஐயோ பாவம்! மானங்கெட்ட தமிழனே என்று கேட்கும் அந்த மானமுள்ள தமிழனுக்கு தமிழ்நாடு தெரியுமா என்று தெரியவில்லை? அல்லது கைபர் வாசியா தெரியவில்லை?

இந்த நாட்டில் தான்...

1. வள்ளுவர் கோட்டம்
2.வள்ளுவருக்கு 133 அடி சிலை
3. காமராஜர் நினைவகம்
4. பக்தவத்சலம் நினைவகம்
5 காந்தி மண்டபம்
6. இராஜாஜி நினைவாலயம்
7. பாரதியார் நினைவு இல்லம் சென்னை
8. காமராஜர் நினைவு இல்லம்
9. மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபம்
10.சுதந்திரப் போராட்ட தியாகிகள் மணிமண்டபம்
11.இரட்டமலை சீனிவாசன் நினைவகம்
12. காயிதேமில்லத் மணிமண்டபம்
13. திருப்பூர் குமரன் நினைவகம்
14. உடுமலை நாராயணகவி மணிமண்டபம்
15. தீரன் சின்னமலை மணிமண்டபம்
16. இராஜாஜி பிறந்த இல்ல நினைவகம்
17. வள்ளல் அதியமான் கோட்டம்
18. நாமக்கல் கவிஞர் நினைவு இல்லம்
19. நாமக்கல் கவிஞர் மாளிகை
20. தாளமுத்து நடராசன் மாளிகை
21. வ.வே.சு.அய்யர் நினைவு இல்லம்
22. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மணிமண்டபம்
23. தில்லையாடி வள்ளியம்மை நினைவகம்
24. தமிழ்த்தாத்தா உ.வே.சா நினைவு இல்லம்
25. கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம்
26. குன்றக்குடி அடிகளார் மணிமண்டபம்
27. மருதுபாண்டியர் நினைவு மண்டபம்
28. தியாகசீலர் கக்கன் மணிமண்டபம்
29. தியாகி விஸ்வநாததாஸ் நினைவு இல்லம்
30. பரிதிமாற் கலைஞர் நினைவு இல்லம்
31. பாவாணர் மணிமண்டபம்
32. காமராஜர் பிறந்த இல்லம்
33. காமராஜர் நூற்றாண்டு விழா மண்டபம்
34. பாரதியார் மணிமண்டபம்
35. மகாகவி பாரதியார் இல்லம் எட்டயபுரம்
36. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. இல்லம்
37. வீரன் அழகு முத்துக்கோன் மணிமண்டபம்
38. வீரன் சுந்தரலிங்கம் நினைவகம்
39. வீரன் வெள்ளையத்தேவன் நினைவகம்
40. உமறுப்புலவர் நினைவகம்
41. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. மணிமண்டபம்
42.பூலித்தேவன் நினைவு மாளிகை
43. கால்டுவெல் நினைவு இல்லம்
44. ஜீவா மணிமண்டபம்
45. காந்தி நினைவு மண்டபம்
46. காமராஜர் மணிமண்டபம்
47. செய்கு தம்பி பாவலர் நினைவு மண்டபம்
48. முத்து மண்டபம்
49. சுப்பிரமணியசிவா மணிமண்டபம்
50. தமிழிசை மூவர் மணிமண்டபம்
51. வீரர் கோபால் நாயக்கர் மணிமண்டபம்
52.ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் மணிமண்டபம்
53. தியாகி சின்னமலை நினைவுச் சின்னம்
54. வாஞ்சிநாதன் மணிமண்டபம்
55. மார்ஷல் நேசமணி மணிமண்டபம்
56. வேலுநாச்சியார் மணிமண்டபம்
57.தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபம்
58. வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம்
59.சிங்காரவேலர் மணிமண்டபம்
60. வீரன் ஒண்டி வீரன் மணிமண்டபம்
61. மனுநீதிச்சோழன் மணிமண்டபம்
63. இராஜாஜி மண்டபம்
64. கலைவாணர் அரங்கம்
65. வெள்ளையனே வெளியேறு இயக்க பொன்விழா நினைவுத்தூண்
66. சுதந்திரப் பொன்விழா நினைவுத்தூண்
67. குடியரசு பொன்விழா நினைவுத்தூண்
68. சிப்பாய் புரட்சி நினைவுத்தூண்
69. காமராஜர் நூற்றாண்டு விழா நினைவுத்தூண்
70. வீரத்தாய் குயிலி நினைவுச்சின்னம்

- இவ்வளவும் தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டு சென்னை முதல் கன்னியாகுமரி வரை கம்பீரமாகக் காட்சி தரும்போது பெரியாரும் அண்ணாவும் மட்டும் அவர்கள் கண்ணுக்கு உறுத்துகிறது.

