சனி, 24 பிப்ரவரி, 2018

ஆங்கிலேய அரசாணையால் பறிபோன பார்ப்பனரின் சுதந்திரம்!!



• பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க உரிமை உண்டு எனவும், சத்திரியன் மட்டுமே நிலம் மற்றும் அரசராக இருக்க முடியும் எனவும்,  வைசியன் வியாபாரம் செய்ய உரிமை உண்டு எனவும், சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும் எனவும் இருந்த இந்து மனுதர்ம சட்டத்தை ஆங்கிலேய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளா மல்,  சட்டம் என்றால் அனைவரும் சம மாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை யில் 1773 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு புதிய சட்டத்தை எழுத தொடங்கியது.

• சத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்து கொள்ள உரிமை இருந்ததை,  1795-ஆம் ஆண்டு அனைவரும் சொத்தை வாங்கி கொள்வதற்கான உரிமை வழங்கப்பட்டது.

• 1804ஆம் ஆண்டு பெண் சிசு கொலை தடுப்புக்கான அரசாணை வெளியிடப்பட்டது

• 1813ஆம் ஆண்டு கொத்தடிமைகள் ஒழிப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது

• பார்ப்பான் தப்பு செய்தால் தண்டனையில்லாமல் இருந்த நிலையில், யார் குற்றம் புரிந்தவராக இருப்பினும், அவர்களும் தண்டனை பெறுவதற்கான அரசாணை 1817-ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டது..

• சூத்திரப்பெண் திருமணம் முடிந்த அன்றே,  பார்ப்பனருக்கு பணிகள் பல செய்ய 7-நாள்கள் கோவிலில் இருக்க வேண்டும். என்பதை ஆங்கிலேய அரசாங்கம் தனது அரசாணையின் மூலம் 1819 ஆம் ஆண்டு முடிவிற்கு வந்தது.
• பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க முடியும் என்ற நிலையில் இருந்த இந்து சட்டத்தை 1835 ஆண்டு லார்ட்மெக்காலேயின் சீரிய முயற்சி யின் விளைவாக, சூத்திரனும்  கல்வி கற்கலாம் என்ற அரசாணை வெளியிடப்பட்டது.

• சூத்திரனுக்கு முதலில் பிறக்கின்ற ஆண் குழந்தையை கங்கா நதியில் தள்ளி விட்டு கொல்ல வேண்டும் என்ற கங்கா தானத்தை 1835இல் ஆங்கிலேய அரசு தனது அரசாணை யின் மூலம் முடிவிற்கு வந்தது.

• 1835-ஆம் ஆண்டு சூத்திரர்களும் நாற்காலியில் உட்காரு வதற்கான அரசாணை கொண்டுவரப்பட்டது.

• 1868 ஆம் ஆண்டு  இந்து மனு தர்மச் சட்டத்தை தடை செய்ய உத்தரவு பிறப்பித்தது.

• 1865-இல் உடன்கட்டை ஏறுவதை சட்டம் போட்டு தடுத்தனர். இருப்பினும் சட்டத்திற்கு உடன்படாமல் பல இளம்பெண்கள் எரியும் நெருப்பில் தள்ளப்பட்டு கொலைசெய்யப்பட்டனர். 1997-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் எரியும் நெருப்பில் தள்ளி ஒரு பெண் கொல்லப்பட்டாள். அரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசத்தில் ஊடகவெளிச்சம் இல்லாமல் அவ்வப்போது இது போன்ற கொடூரங்கள் நிகழ்ந்துகொண்டு தான் உள்ளது.

- விடுதலை ஞாயிறு மலர், 17.2.18

திங்கள், 19 பிப்ரவரி, 2018

அரிய வகை பாறை ஓவியங்கள் : திண்டுக்கல் ‘ஓவா’ மலையில் கண்டுபிடிப்பு

 



போடி, பிப்.19 தேனிமாவட்டம் போடி சி.பி.ஏ., கல்லூரி தொல்பொருள் ஆராய்ச்சி பேராசி ரியர்கள் மூலம் திண்டுக்கல் அருகே ஓவா மலைப்பகுதியில் பழைமையான அரிய வகை பாறை ஓவியங்கள் கண்டுபிடிக் கப்பட்டுள்ளன.