இவை காங்கிரஸ் ஆட்சியில் கட்டப்பட்டதா திராவிட ஆட்சியில் அமைக்கப்பட்டதா என்பதை அந்த மானமுள்ளவன் கண்டுபிடித்துச் சொன்னால் தமிழர் இனமானம் பெறலாம்!
- கட்செவி மூலம் வந்தது.

திங்கள், 30 ஜூலை, 2018

திலகர் சுதந்திரப் போராட்டத்தில் சிறை செல்லவில்லை

கள்ள கையெழுத்து மோசடி ஜாதிவெறி மதத் துவேச வழக்குகளில் சிறைக்குச் சென்ற பாலகங்காதர திலகர்


ஆதாரங்களுடன் பதிவு




நாடுமுழுவதும் சங்கிகளால் திலகரின் பிறந்த நாள் (23.7.2018) விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று திலகர் முழங்கியதாக கூறும் அவர்கள்,

சுதந்திரமடைந்த இந்தியாவை ஆளும் உரிமையும், கல்வியும்,  அரசியலும் பார்ப்பனர்களுக்கே உரியது என்று சாதிவெறி பிடித்த இந்த பார்ப்பனன் கூறியதை மட்டும் வசதியாக மறைத்து விடுவார்கள்.  இன்றைக்கு நடந்த கள்ளக்காதல் கொலைகளையே தேசபக்த கொலைகளாக திரித்து கூறும் பார்ப்பனீய கும்பல்களும், பார்ப்பன ஊடகங்களும்....

ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய முஸ்லிம் மக்களை தேசவிரோதிகளாகவும், பார்ப்பனீயத்துக்கு ஆதரவாக போராடியவர்களை தேசபக்தர்களாவும் வரலாற்றையே திரித்து நமக்கு சொல்லி வருவதோடு...

சுதந்திர போராட்ட வீரர்களை காட்டிக்கொடுத்த வாஜ்பேயிக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படி பார்ப்பனீய  ஆர்.எஸ்.எஸ்., கும்பலால் மிகப் பெரும் தேசபக்தராக சித்தரிக்கப்படும் பாலகங்காதர திலகர் உண்மையில் ஒரு சித்பவன் பார்ப்பன ஜாதி வெறியர், மதவெறியர்!

பிரிட்டிசார் மராட்டிய பார்ப்பனர்களிடமிருந்து கைப்பற்றிய ஆட்சியை திரும்ப பார்ப்பனர்களிடமே ஒப்படைக்க வேண்டுமென்பதே இவரின் கோரிக்கையாக இருந்தது .

மகாத்மா ஜோதிபா பூலேவின் சத்யசோதக் சமாஜுக்கு எதிராக கலவரத்தை தூண்டுவதற்காகவே விநாயக சதுர்த்தி விழாவை ஆரம்பித்து வைத்தவர்.

காங்கிரசு மாநாட்டில் செருப்பு வீச்சைத் தொடங்கி வைத்தவர்.

1920 இல் அத்தானி பொதுக்கூட்டத்தில் பேசும்போது "பிராமணர் அல்லாத மக்கள் கல்வி கற்கவோ அல்லது அரசியலில் ஈடுபடவோ கூடாது என பொதுக்கூட்ட மேடையில் வெளிப்படையாக பேசியதால் பம்பாய், சங்கலி, புனே கூட்டங்களில் மக்களால் கல்லடிபட்டவர்.

ஜாதி மறுப்புத் திருமணம்,  குழந்தைத் திருமண தடுப்பு போன்ற சட்டங்களை கடுமையாக எதிர்த்தவர்.

தீண்டாமைக்கு எதிரான தீர்மானத்தில் கையெழுத் திட மறுத்தவர்.

இப்படிப்பட்ட திலகர் நாட்டுக்காக சிறைப்பட்டதாக பார்ப்பன கும்பல் வரலாற்றை எழுதி வைத்துள்ளது .

உண்மையில் பிறர் மீது அவதூறு சுமத்துதல், மோசடி, கள்ள கையெழுத்து,

பிளேக் நோய் பரப்பிய எலிக்கு ஆதரவான போராட்டம்,

முஸ்லிம்களுக்கு எதிரான அவதூறு பிரசாரம் போன்ற காரணங்களுக்காகத் தான் இவர் நான்கு முறை சிறை சென்றார்.

1. 1882 ஜூலை 16 இல் திலகர் முதன் முதலில் சிறைக்குச் சென்றது ஒரு அவதூறு வழக்கில்.

பம்பாய் அருகிலுள்ள கோலாப்பூர் சமஸ்தானத்தின் மன்னர் இறந்ததும் அவர் மகன் சிவாஜி VI என்ற சிறுவனை பதவியில் அமர்த்தினர் .

அவனுக்கு மூளை வளர்ச்சி குறைவு. மாதவ் பார்வே கோலாப்பூரின் பொறுப் பதிகாரியாக இருந்தார்.

முதன் முதலில் பத்திரிகைகளில் அவதூறு, துவேசம், கிசுகிசு எழுதியதே திலகர் தான்.

கோலாப்பூர் விவகாரத்திலும் திலகர் புதுசா ஒரு கதை கட்டினார்,

மன்னர் சத்ரபதி சிவாஜி  VI பைத்தியம் இல்லை என்றும்,

ஆனால் அவரை பைத்தியமாக்குவதற்கு மருந்து கொடுக்கப்படுகிறது. குறிப்பாக மாதவ் பார்வே மன்ன ருக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய முயற்சி செய்து வருவதாகவும்.....

தன் கேசரி. மராத்தா பத்திரிகைகளில் எழுதினார்.

திலகர் தன் மீது அவதூறு சுமத்தியதாக கார்வார் மாதவ் பார்வே நீதிமன்றத்துக்குப் போனார்.

இதில் திலகருக்கு 4 மாதம் சிறை தண்டனை கிடைத்தது.

சிறைக்குப் போனபின்பு ஆங்கிலப் பேராசிரியராக இருந்த வர்ட் ஸ்வர்த் மூலம் அரசுக்கு மனு அனுப்பி பார்த்தார், ஒன்னும் வேலையாகல, நாலு மாசம் களி தின்னுட்டு வந்தார்.

இந்தியாவில் முதன் முதலில் அவதூறு வழக்கில் சிறை சென்றவர் இந்த பால் கங்காதர் திலக் தான்.

2. பிளேக் நோயை பரப்பும் எலிகளுக்கு ஆதரவான போராட்டம்

1897 இல் புனே நகரை பிளேக் நோய் தாக்கியதால் ஆயிரக்கணக்கில் மக்கள் செத்தனர் .

நோய் தாக்கி இறந்தவர்களை அடக்கம் கூட செய்ய பயந்து பிணங்களை அப்படியே விட்டுவிட்டு மக்கள் வெளியேறினர்.

பாதி நகரமே காலியானது .

நோயை கட்டுப்படுத்த அரசு W.C. ராண்ட் தலைமையில் பிளேக் கமிசனை அமைத்தது .

இவர்கள் வீடு வீடாகச் சென்று பிளேக் நோய் தாக்கியவர்களுக்கு சிகிச்சை அளித்ததோடு ,வீட்டிலுள்ள சாமான்களுக்கு மருந்து போட்டு சுத்தம் செய்தனர் .

அனாதையாக கைவிடப்பட்ட பிணங்களை அப்புறப் படுத்தி எரித்ததோடு பிளேக் நோய்க்கு காரணமான எலிகளையும் கொன்றனர்.

இவர்களின் முயற்சியால் நோய் கட்டுப்படுத்தப் பட்டது.

உலகமே இவர்களின் அர்ப்பணிப்பு உணர்வை பாராட்டிய போது திலகர் தன் பார்ப்பன புத்தியை காட்டினார்.

மாமிசம் சாப்பிடும் மிலேசர்கள் அக்கரகாரத்துக்குள் நுழைந்ததோடு பிராமணர்களை தீண்டி விட்டார்கள், பிள்ளையாரின் வாகனமான எலிகளைக் கொல்லு கிறார்கள்... இது இந்து மதத்தை இழிவுபடுத்துவதாகும் என கண்டித்து ஊர்வலம் போனார்.

பிளேக் கமிசனர் W.C ராண்ட் க்கு எதிராக கேசரியில் எழுதினார்....

திலகரால் உந்தப்பட்ட பார்ப்பன சாபேகர் சகோ தரர்கள் ஜூன் 22 1897 அன்று W.C ராண்ட் மற்றும் அவரது உதவியாளர் லெப்டினென்ட் அயஸ்டரை சுட்டுக் கொன்றனர்.