கல்லூரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் மாணிக்கராஜ் கூறியதாவது: தொல்பொருள் மற்றும் விழிப்புணர்வு மய்யத் தின் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் பழமையான கல்வெட்டுகள், கற்கள், மண்ணில் புதைந்துள்ள கற்கால பொருட்களை கண்டு பிடிக்கும் பணியில் கல்லுரி முதல்வர் மனோகரன் வழிகாட்டு தலில், தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் கனகராஜ், மாண வர்கள் ராம்குமார், சவுந்திர பாண்டி, பிரகாஷ், ராஜேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் ஈடுபட்டு வருகிறோம்.இரண்டு நாட்களுக்கு முன் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா சித்தரேவு ஊரின் வடமேற்கு 5 கி.மீ.,தொலைவில் உள்ள ஓவா மலைப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

வெள்ளை நிற ஓவியங்கள் 

ஓவா மலையில் பெருமாள் பொடவு என அழைக்கப்படும் பழங்கால குகைகளில் வெள்ளை நிற பாறை ஓவியத் தொகுப்பை கண்டறிந்துள்ளோம்.இதில் ஏழுக்கும் மேற்பட்ட மனித உருவங்களும், புலி, மான் போன்ற விலங்குகளின் உருவங் களும் வெள்ளை நிறத்தில் ஓவியமாக வரையப்பட்டுள்ளன. குகை வெளிப்புறத்தில் மனித உருவங்கள் கைகளை உயர்த்தி நடனமாடும் நிலையிலும், சில மனித உருவங்கள் கைகளை உயர்த்தி, குச்சி போன்ற ஒன்றை கையில் பிடித்து புலி, மானை பார்த்த நிலையில் உள்ளன. இது புலி, மானை மனிதர்கள் வேட் டையாடும் நிகழ்வு போல காட்சியளிக்கிறது.

புலி தன் அருகில் உள்ள மானை பார்த்து தன் வாலை உயர்த்திய நிலையிலும், புலியின் உடல் முழுவதும் கோடுகள் வெள்ளை நிறத்திலும், மான் புலியை பார்ப்பது போல வரையப்பட்டுள்ளன.

பெரிய மனித உருவம் ஒன்று தன் கைகளை தொங்க விட்ட நிலையிலும், அருகில் கைகளை உயர்த்தி நடனமாடுவது போன்றும் காணப்படுகின்றன.

இதே பகுதியில் 1500 ஆண்டு களுக்கு முந்தைய கல்வெட்டு கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப் பட்டது. மேலும் ஆய்வு செய் வதன் மூலம் வரலாற்று தொன் மையான தடயங்கள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன, என்றார்.

- விடுதலை நாளேடு, 19.2.18

ஜவ்வாதுமலையில் 3 ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்ட புதைவிடம் கண்டெடுப்பு

திருப்பத்தூர், பிப்.19 ஜவ்வாதுமலையில் 3 ஆயிரம் ஆண்டு களுக்கு முற்பட்ட புதைவிடம் கண்டறியப்பட்டுள்ளது.
திருப்பத்தூரை அடுத்த ஜவ்வாதுமலைப் பகுதியில் புதூர் நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு உள்ளிட்ட 32 மலைக் கிராமங்கள் உள்ளன. இதில், புங்கம்பட்டு நாட்டிற்கு உள்பட்ட  “கல்லாவூர்’ என்ற கிராமத்தில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புதைவிடம் ஒன்றை திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர் க.மோகன் காந்தி, சென்னை மாநிலக் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் கே.ஆர்.லட்சுமி, காணி நிலம் மு.முனிசாமி, ஓய்வு பெற்ற ஆசிரியர் ராமன், ஜவ்வாது மலையைச் சேர்ந்த ஆய்வாளர் கோவிந்தராஜ் ஆகியோர் அடங்கிய குழு களஆய்வின் போது கண்டறிந்தனர்.

சென்னை, பிப்.19 ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு, தகுதியானவர் களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன. சென்னை மாவட்ட ஆட்சியர், அன்புச்செல்வன்

வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சென்னை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், காலியாக உள்ள, நாவிதர், சமையலர், அலுவலக உதவியாளர், பதிவுரு எழுத்தர் உள்ளிட்ட காலி பணியிடங்களுக்கு, தகுதியான வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கு, 18 வயது முதல், 35 வயது வரையுள்ள, 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு தேறிய, தவறியவர்கள் விண்ணப்பிக்கலாம். ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அடுக்குமாடி கட்டடம்  1இல், வரும்  19ஆம் தேதி முதல், 26ஆம் தேதி வரை, விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் மார்ச் 2ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விடுதலை நாளேடு ,19.2.18

திங்கள், 12 பிப்ரவரி, 2018

பார்ப்பனத்திகள் வெளியிலிருந்து வந்தவர்களா?

9.11.1930, குடிஅரசிலிருந்து...


ஜாதியென்பது பிரம்மாவினால் உண்டுபண்ணப் பட்டது என்று கூறுவது எத்துணை நேர்மையுடையது? அச்சாதி வேற்றுமையை அக்கடவுள் வேறுநாடுகள் ஒன்றிலும் உண்டாக்காமல் பாழும் இந்தியநாட்டில் மட்டுந்தானா உற்பத்தி செய்ய வேண்டும்? அவன் முகத்தில் தோன்றிய பார்ப்பனர்கள் உயர்ந்த ஜாதியா ரென்றும் அதன் கீழ்ப்பாகமாகிய புஜத்தில் தோன்றிய ஜாதியார்களாகிய சத்திரியர் அவர்களை விட சிறிது தாழ்ந்த குலத்தாரென்றும், தொடையில் தோன்றிய வைசியர் சத்திரியரைவிட சிறிது தாழ்ந்த ஜாதியார் என்றும் பாதங்களில் தோன்றிய சூத்திரர் இவர்கள் எல்லோரையும் விட கீழானவர் என்றும் கூறல் சரியா? ஒரே மரத்தில் உச்சியிலும் இடையிலுள்ள கிளை களிலும் அடியிலும் காய்கள் காய்க்கின்றன. உச்சியில் காய்க்கின்ற காய்கள் உயர்ந்த ருசியையும் அடியில் காய்த்த பழங்கள் எல்லாவற்றையும் விடத்தாழ்ந்த ருசியையுமுடையதாயிருக்கின்றதோ அவ்வாறில் லாமல் எல்லாம் ஒரே விதமான ருசியாயிருக்கிறதே அஃதே போல் எல்லாச் சாதியாரும் சமமானவர்களாகத் தானேயிருக்க வேண்டும். கடவுளே ஜாதி, ஜாதியாக மனிதர்களை உற்பத்தி செய்திருந்தால் ஆடு, மாடு, குதிரை, யானை முதலியவை வெவ்வேறு ஜாதி என்று காட்ட வெவ்வேறு உருவமுடையதாய் உற்பத்திசெய்தி ருப்பது போல் பார்ப்பானை ஒருவித வடிவமாகவும், சத்திரியனை வேறு உருவமாகவும், வைசியனை வேறு வடிவமாகவும், சூத்திரனை ஒரு வடிவமாகவும் உண்டு பண்ணியிருப்பானன்றோ? ஆடும் மாடும் புணர்ந்தால் கர்ப்பம் உண்டா வதில்லை.

அஃதே போல் வெவ்வேறு ஜாதியான பார்ப்பனப் பெண்ணும், சூத்திர ஆணும் கூடினால் கர்ப்பமுண்டா காமலிருக்க வேண்டுமே? அவ்வாறின்மையால் மனிதர்களனைவரும் ஒரே ஜாதி யென்பது விளங்க வில்லையா? முகத்தில் பிராமணன் தோன்றி னான் என்றுதானே சாத்திரங்கள் கூறுகின்றன. பிராமணத்தி எவ்வாறு வந்தாள் என்று கேள்வி கேட்க நேரிடும் என்பதை அவர்களறியாமலே இச்சாத்திரங்களை எழுத ஆரம்பித்துவிட்டனர்.