இதனால் பிளேக் நோய் பரப்பிய எலிகளுக்கு ஆதரவாய் போராடிய திலகருக்கு 18 மாதம் சிறை தண்டனை கிடைத்தது .

திலகருக்கு சிறையில் சுவற்றுக்கு சுண்ணாம்பு அடிக்கிற வேலை கொடுக்கப்பட்டது .

மாக்ஸ் முல்லரின் மூலம் பிரிட்டிஸ் ராணிக்கு மனு கொடுத்து 6 மாதத்துக்கு முன்பே விடுதலையானார்.

3. 24.8.1903 பாபா மகராஜ் உயில் மோசடி வழக்கு

கோலாப்பூரில் இருந்த சர்.பாபா மகராஜ் என்ற பெரும் செல்வந்தருக்கு உடல்நிலை சரியில்லாததால் 7.8.1897 அன்று தன் திரண்ட சொத்துக்கள் தொடர்பாக ஒரு உயில் எழுதி வைத்தார்,

சொத்துக்களை நிர்வகிக்க திலகர் உட்பட அய்ந்து பேர் கொண்ட குழுவை நியமித்தார்.

உயிலின் படி கர்ப்பிணியான தன் மனைவிக்கு பிள்ளை பிறக்காமல் போனாலோ அல்லது பிறந்த பிள்ளை அற்ப ஆயுளில் இறந்தாலோ தன் வம்சம் செழிக்க, அய்ந்து பேர் கொண்ட குழுவின் ஒப்புதலோடு ஒரு பிள்ளையை தத்தெடுத்துக் கொள்ள வேண்டும். அந்த பிள்ளை மேஜர் ஆகும் வரை இந்த சொத்துக்களை இந்த அய்வரே பரிபாலித்து வரவேண்டும்  என எழுதி வைத்து இறந்தார்.

பாபா மகராஜின் மனைவிக்கு பிள்ளை பிறந்து அது இரண்டு மாதத்தில் இறந்து விட்டது!

வளர்ப்பு மகன் விசயத்தில் திலகரும், வேறு இரண்டு டிரஸ்டிகளும் சேர்ந்து தன்னை மோசடி செய்வதாகவும், துன்புறுத்துவதாகவும் பாபா மகராஜின் மனைவி ஜூலை 2.9.1901 அன்று நீதிமன்றத்தில் வழக்கு போட்டார்.

24.8.1903 அன்று இந்த வழக்கில் கள்ளக் கையெழுத்து, பொய் சாட்சி முதலிய குற்றங்கள் செய்ததற்காக திலக ருக்கு 18 மாதம் கடுங்காவல் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

4. முஸ்லிம்களுக்கு எதிராக மதத் துவேச பிரச்சாரம் செய்ததால் 6 ஆண்டு சிறை

இந்த வழக்கின் பின்னணி பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.

1911 க்கு முன்பு வரை கல்கத்தா தான் தலைநகராக இருந்தது.

மெக்காலே கல்வி திட்டம் வந்தவுடனேயே வங்க பார்ப்பனர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டதால் அவர்கள் கல்வி கற்று அரசின் உயர் பதவியில் அமர்ந்தனர்.

1858 புரட்சிக்குப் பின்பு ஆங்கிலேய அரசும் முஸ்லிம் களுக்கு எதிராக இருந்ததால் அவர்களுக்கு ஆங்கில கல்வி மறுக்கப்பட்ட காலம்.

வங்காள பார்ப்பனர்கள் தான் இந்து தேசியத்தை உருவாக்கியவர்கள். இவர்கள்

Indian mirror,
The national guardian,
Young Bengal,
Tribune, 
Hindu patriat...


போன்ற இதழ்களை நடத்தி வந்தார்கள் .

1870 இல் அரசு பணிகளில் முஸ்லிம்களையும் சேர்க்க பிரிட்டிசார் முன்வந்தபோது வங்காள பார்ப்பனர்கள் நடத்தி வந்த இந்து பேட்ரியாட்  பத்திரிகை ஆகஸ்ட், 2, 1870இல் வெளியிட்ட இதழில் ,அரசின் முடிவை எதிர்த்ததோடு,  முஸ்லிம்கள் அரசுக்கு எதிரான கலகக் காரர்கள்  என்பதையும் ஞாபகப்படுத்தியது....

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்த வங்காளத் தில் அரசு துறை பணிகளில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே முஸ்லிம்கள் இருந்தனர்.