மேலும் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு பிரயாணமாய்ப்போகும் ஆண்கள் பெரும்பாலும் பெண்களைக் கூட்டிக் கொண்டு போவது வழக்க மில்லை. அஃதேபோல் அக்காலத்திலே நம் நாட்டிற்கு வந்த ஆரியர்கள் தனியாக பெண்களின்றி வந்ததால் பிராமணத்தியும் முகத்தில் தோன்றினாள் என்று எழுத வழியில்லாமல் போய்விட்டது. நாம் பழைய சாத் திரங்களை ஆராய்ந்தால் ஆரியர்கள் பெண்களன்றி இந்நாட்டிற்கு வந்து இந்நாட்டுப் பெண்களை மணந்து கொண்டார்களென்பது நன்கு புலனாகும். எடுத்துக் காட்டாக வியாசமுனி மீன்வாணிச்சியினின்றும், கவுசிக முனி சூத்ரச்சியினின்றும், விசுவாமித்திரர் சண்டாளச்சியினின்றும், வசிஷ்டர் வேசியினின்றும், சக்கிலிச்சி வயிற்றில் சத்தியமுனியும், புலைச்சி வயிற்றில் பராசரமுனியும் பிறந்தததாக காணக்கிடக்கின்றது. இவர்களில் எவரும் பிராமணத்தியிடம் பிறக்கவில்லை யென்றாலும் பார்ப்பனர்களாக ஏன் அவர்களின் மேன்மை வாய்ந்த குருவாகவும் விளங்கியிருக் கின்றனர்? இந்நால்வகைச் சாதியாரும் ஒரே காலத்திலுற்பவித்திருக்க ஒரு ஜாதியார் குறையவும், மற்ற ஜாதியார் கூடியிருக்கவும் காரணமில்லை. சென்ற முறை எடுக்கப்பட்ட ஜனசங்கைக்  கணக்குப்படி 100க்கு ஒருவர் பிராமணராயும், மீதி 99 பேரும் சூத்திரரா யுமிருக்கின்றார்களே. பார்ப்பனர்களின் தற்கால சித்தாந்தப்படி கலியுகத்தில் சத்திரியரும், வைசியரும் கிடையாது. பிரம்மாவின் மூத்த புத்திரர்களும், அதிகப் பிரீதியுடைய வர்களும், பூசுரர்களுமான (பூலோக தேவர்களுமான) பார்ப்பனர்கள் மற்றைய ஜாதியார் களைவிட இத்துணை குறைவாகவும் சூத்திரர்கள் பல்கிப் பெருகி இருக்கவும் காரணந்தானென்னை? ஒரே ஜாதியான பார்ப்பனரிலே பல பிரிவினை களுண் டாகி ஒருவர் வீட்டில் ஒருவர் உணவருந்தமாட்டே னென மறுத்தலும் ஏதற்கு? பிரம்மதேவன் முகத்திலும், புஜத்திலும், தொடையிலும், பாதத்திலும் பிள்ளை உண்டாவதாகயிருந்தால் அவனுக்கு மனைவி எதற் கென்றும், ஆண்குறி எதற்கென்றும் கேள்விப்பிறக் கின்றது. எனவே பார்ப்பனர்கள் தங்கள் ஜாதியை உயர்த்தவே இத்தகைய கட்டுக்கதைகளுண்டு பண் ணியவர் என்பதை நிச்சயமாய் நாமறியலாம்.

- விடுதலை நாளேடு, 9.2.18

வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

50 வருட திராவிடக் கட்சிகளின் ஆட்சியில்

*ஒரு பொய்யை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தால்,அது ஒரு நாள் உண்மை என நம்பப்படும் என்பார்கள்,,,அப்படித்தான் தமிழ்நாட்டில் ஒரு பொய் பல வருடங்களாக சொல்லப்பட்டு வருகிறது,,,*

அது *"50 வருட திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாடு சீரழிந்துவிட்டது"* என்பது,,,

நாமும் எதைப்பற்றியும் சிந்திக்காமல், அதை ஆமோதித்துக் கொண்டு, நம்மை நாமே குறைவாக மதிப்பிட்டுக் கொண்டுள்ளோம் !!

கீழே உள்ள புள்ளி விவரங்களை கொஞ்சம் பாருங்கள் !!

*உயர்க்_கல்வி*

பள்ளி கல்வியை முடித்து, உயர் கல்வி (கல்லூரி) சேர்பவர்கள், இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் அதிகம். அகில இந்திய சராசரியைவிட இருமடங்கு அதிகம். தமிழ் நாடு - 38.2%. வட மாநிலங்கள் குஜராத் - 17.6%; மபி - 17.4%; உபி - 16.8%; ராஜஸ்தான் - 18.0%; இந்திய சராசரி : 20.4ரூ.

*கல்வி_நிலையங்களின்_தரம்*

2017 ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த நூறு கல்வி நிறுவனங்களின் ரேங்க் பட்டியலை மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை (HRD) வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலின் படி,

*முதல் 100 சிறந்த கல்லூரிகளில் 37 கல்லூரிகள் இருப்பது தமிழ் நாட்டில்,,,*

பிஜேபி பல ஆண்டுகளாக ஆளும் மோடியின் மாடல் மாநிலம் குஜராத்தில் இருபத்தோ வெறும் மூன்றுதான். இதேபோல ஹிந்தி பெல்ட் மாநிலங்களான மபி, உபி, பிகார், ராஜஸ்தான் போன்றவற்றிலிருந்து ஒன்றுகூட இந்த பட்டியலில் இடம் பிடிக்கவில்லை.

முதல் 100 சிறந்த பொறியியல் கல்லூரிகளில், தமிழ் நாடு - 22 ; குஜராத் - 5 ; மபி - 3 ; உபி - 6 ; பீகார் - 1 ; ராஜஸ்தான் - 3.

முதல் 100 சிறந்த பல்கலைகழகங்களில்

தமிழ் நாடு - 24 ; குஜராத் - 2 ; மபி - 0 ; உபி - 7 ;

பிகார் - 0 ; ராஜஸ்தான் - 4

*பொருளாதார_மொத்த_உற்பத்தி*(GDP)

இந்தியாவில் இருக்கும் 29 மாநிலங்களில், 20 மாநிலங்களின் ஒட்டுமொத்த ஜிடிபியை தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்கள் அளிக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து இப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பது #தமிழ்நாடு.

தமிழ் நாட்டின் வளர்ச்சி விகிதம் மற்ற தென் மாநிலங்களை விட அதிகமாக உள்ளது.

*தமிழகத்தின் மொத்த வருமானம், ஒட்டு மொத்த பாகிஸ்தான் நாட்டின் வருமானத்திற்கு சமம்*

ஒரு மாநிலத்தின் வருமானம் இந்தியாவிற்கே சவால் விடும் அண்டை நாட்டின் வருமானத்திற்கு நிகராக உள்ளதென்றால், அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும்.

தமிழ் நாடு - 18.80 lakh crore (2nd Place); வட மாநிலங்கள் குஜராத் - 10.94 lakh crore (5th Place ; மபி - 7.35 lakh crore (10 th Place) ; உபி - 12.37 lakh crore (4 th Place) ; ராஜஸ்தான் - 7.67 lakh crore (7 th Place) ; சத்தீஸ்கர் - 2.77 lakh crore (17 th Place)

*சாப்ட்வேர்_ஏற்றுமதி* (ஆயிரம் கோடியில்)

தமிழ் நாடு - 75,000 ; ் வட மாநிலங்கள் குஜராத் - 1917 ; மபி - 343 ; உபி - 13,740 ; ராஜஸ்தான் - 712; சத்தீஸ்கர் - 18

*சிசு_மரண_விகிதம்* 1000 பிறப்புக்கு

தமிழ் நாடு - 21 ; வட மாநிலங்கள் குஜராத் - 36 ; மபி - 54 ; உபி - 50 ; ராஜஸ்தான் -47 ; சத்தீஸ்கர் - 46 ; இந்திய சராசரி: 40

*ஒரு_லட்சம்_பிரசவத்தில்_தாய்_இறக்கும்_விகிதம்*

தமிழ் நாடு - 79 ; வட மாநிலங்கள் குஜராத் - 112 ; மபி - 221 ; உபி - 285; ராஜஸ்தான் - 244 ; சத்தீஸ்கர் - 221 ; இந்திய சராசரி : 167