1905இல் கர்சன் பிரபு வங்காளம், பீகார், ஒரிசா உள்ள டங்கிய வங்காளத்தை இரண்டு மாகாணங்களாக பிரித்தார்.

அதுவரை அரசு பணிகளை ஏகபோகமாக அனுப வித்து வந்த வங்காள பார்ப்பனர்கள், இந்த பிரிவினையால் தங்கள் வேலைவாய்ப்பில் பாதிப்பு ஏற்படும் என்பதால் பிரிவினையை ரத்து செய்யக் கோரி கல்கத்தா உள்ளிட்ட வங்க பகுதியில் கலவரம் செய்து வந்தனர் .

பிளேக் எலிக்கு ஆதரவாக போராடி சிறை சென்ற திலகர் வெளிவந்தவுடன் வங்காளப் பார்ப்பனர்களுக்கு ஆதரவாக எழுதி வந்தார்.

இந்த பிரச்சினையில் அரசு முஸ்லிம் குண்டர்களை ஏவி இந்துக்களின் சொத்துக்களை சேதப்படுத்தி பெண்களை மானபங்கப் படுதுவதாக

முஸ்லிம்களுக்கு எதிராக மதத் துவேச கருத்துக்களை தொடர்ந்து தனது கேசரி பத்திரிக்கையில் எழுதி வந்த தால் இவர் மீது இரு மதங்களுக்கிடையே துவேசத்தை வளர்ப்பதாக வழக்கு தாக்கலானது.

இந்த வழக்கில் ஜூன் 24 1908 அன்று கைது செய்யப் பட்டார்,

இதில் திலகருக்கு 6 ஆண்டு தண்டனை விதிக்கப் பட்டது.

தலித் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பட்ட இப்படிப்பட்ட ஒரு ஜாதி, மத வெறியரை தேச பக்தராக சித்தரித்துள்ளனர்.

பார்ப்பன ஜாதி மத வெறியர்களை தேச பக்தர்களாக சித்தரிக்கும் பார்ப்பனப் புரட்டு வரலாற்றை மாற்றியமைப்போம். ஆதாரங்கள்:

1. http://ambedkar.org/jamanadas/TilakGandhi.htm
2. https://en.wikipedia.org/wiki/Shivaji -IV
3. https://en.wikipedia.org/wiki/Kesari (newspaper)
4. https://www.mapsofindia.com/on-this-day/july-3-1908-bal-gangadhar-tilak-is-arrested-for-sedition-by-the-british
5. https://en.wikipedia.org/wiki/Chapekar brothers
6. http://bombayhighcourt.nic.in/libweb/historical cases/cases/First Tilak Trial - 1897.html
7. http://www.newworldencyclopedia.org/entry/Bal Gangadhar Tilak
8. http://www.bombay-book.htmlplanet.com/cus tom2.html
9. https://indiankanoon.org/doc/1765978/
10.https://indiankanoon.org/doc/1765978/
11.https://en.wikipedia.org/wiki/Bal Gangadhar Tilak
12.https://indiankanoon.org/doc/265118/
13.https://books.google.co.in/books? id=905gbgzGN1EC&pg= PA117&lpg=PA117&dq=bal+ gangadhar+tilak+kolhapur+case&source=bl&ots= i0AxYblMoa&sig=OjhsQmiKiRpyzmp3q0PrE8VOw RI&hl= en&sa=X&ei= MWI1UpeBC4OErAeJz4DACg#v= onepage&q=bal%20gangadhar%20tilak%20kolhapur%20case&f=false
14. http://bombayhighcourt.nic.in/libweb/judgment/Tilakcases/BalGangadharTilak.html


15. https://indiankanoon.org/doc/1430706/


16.  நூல்: லோக மான்ய பால கங்காதர திலகர்.     ஆசிரியர்: சிறீ.எம்.எஸ்.சுப்ரமணிய அய்யர். அல்லயன்ஸ் கம்பெனி, மைலாப்பூர் - 1938 திலகர் பிறந்த நாள் (23.7.2018) முன்னிட்டு மீள்பதிவு.

முகநூலிலிருந்து: Mohamed Bashith

- விடுதலை நாளேடு 28.7.18

இரும்புப் பயன்பாட்டில் மட்டுமல்ல எல்லாவற்றிலும் தமிழர்களே முன்னோடி !- மஞ்சை வசந்தன்

  தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், அண்மையில் ஒரு முக்கியச் செய்தியை அறிவிக்கப் போவதாகக் கூறி அச்செய்தியையும் ஒரு நிகழ்வி...