*தடுப்பூசி_அளிக்கப்படும்_குழந்தைகள்_சதவீதம்*

தமிழ் நாடு - 86.7%; வட மாநிலங்கள் குஜராத் - 55.2%; மபி - 48.9%; உபி - 29.9%; ராஜஸ்தான் - 31.9%; சத்தீஸ்கர் - 54%; இந்திய சராசரி : 51.2%

*கல்வி_விகிதாசாரம்*

தமிழ் நாடு - 80.33%; ் வட மாநிலங்கள் குஜராத் - 79%; மபி - 70%; உபி - 69%; ராஜஸ்தான் - 67%; சத்தீஸ்கர் - 71%; இந்திய சராசரி : 74%

ஆண் - பெண் விகிதாசாரம் (ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு) இது குறைவாக இருந்தால், பெண் சிசு கொலை அதிகம் என்று பொருள்):-

தமிழ் நாடு - 943 ; வட மாநிலங்கள் குஜராத் - 890 ; மபி - 918 ; உபி - 902 ; ராஜஸ்தான் - 888 ; இந்திய சராசரி : 919

*தனி_நபர்_வருமானம்* (Per Capita Income) - ரூபாயில்

தமிழ் நாடு - 1,28,366 ; வட மாநிலங்கள் குஜராத் - 1,06,831; மபி - 59,770 ; உபி - 40,373 ; ராஜஸ்தான் - 65,974 ; சத்தீஸ்கர் - 64,442; இந்திய சராசரி : 93,293

தமிழ்நாடு அரசு மாநில வரி வருமானத்தில், இந்தியாவில் நான்காவது இடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் பெரும்பான்மையான இந்திய மாநிலங்களை ஒப்பிடுகையில் அதிகமாக உள்ளது.

*வீடுகளுக்கு_மின்சாரம்* (households having electricity)

தமிழ் நாடு - 98.3%; ் வட மாநிலங்கள் குஜராத் - 96%; மபி - 89.9%; உபி - 70.9%; ராஜஸ்தான் - 91%; சத்தீஸ்கர் - 95.6%

*மனித_வள_குறியீடு* (Human Development Index)

தமிழ் நாடு - 0.6663 ;  வட மாநிலங்கள் குஜராத் - 0.6164 ; மபி - 0.5567 ; உபி - 0.5415 ; ராஜஸ்தான் - 0.5768 ; சத்தீஸ்கர் - 0.358 ; இந்திய சராசரி : 0.6087

*ஏழ்மை_சதவீதம்* Poverty (% of people below poverty line)

தமிழ் நாடு - 11.28%; வட மாநிலங்கள் குஜராத் - 16.63%; மபி - 31.65%; உபி - 29.43%; ராஜஸ்தான் - 14.71%; சத்தீஸ்கர் - 39.93%; இந்திய சராசரி : 21.92%

*ஊட்டசத்து_குறைபாடு_குழந்தைகள்* (Malnutrition)

தமிழ் நாடு - 18%;  வட மாநிலங்கள் குஜராத் - 33.5%; மபி - 40%; உபி - 45%; ராஜஸ்தான் - 32%; சத்தீஸ்கர் - 35%; இந்திய சராசரி : 28%

*மருத்துவர்களின்_எண்ணிக்கை*(ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு)

தமிழ் நாடு - 149;  வட மாநிலங்கள் குஜராத் - 87; மபி - 41 ; உபி - 31; ராஜஸ்தான்-48 ; சத்தீஸ்கர்-23 ; இந்திய சராசரி:36

இன்னும் இது போல சொல்லிக் கொண்டே போகலாம்,,,,

உலக புகழ் பெற்ற பொருளாதார நிபுணரும்,நோபல் பரிசு வென்ற *அமெர்த்தியா சென்* அவர்கள் , தமிழ்நாட்டின் வளர்ச்சியை பற்றி இவ்வாறாக கூறுகிறார்,,,,

*தமிழ்நாட்டை_வடமாநிலங்களோடு_ஒப்பிடுவதே_தவறு #முன்னேறிய_நாடுகளோடு_தான்_ஒப்பிட_வேண்டும்*

இனி எவனாவது தமிழ்நாடு திராவிடக் கட்சிகளால் நாசமாய் போச்சு என்றால், வட மாநிலத்திற்கு போகும் அடுத்த ரயிலில் ஏற்றி அனுப்புங்கள்,,,,

திங்கள், 5 பிப்ரவரி, 2018

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நுழைவு

அட அண்டப்புளுகே!

வாயில் சாக்கடையைத் தவிர வேறு எதுவும் வரக்கூடாது என்பதில் திட்டவட்டமாக தனிக்காட்டு ராஜாவாக இருக்கக்கூடிய பிஜேபி அம்பி ஒருவர். சேலம் பட்டிமன்றத்தில் ஓர் அண்டப்புளுகை - ஆகாசப் புளுகை அள்ளி விட்டாரே பார்க்கலாம்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தாழ்த்தப் பட்டவர்களை நுழையச் செய்தவர் மதுரை வைத்திய நாதய்யர்தானாம். தாழ்த்தப்பட்டவர்கள் அக்கோயிலில் நுழைவதற்கு எதிராக ஈ.வெ.ரா. இருந்தார் என்பதுதான் அந்த அம்பியின் ஆலாபனம்.

உண்மை என்னவென்றால் 1922 ஆம் ஆண்டில் திருப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் நடந்தது என்ன? இதுபற்றி திரு.வி.க. அவர்கள் எழுதிய வாழ்க்கைக் குறிப்பு -2 பக்கம் 274இல் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

“திருப்பூரிலே வாசுதேவ அய்யர் தலைமையில் (1922) தமிழ்நாடு காங்கிரஸ் கூடிய போது நாடார் முதலியோர் கோயில் நுழைவைப் பற்றி இராமசாமி நாயக்கரால் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அவர் பெரும் புயலைக் கிளப்பினார். அத்தீர்மானம் என்னால் ஆதரிக்கப்பட்டது. அதை எதிர்த்தவர் மதுரை வைத்தியநாதய்யரும், கிருஷ்ணய்யங்காரும் ஆவர் என்று குறிப்பிட்டுள்ளாரே. அவர்தான் கோயில் நுழைவு போராட்டத்தை நடத்தினார். ஈ.வெ.ரா எதிர்த்தார் என்று வாய் நிறைய பொய் புழுக்களை தேக்கி அப்படியே பொலபொலவென்று கொட்டியுள்ளாரே!.

இந்த இடத்திலும் பார்ப்பனக்கூட்டத்திற்கு ரொம்பவே இனிக்கும் திருவாளர் இராஜகோபாலாச்சாரியாரை (ராஜாஜி) கொண்டு வந்து நிறுத்துவோம்.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் 8.7.1939 சனிக்கிழமை அன்று தாழ்த்தப்பட்ட வர்களுக்கு திறந்து விடப்பட்டது. இந்த நிகழ்ச்சியைப் பற்றி 30.7.1939 அன்று மதுரையில் பேசிய மாண்புமிகு முதல் அமைச்சர் (கனம்) சி.இராஜகோபாலாச்சாரியார்.

“இந்த வெற்றி காங்கிரசுடையது அல்ல; அல்லது ஒரு கட்சிக்கு கிடைத்த வெற்றி யுமல்ல. இது எல்லோருக்கும் கிடைத்த வெற்றியாகும். ஏனெனில் இவ்விஷ யத்தில் காங்கிரஸ்காரர்களும், சுயமரியாதைக்காரர்களும், ஜஸ்டிஸ்காரர்களும் “இன்னும் இதரர்களும் சேவை செய்திருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

இச்செய்தி 31.7.1939 நாளிட்ட ‘சுதேசமித்தரன்’ ஏட்டில் வெளிவந்தது. (விடுதலை, 1.8.1939) பாவம் எல்லா இடங்களிலும் பார்ப்பனர்களுக்கு தோல்வி மயம்தான்.

மதுரை ஏ.வைத்தியநாதய்யர் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டவரை அழைத்துச் சென்றார் என்று பிரச்சாரம் செய்கிறார்களே - சங்கதி என்ன தெரியுமா?

யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக இரவு நேர அர்த்தஜாம பூஜை முடிந்த பிறகு சில தாழ்த்தப்பட்ட தோழர்களை கோயிலுக்கு அழைத்துச் சென்றார் என்பதுதான் உண்மை.

அதற்குக் கூட உதவி செய்தவர் நீதிக்கட்சிக்காரரான ஆர்.எஸ். நாயுடுதான்.  அவர்தான் மதுரை மீனாட்சியம்மன் கோயில் நிர்வாக அதிகாரியாவார். அவரது அனுமதியின் காரணமாகத் தான் யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக  சில தாழ்த்தப்பட்ட தோழர்களை அழைத்துச் சென்ற வீராதி வீரர் தான் இந்த வைத்தியநாத அய்யர்.

இதில் ஒரு கூடுதல் தகவல் என்ன தெரியுமா?

தாழ்த்தப்பட்டவர்களைக் கோயிலுக்குள் அழைத்துச் சென்றதற்காகக் கோயில் கருவறையைப் பூட்டியும், மறுநாள் கோயிலுக்கு வராமல் இருந்த பட்டர்களை இடைநீக்கம் செய்தவரும், கோயில் நிருவாக அதிகாரியான அந்த நீதிக்கட்சிக்காரர்தான்!

- விடுதலை ஞாயிறு மலர்,20.1.18

பார்ப்பனர் தூண்டிவிட்ட கலகம்!

திருச்சிற்றம்பல முதலியார் என்ற சிவத்தொண்டர் திருத்துறைப் பூண்டி வந்தபோது அவ்வூர் மக்கள் அவரை அங்கேயே தங்கியிருக்கும்படி கேட்டுக் கொண்டனர். அவர் தங்கி இருப்பதற்காக குகை என்று அழைக்கப்பெற்ற மடம் ஒன்றை கட்டிக் கொடுத்தனர். அத்துடன் வெளியூர்களிலிருந்து அந்த மடத்திற்கு வருகிறவர்கள் அனைவரும் உணவு உண்பதற்கும் வசதி செய்து தரப்பட்டது. தமிழ் சைவத்துறவிகள் சோழ நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்த இது போன்ற குகைகளில் தங்கி இருந்து சிவத்தொண்டு ஆற்றி வந்தனர். விரதம், சீலம், ஞானம் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய தமிழ் சைவத் துறவிகளின் செல்வாக்கும் மேம்பாடும் வளர்ச்சியடைவதைக் கண்டு சோழப் பேரரசனுக்கு குருமார்களாக விளங்கியவர்களும், கோளகிமடம் பிட்சா விருத்தி மடம் முதலிய சைவாதீனங்களுக்கு தலைவர்களா

யிருந்தவர்களும் ஆகிய வடநாட்டு பிராமணர்கள், பொறாமை கொண்டு அவர்களுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்டனர். சைவ மடங் களுக்கு எதிராக மக்கள் கூட்டமாகச் சென்று தமிழ் சைவத் துறவிகள் வாழ்ந்த குகைகளை இடித்துத் தரைமட்டமாக்கினர். அங்கு இருந்த பொருட்களைச் சூறையாடினர். குகைகளுக்கான சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர். இவ்வாறு பிராமணர் அல்லாத சைவமடங்களுக்கு எதிராக பிராமணர்களால் தூண்டிவிடப்பட்ட இக்கலகம் மூன்றாம் குலோத்துங்கனின் 22ஆம் ஆட்சி ஆண்டில் நடைபெற்றது. திருத்துறைப்பூண்டியில் இக் கலகம் நடைபெற்ற இரண் டாண்டுகளுக்குப் பின் திருச்சிற்றம்பல முதலியார் இறந்துவிட்டார். அவருக்குப் பின் இருதயத்தேவன் என்பவர் மடத்தின் தலைவர் ஆனார்.

(முனைவர் அ.இராமசாமி அவர்களின்

“தமிழகப் பேரரசுகளின் சரிவும் வீழ்ச்சியும் (பக்கம் 218-219)

- விடுதலை ஞாயிறு மலர், 27.1.18

இரும்புப் பயன்பாட்டில் மட்டுமல்ல எல்லாவற்றிலும் தமிழர்களே முன்னோடி !- மஞ்சை வசந்தன்

  தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், அண்மையில் ஒரு முக்கியச் செய்தியை அறிவிக்கப் போவதாகக் கூறி அச்செய்தியையும் ஒரு நிகழ்வி...